Saturday, February 18, 2017

போய் வாருங்கள் சசிகலா

போய் வாருங்கள் சசி. உங்கள் எதிரி யார் என்று உங்களுக்குள் வினவி கொள்ளுங்கள், உங்கள் விழி "பிம்பத்தில்" நீங்களே விடையாகி தெரிவீர்கள்.
சிறு நரி ஒரு போதும் சிங்கமாகாது என்பதை சிறை இனி சொல்லும்.
சதி செய்தார் சசி என சரித்தரம் இகலும்.
எம்ஜிரையும் ஜெயா வையும் வரலாறு "வாழ்ந்தவர்கள்" என்று சொல்லும்.
உங்களை "வீழ்ந்தவர்" என்று சொல்லும்.

விண்வெளியில் மீண்டும் ஒரு வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது

"Isro's PSLV successfully places a record 104 satellites into polar sun synchronous orbit"
விண்வெளியில் மீண்டும் ஒரு வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. அற்புதம் , ஆனால் இது இந்தியாவிற்கு ஆச்சரியத்தக்க விஷயம் அல்ல. அண்டத்தை பற்றிய இந்தியாவின் அறிவானது இந்தியாவின் ஆன்மாவில் இருந்து வந்து இருக்கிறது. அறிவியலும் ஆன்மிகமும் இந்த தேசத்திற்கு புதிது அல்ல. அதை பற்றிய கதைகள் பாரத தேசத்தின் பாதை முழுதும் பயணித்து வந்து இருக்கிறது.
மேலை நாடுகளின் செயற்கை கோள்கள் சென்று பார்க்கும் முன்னரே, இந்தியா தன் ஆன்மிக அறிவால் அதை பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே அறிந்து வைத்து இருந்தது.
இஸ்ரோவின் ராக்கெட் சுமந்து சென்றது செயற்கை கோள்களை அல்ல, அது இந்தியர்களின் செயற்திறன் பற்றிய நம்பிக்கையை.
கீழை தேசம் என்று ஒரு காலத்தில் மற்ற மேலை தேசத்தால் பேசப்பட்ட தேசம், மேலை தேசத்தின் செயற்கை கோள்களை மேல் எடுத்து கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.
இது யாருக்கும் சளைத்த தேசம் அல்ல, இது சாதனைகள் புரியும் தேசம்.
இந்தியாவின் இஸ்ரோ ஒரு சரித்தரத்தை செதுக்கி இருக்கிறது. இன்னும் செதுக்கும்....
"Isro's PSLV successfully places a record 104 satellites into polar sun synchronous orbit. Satellites include India's earth observation satellite Cartosat-2series and 101 foreign nano satellites from the US, Israel, UAE, Netherlands, Kazakhstan and Switzerland."
Isro's workhorse PSLV will carry a record 104 satellites in a single mission today from the space centre at Sriharikota Andhra Pradesh.
TIMESOFINDIA.INDIATIMES.COM

புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன், தந்தி டிவி- பாண்டே.

புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன், தந்தி டிவி- பாண்டே. இவர்கள் எல்லாருமே மிக தெளிவாக ஒரு அரசியல் சார்பு நிலையில் இருந்து பேசுபவர்கள். ஆனால் பாண்டே மட்டும் அதிக அளவில் விமர்சனம் செய்யபடுகிறார். நன்றாக கவனியுங்கள் , திராவிட கூட்டமும், பகுத்தறிவு கூட்டமும் , சிறுபான்மையில் பெரும்பான்மை கூட்டமும், பாண்டேவை தான் அதிக அளவில் குறி வைத்து விமர்சனம் செய்வார்கள். ஏன் என்றால் மற்றவர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள். மிக தெளிவாக ஹிந்து மதம், அதை ஆதரிப்பவர்கள், அதை ஆதரிக்கும் கட்சியை தான் இவர்கள் விவாதத்தில் கடுமையாக தாக்குவார்கள். பதில் சொன்னாலும் விடாமல் பல குறுக்கு கேள்விகளை கேட்பார்கள். ஆனால் திராவிட கூட்டதையும் , பகுத்தறிவு கூட்டத்தையும் சிறுபான்மை கூட்டத்தையும் , விவாதத்தில் ஒரு போதும் எதிர் கேள்வி கேக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு பதில் சொன்னால் உடனே ஏற்று கொள்வார்கள், குறுக்கு கேள்விகள் வராது.
ஆனால் முதன் முதலாக பாண்டே தான் திராவிட கூட்டதையும் , பகுத்தறிவு கூட்டத்தையும் சிறுபான்மை கூட்டத்தையும் எதிர் கேள்வி கேட்டார். பதில் சொன்னாலும் விடாமல் குறுக்கு கேள்விகள் கேட்டார். ஹிந்து கடவுள்களை விவாத்தில் மட்டம் தட்டும் போது கடுமையாக அதை எதிர்த்தார். மற்ற மத கடவுள்களை விமர்சிப்பதையும் அவர் எதிர்த்தார் என்பதும் கவனிக்க வேண்டியது. அது இவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை. ஏன் என்றால் இடது சாரி தத்துவத்திற்கு எதிராக எழும் குரலை ஊடகம் இது வரை அனுமதித்து இல்லை. ஜனநாயகத்தில் இடது சாரி குரலும், வலது சாரி குரலும் ஒலிக்க வேண்டும். அது தான் சம உரிமை. பாண்டே, தான் கடவுளை நம்புவன் என்பதை மறுக்காமல் ஒத்து கொண்டார்.
சசிகலாவை ஆதரிக்கும் மனியனிடம் அவர் கேட்ட எதிர் கேள்வி அளவிற்கு கூட வேறு எந்த புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன் கேக்க வில்லை. மாறாக ஆளநர் ஏன் தாமதப்படுத்துகிறார் என்ற குறுக்கு கேள்வியைத்தான் அவர்கள் விடாமல் திருப்பி திருப்பி கேட்டு கொண்டு இருநதார்கள். மக்கள் சசிகலாவை விரும்ப வில்லை என்று தெளிவாக தெரிந்து இருந்தும், அதை பற்றி அழுத்தி பேச யாரும் தயாரக இல்லை.
இடது சாரி கூட்டம் எப்போதும் தன் கொள்கையை ஒட்டி தான் மக்கள் எண்ணத்தை திசை திருப்ப முயலும். அதை தான் இப்போதும் இந்த இடதுசாரி ஊடக குழு சசிகலா விஷ்யத்தில் செய்து கொண்டு இருக்கிறது.
LikeShow more reactions
Comment

