சில பிள்ளைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. மனைவியோ , கணவனோ
திருநெல்வேலியில் இருந்தால் கூட , எப்படியாவது வாரம் வாரம் விழுந்தடித்து
கொண்டு ஊருக்கு போய் பார்த்து விட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் தாய்
தந்தையர் வேறு ஊரில் இருந்தால் , மூன்று நான்கு , ஆறுமாதங்கள் ஆனாலும் போய்
பார்ப்பதில்லை. கேட்டால் ரயில் கிடைக்க வில்லை , பேருந்து கிடைக்க வில்லை
என்று சமதானம் சொல்கின்றனர் . மாதத்திற்கு ஒரு முறை கூட நம்மை பெற்றவர்களை
பார்ப்பதற்கு மார்க்கம் தெரியவில்லையா?
வேறு மனைவியும் , வேறு கணவனும் தேடி கொள்ளலாம், இன்னோர் பிள்ளை பெற்று கொள்ளலாம். எல்லா உறவுகளுக்கும் உலகத்தில் மாற்று உறவு உண்டு. தாய் தந்தையருக்கு மாற்று இந்த உலகில் எந்த மனிதரும் இல்லை. எங்கும் நிறையும் இறை கூட அந்த இடத்தை நிரப்ப முடியாது.
இன்று கை நிறைய சம்பாதிக்கும் திமிரில் ,அவர்கள் வாழ தெரியாமல் வாழ்ந்தார்கள் என்று பேசாதீர்கள். அவர்கள் அறிந்தே இருந்திராத பொருளாதார யுத்த களத்தில் அவர்கள் பட்ட காயம் அறியாமல் கருத்து சொல்லாதீர்கள். தோல்வியின் வலிகளை அறிந்ததால் தான் , நமக்கு வெற்றிகளின் வழிகளை காட்டி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சேர்த்த சொத்தே நீங்கள் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் இருக்கும் போதே அவர்களிடம் உரையாடி உங்கள் உள்ளத்தை அவர்களை பற்றிய நினைவுகளால் நிரப்பி கொள்ளுங்கள் . உலகமே நம்மை உதறி தள்ளினாலும் , நமக்கு என்று அறுதியாகவும் , இறுதியாகவும் ,உள்ள ஒரே உலகம் நம் பெற்றோர். தாய் தந்தையர் போனால் அந்த வெற்றிடம், வெறுமையானது, அது முடிவானது, எந்த சலனமற்றது. அங்கே நாம் பற்றி கொள்ள இனி யாரும் இல்லை
என் பிள்ளை என் பிள்ளை என்று நம்மை கொண்டாட இனி யாரும் இருக்க போவதில்லை. அவர்களை காண இயலாததிற்கு காரணத்தை சொல்லி , காலத்தை கடத்தாதீர்கள். காலம் யாருக்கும் காத்திருக்க போவதில்லை. முதுமை முழுதாக அவர்களை நம்மிடம் இருந்து பறித்து கொள்ளும் முன்னரே அவர்கள் முன் போய் நில்லுங்கள், கூட இருந்து மகிழுங்கள்.
அவர்கள் மறைந்தால், நாம் என்ன மற்றும் ஒருமுறை, அவர்களுக்கு பிள்ளைகளாவா பிறக்க போகின்றோம்?
வேறு மனைவியும் , வேறு கணவனும் தேடி கொள்ளலாம், இன்னோர் பிள்ளை பெற்று கொள்ளலாம். எல்லா உறவுகளுக்கும் உலகத்தில் மாற்று உறவு உண்டு. தாய் தந்தையருக்கு மாற்று இந்த உலகில் எந்த மனிதரும் இல்லை. எங்கும் நிறையும் இறை கூட அந்த இடத்தை நிரப்ப முடியாது.
இன்று கை நிறைய சம்பாதிக்கும் திமிரில் ,அவர்கள் வாழ தெரியாமல் வாழ்ந்தார்கள் என்று பேசாதீர்கள். அவர்கள் அறிந்தே இருந்திராத பொருளாதார யுத்த களத்தில் அவர்கள் பட்ட காயம் அறியாமல் கருத்து சொல்லாதீர்கள். தோல்வியின் வலிகளை அறிந்ததால் தான் , நமக்கு வெற்றிகளின் வழிகளை காட்டி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சேர்த்த சொத்தே நீங்கள் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் இருக்கும் போதே அவர்களிடம் உரையாடி உங்கள் உள்ளத்தை அவர்களை பற்றிய நினைவுகளால் நிரப்பி கொள்ளுங்கள் . உலகமே நம்மை உதறி தள்ளினாலும் , நமக்கு என்று அறுதியாகவும் , இறுதியாகவும் ,உள்ள ஒரே உலகம் நம் பெற்றோர். தாய் தந்தையர் போனால் அந்த வெற்றிடம், வெறுமையானது, அது முடிவானது, எந்த சலனமற்றது. அங்கே நாம் பற்றி கொள்ள இனி யாரும் இல்லை
என் பிள்ளை என் பிள்ளை என்று நம்மை கொண்டாட இனி யாரும் இருக்க போவதில்லை. அவர்களை காண இயலாததிற்கு காரணத்தை சொல்லி , காலத்தை கடத்தாதீர்கள். காலம் யாருக்கும் காத்திருக்க போவதில்லை. முதுமை முழுதாக அவர்களை நம்மிடம் இருந்து பறித்து கொள்ளும் முன்னரே அவர்கள் முன் போய் நில்லுங்கள், கூட இருந்து மகிழுங்கள்.
அவர்கள் மறைந்தால், நாம் என்ன மற்றும் ஒருமுறை, அவர்களுக்கு பிள்ளைகளாவா பிறக்க போகின்றோம்?