என்ன தான் நெருங்கிய உறவானாலும் , நட்பானாலும் , வாழ்க்கையின் ஒரு
கட்டத்திற்கு மேல் அதை தொடர முடியாத நிலை ஏற்படலாம். அதை தொடர்வது நமது
வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்க்கையிலும் சிக்கல்
ஏற்படுத்தி, இரண்டு பக்கமும் வேதனை படுவதை விட, அந்த உறவுகளையும்,
நட்ப்பையும், அப்படியே விட்டு விட வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.
இந்த உறவும், நட்பும் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா என்று தவித்த காலங்கள் உண்டு. நமது முடிவால் அவர்கள் வருந்த போகிறார்கள் என்று நாம் வருந்தி கொண்டு இருந்தோம். கவலைகள் நம்மை காயபடுத்த நாமே காரணமாக இருந்தோம்.
யாருக்காகவும் காத்திருக்காத காலம் , நமது காயத்தை ஆற்றி விட்டு அதன் போக்கில் விரைந்து கொண்டு இருக்கிறது. நினைவுகளை நிறுத்தி பார்க்கையில், எங்குமே நிரந்தரம் இல்லா பந்தங்களே நின்று கொண்டு இருக்கின்றன
இந்த உறவும், நட்பும் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா என்று தவித்த காலங்கள் உண்டு. நமது முடிவால் அவர்கள் வருந்த போகிறார்கள் என்று நாம் வருந்தி கொண்டு இருந்தோம். கவலைகள் நம்மை காயபடுத்த நாமே காரணமாக இருந்தோம்.
யாருக்காகவும் காத்திருக்காத காலம் , நமது காயத்தை ஆற்றி விட்டு அதன் போக்கில் விரைந்து கொண்டு இருக்கிறது. நினைவுகளை நிறுத்தி பார்க்கையில், எங்குமே நிரந்தரம் இல்லா பந்தங்களே நின்று கொண்டு இருக்கின்றன