கை குழந்தையில் இருந்து, வயது முதிர்ந்த பாட்டி வரை, பெண் என்ற இனத்தின் மீது நடத்தப்படும் வல்லுறுவுகள் வேதனையை தருகின்றன

கை குழந்தையில் இருந்து, வயது முதிர்ந்த பாட்டி வரை, பெண் என்ற இனத்தின் மீது நடத்தப்படும் வல்லுறுவுகள் வேதனையை தருகின்றன. அரக்க ஆண்களின் ஆண்மையற்ற காமத்திற்கு , கள பலியாக விழுகின்றன வீதியில் விளையாடும் சின்னம் சிறு பெண் குழந்தைகள்.
பெண்கள் வயது வந்தாலே வெளியே போக ஆயிரம் கட்டுப்பாடு இன்னும் இந்த தேசத்தில் உண்டு. தன் விழியாலே தனது உடம்பை உரித்து உண்ணும் , கழுகுகளிடம் இருந்து தப்பி தினமும் வீடு வந்து சேர்வதே ,மங்கையற்கு ஒரு மாபெரும் சோதனை.
ஆணை பற்றிய அச்சம் அற்று பெண் பிள்ளை ஆடி பாடி திரிவது அவள் பிள்ளை பருவத்தில் தான். அதுவும் இனி பெண் பிள்ளைகளுக்கு இருக்க போவதில்லை போலும்.
பெண்ணாக வாழ்வதே ஒரு பெண்ணிற்கு இங்கே போராட்டம் என்று மாறி போனால, பெண்களும், அவர்களை பெற்றவர்களும் என்ன தான் செய்வார்கள் இந்த சமூகத்தில்.
இந்த மாதிரி மிருகத்தை, வெட்டி கொல்ல வேண்டும் இல்லை அறுத்து எறிய வேண்டும்...

உண்மை, முன்னுரை எழுதிய இறை, நமக்கான முடிவுரையும் எழுதும்.



உண்மை, முன்னுரை எழுதிய இறை, நமக்கான முடிவுரையும் எழுதும். வார்த்தைகளுக்குள் சிக்கி வதைபடும் வாழ்க்கையானது விதி. விதியை வெல்லும் வழி மதியாம். மதியே மயங்கி சரிந்து அந்த முக்கண்ணன் முன் மண்டி இட்டு விட்டது. மனதை சட்டென்று ஒரு நாள் ஈசன் பிடித்து இழுத்து போது தான் தெரிந்தது , உள்ளத்தில் வேறு யாரோ உறைந்து கொண்டு இருந்தார்கள் என்று. உதறி தள்ள முயன்று போது தான் உண்மை உறைத்தது. உதிரம் எங்கும் உலவுவது அவனே .
நெடுந்தூர பயணத்தில் அவனே வழிகாட்டி. பயணத்தின் ஒரு பகுதியாக, பூமி வழியாக நம்மை கூட்டி கொண்டு போகின்றான். தாய் தந்தை, உடன் பிறந்தவர், மனைவி, பிள்ளை எல்லாம் பூமியில் நமது சக பயணி , நாமும் அவர்களுக்கு அப்படி தான். பூமியை தாண்டி தொடர்ந்து போகும் தொலைதூர பயணம் உள்ளது, அது முடிவற்றது. ஆக மதி சரிந்தது சதி அல்ல, அதுவே விதி. அடடே பூமி பிடித்து இருக்கிறதே என்று புத்தி யோசித்த போது, ஈசன் நம் இதயத்தை பிளந்தான். இருப்பை காட்டினான். யாத்திரை இன்னும் இருக்கிறது என்று சுட்டி காட்டினான். பற்று அற்ற அந்த பெருமகன் நம்மை பற்றிக் கொண்டான், பயணத்தின் முதலும் அவனே, முடிவும் அவனே, பாதையும் அவனே, பாதுகாவலனும் அவனே.

Image may contain: text

பன்னீர், சசிகலாவிற்கு எதிராக உண்மையை பேசி விட்டார். அடுத்தது என்ன?

பன்னீர், சசிகலாவிற்கு எதிராக உண்மையை பேசி விட்டார். அடுத்தது என்ன? பன்னீர் மக்கள் செல்வாக்கு பெற்று இருக்கிறார். எந்த மக்கள் ?
அந்த மக்கள் அதிமுக வை விரும்பும் உண்மையான மக்கள். திமுக கூட்டம் , அதிமுக வின் வீழ்ச்சியை தான் விரும்புவர். எல்லா தனி தமிழ் நாட்டு பிரிவினை குழுவும், திராவிட பகுத்தறிவு குழுவும், சிறுபான்மையினரின் பெரும்பான்மை மக்களும், திமுக வருவதை தான் விரும்பும். அதிமுக வின் குழப்பத்தை அவர்கள் ரசிப்பார்கள்.
சசிகலா உள்ளே போனாலும், அதிமுக எம் எல் க்கள், இன்னோருவரை தேர்ந்தெடுத்து ஆட்சியை தொடர்வார்கள். அடுத்த நான்கு வருடம் தங்களுக்கு அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வீண் செய்ய மாட்டார்கள்.
பன்னீர் செல்வம் பின் நிறைய எம் ஏல்க்கள் உடனடியாக வந்தால் தான் பன்னீர் பிரகாசிக்க முடியும் இப்போது உள்ள நிலைமையில் . மக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது. ஆனால் உடனடி தேர்தல் வந்தால், அவர் நிற்க வைக்கும் நபர்களுக்கு ஜெயிக்கும் வல்லமை இருக்க வேண்டும். அவர் மட்டும் தான் ஜெயிப்பார். ஜெயாவாலும் , கருணாநிதியாலுமே 234 தொகுதிகளை வெல்ல முடிய வில்லை.
தனி கட்சி தொடங்கவும், நடத்தவும் நிதி தேவை. நான்கு வருடங்கள் இதே மக்கள் ஆதரவை அவர் எடுத்து செல்ல சென்று தேர்தலை சந்திக்க வேண்டும். தனியாக நின்றால் அவருக்கு முன் சாத்தியமற்ற சாத்திய கூறுகளே சவாலாக நிற்கிறது.
பிஜேபி என்ன செய்யும் என்று சொல்ல முடிய வில்லை. முடிந்த வரை சசிகலா முதல்வராவதை கவர்னர் மூலம் அது தாமதித்து ஒரு வகையில் தமிழர்களின் முதல் அமைச்சர் நாற்காலியின் கௌரவத்தை காப்பாற்றி வருகிறது. ஆனால் எவ்வளவு நாள் செய்யும் என்று சொல்ல முடியாது, அரசியல் சட்டம் அனுமதிக்கும் வரையில் தான் அது இதை செய்யும்.
சசிகலாவை மிரட்டும் என்று சொல்ல முடிய வில்லை. மாநிலங்களவையில் எம்பிக்கள் அதரவு அவர்களுக்கு தேவை. வருமான வரி துறை வைத்து அதிமுக எம் ஏல்க்களை மிரட்டி பன்னீர் பக்கம் கொண்டு போகும் என்று என்னால் கருத வில்லை. மோடி அதை செய்யும் ஆள் இல்லை. அதுவும் இல்லாமல், தமிழக மக்களை நம்பி பிஜேபி எந்த செயலிலும் இறங்காது. இறங்கவும் கூடாது. நம் மக்கள் கூசாமல் பிஜேபிக்கு எதிராக திரும்பி விடுவார்கள். அது மட்டும் அல்ல பிஜேபியும் எதிர்கால நோக்கில் அதிமுக தேய்வதை தான் விரும்பும். தற்போது தார்மீக ஆதரவை அது பன்னீர்ருக்கு அளித்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசும், மக்களும் பக்க பலமாக உள்ளனர் இப்போது.
பன்னீரை பிஜேபி கண்டிப்பாக பாதுகாக்கும் ஏன் என்றால் சசி குழுவை பற்றிய பல உண்மைகள் தெரிந்தவர் அவர். ஆனால் அரசியல் ரீதியான பாதுகாப்பு அவருக்கு எப்படி தொடர்ந்து கிடைக்கும் என்பதை பொறுத்து தான் அவரின் அரசியல் வாழ்வு இருக்கிறது.
அதிமுகவிற்கு நல்ல பண்புள்ள தலைவர் கிடைத்து உள்ளார். ஆனால் மக்களுக்கு நல்ல தலைவர் கிடைத்து விட்டார் என்று சொல்ல முடிய வில்லை. அவரை பற்றிய அரசியல் நாம் இன்னுமும் முழுதாக அறிய வில்லை.
அறியபடாத அந்த அரசியல் புத்தகத்திற்கு கடைசி அத்தியாயம் இருந்தாக எந்த காலத்திலும் ஆதாரமும் இல்லை

இரட்டை இலையின் இரண்டாவது இலை உதிர்ந்த பிறகும், தண்டு மீண்டும் துளிர்க்கிறது போலும்.

எல்லா தலை முறையும் ,எல்லா அரசியல் வாதியும் பன்னிரின் இன்றைய பேச்சில கவனிக்க வேண்டிய விஷயம். கோபம் இல்லை, கடினமான வார்த்தை இல்லை. இரண்டு அர்த்தம் சொல்லும் வார்த்தை இல்லை. நிதானமாக சிரித்து முகத்துடன் தன் நிலை என்பதை முன் வைத்தார்.
முக்கியமாக கடற்கரையில் கூடி,வயதிற்கு கூட மரியாதை தெரியாமல் , பன்னீரை பச்சையாக பேசி திரிந்த வீர தமிழர்களும் தமிழச்சிகளும், அதை பெருமையாக கொண்டாடிய கூட்டமும், இதை உணர வேண்டும். இது தான் பண்பாடு என்று.
அதிரடியில் அம்மா அரசண்டார். பன்னிர் பக்குவபட்ட பேச்சில் பரிமளிக்கிறார்..
இரட்டை இலையின் இரண்டாவது இலை உதிர்ந்த பிறகும், தண்டு மீண்டும் துளிர்க்கிறது போலும்.
பார்ப்போம்...அது தழைக்கிறதா என்று..

உண்மையில பன்னீரை பார்த்தால் வேதனையாக இருக்கிறது



உண்மையில இவரை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இதே கடற்கரையில் எவ்வளவு கொச்சையாக சிறிது நாட்கள் முன் இந்த மனிதரை விமர்சித்து கோஷம் எழுப்பினார்கள். அன்று அப்படி செய்யாதீர்கள் என்று சொல்ல யாரும் துணிய வில்லை. அதை பற்றி கேட்ட போது கூட சிரித்து கொண்டே கடந்து போனார். இந்த துக்கமும் கடந்து போகும்.
அரச பதவியை தந்து அழகு பார்த்த அம்மை, அவர் தேடும் அமைதியையும் அமரர் ஆன அந்த அம்மையார் தரட்டும்.

Image may contain: one or more people

ஈசன் என் தந்தையானான், அவன் சரி பாதி என் தாயானாள்.

தந்தி டீவி க்கு நன்றி, சமயப்புரம் மாரியம்மன் கும்பாபிஷேகம் நேரடியான ஒளிபரப்பு பார்க்க நேர்ந்தது இன்று காலையில். சிறு வயதில இருந்து அடிக்கடி தாயாரால் அழைத்து செல்லப்பட்ட கோவிலில் இதுவும் ஒன்று . மிரண்டு மருண்டு மாரியம்மன் முன் நின்று வேகமாக வெளியேறி போனதுதான் அடிக்கடி நிகழ்ந்தது. ஏன் என்றால் தவறுகள் செய்தால் கடுமையாக இந்த அம்மன் தண்டிக்கும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அம்மனும் அசரடிக்கும் அளவிற்கு அச்சத்தை தந்ததது.நாம் செய்வது தவறா அல்லது தப்பா என்று தடுமாறி கொண்டு இருந்த பள்ளி பருவம் அது. மெல்ல இந்த கோவில் போவது நின்றது.
ஈசன் மீது ஈர்ப்பு அதிகமாகி, மனம் ஒரு நேர் சிந்தனையில் வந்து நின்ற போது, இந்த கோவில் போனேன் 2009ம் ஆண்டு. இந்த முறை பயம் இல்லை, பதட்டம் இல்லை. மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பார்க்க பார்க்க பரவசம் தான் வந்தது. செய்தது தவறு என்றால் தயங்காமல் தாயே என்னை தண்டித்து விடு என்று வேண்டும் அளவிற்கு தைரியம் வந்தது. அசரடித்த அன்னை , உள்ளே அதிர வைத்தாள், அழ வைத்தாள். இன்று வரை ,எங்கே மாரியம்மன் பாடல் கேட்டாலும் சட்டென்று சிந்தனை சமுயபுரத்தாளிடம் சரண் அடைந்து விடுகிறது.
ஈசன் என் தந்தையானான், அவன் சரி பாதி என் தாயானாள்.

நந்தினிகளை பற்றிய செய்திகள் நிற்க போவதில்லை

பெண் என்ற ஒற்றை சொல்லில் வரும் பெண்களின் மேல் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசாமல் தலித் பெண், பிராமன பெண், செட்டியார் பெண்.. சேட்டு பெண் என்று எதாவது அடையாளத்தை வைத்து தான் எப்போதும் பெண்ணை மீடியா பார்த்து இருக்கிறது. உற்று நோக்கினால், எல்லா வித பெண்களுமே இங்கே வீழ்த்தப்பட்டு இருக்கின்றனர். பெண் என்ற ஒற்றை சக்தியில், பெண்கள் தங்களுக்குள் இணையாமல் பெண்களால் தன் மீதும் ஏவப்படும் கொடுமையில் இருந்து விடுபட முடியாது. அப்படி அவர்கள் இணைய கூடாது என்பதற்காக தான் , தனி தனியாக அடையாள படுத்துகின்றனர். சுவாதி ஒரு பிரமாண பெண் என்பதற்காக , ஆண்ட பரம்பரை வாயில் விழுந்த வெட்டு என்று சமூகவளைத் தளத்தில் பதிவுகள் பரவி மகிழ்ந்தன. நந்தினி ஒரு தலித் பெண் என்பதால், தலித் மீதான வெறுப்பை உமிழ இப்போது பதிவுகள் வருகின்றன
என்னை பொறுத்தவரை வரை, அரசாங்கம் யாராக இருந்தாலும் , குற்றவாளி மீது கடுமையான தண்டனை எடுக்கப்பட்டு , இன்னோர் பெண்ணிற்கு இது நிகழாத வண்ணம் பயம் ஆண்கள் மத்தியில் வர வேண்டும், பெண்கள் மனதில் பயம் போக செய்ய வேண்டும்.
.
சுவாதி , நந்தினி, ஜிஷா, நிர்பயா எல்லார்மே ஆண் என்ற ஆதிக்க அரக்கனின் கையில் சிக்கி சிதைந்த பெண் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் உண்மை. வேதனையான விஷயம் பெரும்பாலான பெண்களே இதை உணர வில்லை. அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதா, மம்தா , இந்திரா காந்தி , சோதிமணி , சசிகலா, தமிழிசை , ஸ்மிருதி இரானி, விஜயதாரணி மீதான தனி நபர் தாக்குதல்களை பெண்களில் பலர் ஆதரித்தனர். அவர்களை பற்றிய அரசியல் சார்ந்த விமர்சனத்தை வைக்காமல் ,அவர்கள் உருவம் , தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விஷயத்தை பற்றி தான் விமர்சனம் வந்தது. கண்டிக்க பலர் மறந்தனர் அல்லது கண்டு கொள்ளாத மாதிரி இருந்தனர். அதை படித்து சிரித்தனர். என்றாவது ஒரு நாள் அது தன் மேலும் நடக்கும் என்பதை பல பெண்கள் அறியாமல் இருந்தனர்.
பெண்கள் எப்போது எல்லா வித வேறுபாட்டையும் கலந்து ஒன்றாக ஒரு புள்ளியில் குவிய தொடங்குகிறார்களோ அப்போது தான் பெண்களால், தன் சக பெண்கள் மீதான ஆண்களின் தொடர் வன்முறையை வீழ்த்த முடியும்.
அது வரை நந்தினிகளை பற்றிய செய்திகள் நிற்க போவதில்லை
Like
Comment

போராட்டத்தை முடிக்க கூடாது என்பதற்காக பொய்யான செய்திகளை பரப்பி

போராட்டத்தை முடிக்க கூடாது என்பதற்காக பொய்யான செய்திகளை பரப்பி ,பிரிவினை கருத்தை ஆதரித்து என்று சமூக வலைத்தளதில் எழுதி கலவரத்திற்கு தூபம் போட்டதில் பல வெளிநாட்டு இந்தியர்களுக்கும் பங்கு உண்டே, அவர்களை என்ன செய்ய போவீர்கள் என்று சில நாட்களுக்கு முன் ஒரு காவல் துறை அன்பரிடம் கேட்டேன். அப்படிப்பட்ட நபர்களின் facebook, twister பதிவுகளை எடுத்து அந்த நபர்களது என்பதை உறுதி செய்த பின்பு , அந்த நபர்கள் வாழும் நாடுகளுளின் , குடி உரிமை அதிகாரிகளுக்கு, இந்த பதிவுகள் ஈமெயில் அனுப்பட்டு, அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இது இப்போது இல்லை, சமூக வலைத்தளம் பயன்பாடு வந்ததில் இருந்தே நடைமுறையில் உள்ளது . வெளி நாட்டில் இருந்து கொண்டு ஐ.ஸ்.ஐ.ஸ் க்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு திரட்டிய நபர்கள் இப்படி தான் கைது செய்யப்பட்டனர். இனிமேல் சமூக வலைத்தளம் அதிகமாக கண்காணிக்க படும் வாய்ப்புக்கள் அதிகமாகலாம் என்றார்.

அரசாங்கம் செய்ய வேண்டியது என்று இல்லை, நீங்களே அந்த அந்த நாடுகளின் குடியுரிமை இணையதளத்தில் சென்று ஈமெயில் கண்டறிந்து , உங்கள் கவனத்திற்கு வரும் நபர்களை பற்றி தகவல் அனுப்பலாம் என்றார். நாம எங்கே அனுப்பறது , நாம தான் அந்த மாதிரி நபர்கள் எல்லாரையும் unfriend செய்து விட்டோமே.அது இல்லாமா எது போலி , எது உண்மையான ID என்று எப்படி நமக்கு தெரியும்.

PuthiyaThalaimurai TV இயல்பாக ஒரு பிஜேபி எதிர்ப்பு தொலைகாட்சி என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா

PuthiyaThalaimurai TV இயல்பாக ஒரு பிஜேபி எதிர்ப்பு தொலைகாட்சி என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா. இவர்கள் நடத்தும் விவாதம் ஒரு தலை பட்சமாக தானே இருக்கும். இவர்கள் வெளியீடும் செய்திகளும் உண்மையை மாற்றி பிஜேபி க்கு எதிரானதாக தானே இருக்கும். இந்த டிவியின் விவாத நிகழ்சிக்கு பிஜேபியினர் போக வேண்டுமா. பிஜேபியினர் சிந்திக்க வேண்டும்,.

இன்று காந்தி கொல்லப்பட்ட தினம். ஜனவரி 30

இன்று காந்தி கொல்லப்பட்ட தினம். என்ன விதமான சமாதானம் சொன்னாலும், இவர் எல்லா சுதந்திர களத்தையும் ஒன்றிணைத்து , அதன் பிரதான தளபதியாக முன் இருந்தார். தனது சுதந்திர போராட்ட தோழர்கள் மூலமும் , தனது சொந்த மகன் மூலம் கடும் நெருக்கடிகளையும் சந்தித்தாலும், சுதந்திர இந்தியா என்ற தாகத்தை தணிக்கும் , ஒற்றை நோக்கில் நோக்கி தள்ளாத வயதிலும் தளராமல் பயணித்தார்.
இவரை பற்றி எனக்கு முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும் , இவரை என்னால் தேச தந்தை என்று கொள்ள முடியாவிட்டாலும், இவரை எனக்கு பிடித்து இருக்கவும் , இவரை மறுக்காமல் இருக்க ஒரே காரணம், தாய் தேசத்தை நேசித்தலை மன பூர்வமாக செய்தார். ஆயிரம் பிரச்சினைகள் நமக்கு இருந்தாலும், தேசத்தின் பிள்ளைகள் , தனது தாய் தேசத்திற்கான தவிப்பை உதிரத்தில் உரமிட்டு எப்போது வைத்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவர்.
காந்தி பற்றிய காலசக்கரம் என்றும் கடந்த காலத்தோடு முடிவது இல்லை, அது எதிர் காலத்திலும் சுழன்று கொண்டு தான் இருக்கும்.
ஏன் எனில் காந்திகள் காலவதியாவது இல்லை.

உத்திரபிரதேச பிஜேபி தேர்தல் அறிக்கையை வைத்து மீண்டும் மீடியாவும் , சமூக வலைத்தளமும்

உத்திரபிரதேச பிஜேபி தேர்தல் அறிக்கையை வைத்து மீண்டும் மீடியாவும் , சமூக வலைத்தளம் வார்த்தை விளையாட்டு செய்து மீண்டும் பிஜேபியை குறி வைக்கிறது.
தந்தி டிவி அசோக வர்த்தினி எவ்வளவு தெளிவாக அச்சு அசல் நிகழ்ச்சியில் வார்த்தையை மாற்றி பேசுகிறார் பாருங்கள், ராமர் கோவில் கட்டுவதை பற்றி சொல்லும் போது “சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டுவோம்” என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்து விட்டார். நல்ல வேளை சுமன், அசோக வர்த்தினி வார்த்தையை சரியாக திருத்தி சொல்கிறார். அசோக வர்த்தினி ஆயுத எழுத்து நிகழ்ச்சியிலும் இதே உத்தியை தான் எப்போதும் கடைப்பிடிக்கிறார். ஆனால் எத்தனை பேர் சுமன் மாதிரி சரியாக திருத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பிக்கிறது பிஜேபியை பற்றிய பொய்யான செய்திகள்.
ஒரு வார்த்தையை மறைத்து விட்டால், எவ்வளவு அர்த்தம் வருகிறது என்பது இன்னும் தமிழக பிஜேபியில் சில பேருக்கு புரிய வில்லை. நிர்மலா சீதாராமன் ஊடகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்று கவனியுங்கள். “ஊடகம் என்ன தவறான வார்த்தையை பயன்படுத்துகிறது என்பதை கவனமாக கவனித்து, அதற்கு அந்த இடத்திலே பதில் அடி கொடுத்து, அதே இடத்தில அந்த தவறான வார்த்தையை வலுவிழக்கச் செய்கிறார்”
அப்புறம் இந்த திராவிட போராளிகளுக்கு , உத்திர பிரதேச தற்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தான் முதலில் இலவச லேப்டாப் வாக்குறுதி அளித்தார். எதை பின்பற்றி ? ஹிந்து மதத்திடம் மட்டும் நாத்திகம் பேசும் பகுத்தறிவு கூட்டத்தின் பறவை கூடான தி மு க தான் முதன் முதலில் இலவசம் ஆரம்பித்து மக்களை சீரழித்தது என்பது உலகம் அறிந்த செய்தி. அதனால் திராவிட கூட்டம் ரொம்ப பொங்க வேண்டாம்,
No automatic alt text available.

நேற்று இரவு பைக் சர்வீஸ் விடுவதற்கு விசாரிக்க சென்றே

நேற்று இரவு பைக் சர்வீஸ் விடுவதற்கு விசாரிக்க சென்றேன், அப்போது தகவல் தொழில்நுட்ப இளைநர்கள் இரண்டு பெரும் அங்கே வந்து இருந்தனர். இரண்டு பெரும் எரிச்சல் மற்றும் வருத்ததுடன் தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர். என்னவென்று விசாரித்தேன். விஷயம் இது தான். மேலாளரின் அறிவுரையையும் மீறி உணர்ச்சி வசப்பட்டு , போராட்டம் என்று தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பவுதும் , தொடர் விடுமுறை எடுத்து இருக்கிறார்கள்.
விளைவு இவர்கள் குழு செய்த அலுவலக வேலைகள், ஹைதராபாத் கிளைக்கும், பெங்களூர் கிளைக்கும் அனுப்பட்டு உள்ளன. இப்போது புதிய வேலைகளும் அங்கே தான் பெருமளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று நாட்கள் இவர்கள் குழுவிற்கு பில்லிங் பண்ணும் அளவிற்கு வேலைகள் தரப்பட வில்லை என்பதால் கலக்கத்தில் உள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது, அவரின் மேலாளர் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
“அந்த ஆளு அப்பவே சொன்னார் டா, சென்னை மாறி பெரு நகரத்தில் இத்தகைய நீண்ட போராட்டம் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும், ஒரு கட்டத்தில் இது முடிவு அடைய வேண்டும், தொடர்ந்தால் எல்லாரும் பாதிக்கபடுவார்கள், நாம தாண்டா யோசிக்கல”. இது தான் அந்த இளைஞர்கள் கடைசியாக சொன்ன வார்த்தை.
உண்மை இது தான் பல பேரால் சொல்லப்பட்டது, ஆனால் தான் சரியாக வேலைக்கு போய் கொண்டு , அவசர சட்டம் வந்த பிறகும், இளைஞர்களை விடாதே போராடு என்ற பல பெண்களும், ஆண்களும் தூண்டி விட்டனர்.
சில பேருக்கு பட்டால் தான் புத்தி வரும் போல.

தமிழகத்தில் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ரயிலை கவிழ்ப்பதற்கு பல முறை முயற்சி செய்தார்கள்.



தமிழகத்தில் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ரயிலை கவிழ்ப்பதற்கு பல முறை முயற்சி செய்தார்கள். பல முறை செய்திகள் வந்தன.ரயில்வே காவல்துறை மற்றும் உள்ளூர் காவல் படையின் தொடர் கண்காணிப்பாலும், அது தொடர்ந்து முறியடிக்க பட்டு வருகிறது. ஒரு காலத்தில் தருமபுரி நக்சல் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நக்சல் சிறப்பு படை உருவாக்கப்பட்டு அதன் மூலம் நக்சல்கள் அழிக்க பட்டனர். இப்போது சல்லிக்கட்டு போராட்டத்திலும் அவர்கள் ஊடுருவி இருப்பார்கள் என சந்தேகிக்கபடுகிறது.
நடந்த சல்லிகட்டு போராட்ட கலவரத்தில் மாணவர்கள் மீது குற்றம் இல்லை என அனைத்து தரப்பிலும் ஒத்து கொள்ள பட்ட பிறகும், மாணவர்கள் பற்றி பேசி பேசி , காவல்துறையை மட்டும் குற்றம் சாட்டி , மற்ற தேச விரோதிகள் , சமூக விரோதிகளையும் தப்பிக்க வைக்க பல பேர் முயற்சி செய்கின்றனர். நாம் சொல்ல வேண்டியது “யார் தவறு செய்தாலும் , அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், அது காவல் துறை என்றாலும், தண்டிக்க பட வேண்டும்”. அதே நேரத்தில் மொத்த பழியையும் காவல்துறை மேல் போடுபவர்கள் ஒன்றை உணர வேண்டும்.
சமீபத்தில் நடந்த ரயில் விபத்து விசயத்தில் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டன. அது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. ISISI தீவிரவாதிகள் பின் இருக்கிறார்கள் என்று அரசின் புலனாய்வு அமைப்புகள் கண்டு அறிந்து உள்ளன. நக்சல் , மாவோயிஸ்ட்கள்மோ கடைபிடிக்கும் சதி வேலையில் இன்று ISISI தீவிரவாதிகள் இணைந்து இருக்கிறது. இந்த குழுக்கள் இடையே ஒரு கூட்டமைப்பு ஏற்பட்டு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
ரயில் இன்று எல்லாரும் சர்வ சாதரணமாக பயன்படுத்த கூடியது. குண்டு வைப்பதற்கு பதில் தண்டவாளத்தை பெயர்ப்பது, பாறாங்கற்களை வைப்பது, குறுக்கே பல தடுப்புகளை வைப்பது செய்ய ஆரம்பித்து இருகிறார்கள். இது மிக சுலபமாக பல விரைவு ரயில்களை கவிழ்த்து பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தி விடும்.
அந்த ரயில்களில் தான் அடிக்கடி நமது ரத்த உறவுகள் பயணிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No automatic alt text available.

இந்திய பேரரசின் முப்படைகளும் தன் வலிமையான கைகளில எங்கள் இந்திய தேசிய கொடி ஏந்தி வரும்.

டேய் தேச பிரிவினை வாதிகளே,அவனை மறைமுகமாக ஆதரித்த கோழைகளே, நாளைக்கு காலையில கண்டிப்பா டீவி பாருங்க. எங்கள் பெருமை மி்கு இந்திய பேரரசின் முப்படைகளும் தன் வலிமையான கைகளில எங்கள் இந்திய தேசிய கொடி ஏந்தி வரும்.
அதை பார்க்கும் போது உனக்கு...
ரொம்ப கஷ்டமா இருந்தா கண்ணை மூடிக்க.
ரொம்ப பயமா இருந்தா வீட்டிற்குள் பதுங்கியே இரு.
தாங்க முடியாத வலி வருதா, ரொம்ப சிம்பிள் செத்து போயிடு.

ஈழம் ஈடுகாடு ஆனது போத வில்லை போதும், தமிழ் நாடும் ஆக வேண்டுமா

பாருங்கள். ராகவா லாரன்ஸ் சொன்ன போது, எவனும் நம்பல. யாரும் கலைய மாட்டேன் சொல்லி கூட்டத்தை பிடித்து வைத்தவன் எவன், தனி ஈழம் கேட்டு போராடும் இந்த ஈழ போராளி இயக்குனர் கௌதமன். மெரீனா கடற்கரைக்கு போய் பார்த்த எல்லாருக்கும் தெரியும் அங்கே குழு குழுவா தான் போராடிட்டு இருந்தானுக தான். மாணவர்கள் ஒழுங்க ஒரு கூட்டமாக தனியாக தான் போராடி கொண்டு இருநதார்கள்
.
வேறு மாவட்டத்தில் உக்காந்து கொண்டு முக புத்தகத்தில் பார்த்து விட்டு, செய்தியில் பார்த்து விட்டு , மாணவ சமுதாயம் இணைந்து போராடியது என்று பதிவு இட்டவனுக்கு தெரியாது. சென்னையில் இருந்த அனைவருக்கும் இது நன்றாக தெரியும். தனது அரசியல்/மத/தேசபிரிவினை/இந்திய எதிர்ப்பு என்ற கருத்தை சொல்ல ஆதாயமாக பயன்படுத்தி கொள்ள முயன்ற பல பெண்களும், ஆண்களும், இந்த கூட்டத்தில் இருந்த பிரிவை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டனர்.
இந்த கூட்டத்திற்கு மேலும் ஆள் பிடிக்க வேண்டும் என்பதால் தான், மேலும் மேலும் பல அப்பாவி ஆண்களையும், பெண்களையும் மெரினாவுக்கு இழுத்து இந்த கூட்டத்திடம் பலியாக்க பலர் முயன்றனர் தனது சமூக வலைத்தளம் பதிவுகளின் மூலம். அதனால் தான் பிரிவினைவாதிகள் பற்றி வெளியே தகவல் சொன்னவனை துரோகி என்று முத்திரை குத்தினார்கள்.
கொச்சையாக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் கெட்ட வார்த்தையை பேசி கொண்டு இருந்த கூட்டத்தை மறைத்து , இப்படி பேசுகிறார்கள் என்று வெளியில் சொன்னவனை பார்த்து தமிழர்களை கொச்சை படுத்தி விட்டாய் என்று கொதித்தனர். பெண்ணை அசிங்க படுத்தி பேசுவதை பெண்ணே செய்தனர், அப்படி வந்த செய்தியையும் , பல படித்த பெண்களே மறைத்தனர்.
சல்லிக்கட்டு என்ற ஒற்றை நோக்கில் இருந்த மாணவர்களில் சில பேர்களை குழப்பியது ஒரு பகுதி இயக்குனர் கௌதமன் இவனுடைய கூட்டமும் தான். இவன் பின் பல பேர் இயங்கி இருகிறார்கள்.
அன்பாய் ஆதரவாய் இருந்த, ஆயுதம் கூட வழங்கி, அகதிகளை ஏற்று அரவணைத்த எங்கள் இந்தியாவை முதுகில் குத்தி , தனி ஈழத்துடன் ,தமிழ் நாட்டை இணைப்போம் என்று நீங்கள் உளற தொடங்கிய பிறகு தானே , உங்களை நேசித்த எங்கள் இந்தியா உங்களை விட்டு விலகியது.
ஈழம் ஈடுகாடு ஆனது போத வில்லை போதும், தமிழ் நாடும் ஆக வேண்டுமா
-0:26
90,856 Views
Shankar AFollow
ஃபிடலும் சே குவாராவும் இணைந்த போது

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...