Sunday, March 13, 2016

இந்த தேசமே காலவதியாகிப் போகும்

யார் இதை செய்து இருந்தாலும் தவறுதான். நன்றி தினமலர். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு தலங்களின் மீது அக்கறை காட்டும் உங்கள் பணி தொடரட்டும்.

நான் திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு சென்ற போது, கோவில் மலை அடிவாரத்திலே ஒரு கிறிஸ்தவ சர்ச் தென்பட்டது. மலை அடிவாரத்தில் விநாயகரை வணங்கி விட்டு தான் மக்கள் மலை ஏறுவார்கள். அந்த விநாயகர் ஆலயத்திற்கு இரண்டு கடை தள்ளி சிறிய கிறிஸ்தவ சர்ச் உள்ளது.

ஊர் முழுவதும் ஹிந்துக்கள் நிறைந்து இருக்கும் போது, கிறிஸ்தவ சர்ச் எதன் அடிப்படையில் கட்டினார்கள் என்று புரிய வில்லை.

ஹிந்து மக்களுக்கு எல்லா தெய்வமும் ஒன்று தான். அந்த ஊரில் ஹிந்து மக்கள் இருக்கும் வரை, கிறிஸ்தவ சர்ச்சுக்கும் , கோவிலுக்கும் செல்வார்கள்.

ஹிந்து மக்கள் இறைவனடித்தில் பேதம் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் எப்போது இந்த ஊர் கிறிஸ்தவ பெரும்பான்மை பெறுகிறதோ , அன்று ஹிந்து கோவில் பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள்.

பின்பு எல்லாவற்றையும் சமமாக பார்த்த மனம், என் இறைவன் மட்டும் பெரியவன் என்ற கீழ் சிந்தனையை பெறும். தான் மட்டும் உயர்ந்தது எண்ணும் ஒரு கலச்சாரம் அடுத்த கலாசாரத்தை அழிக்கும். இது உலக நியதி.

தான் பிறந்த/ தன்னை வளர்த்த மண்ணின் பெருமைகளையும், கலாச்சார அடையாளங்களை புறக்கணிக்க செய்யும் மனதை, நம் மக்கள் இடையே கிறிஸ்தவ மத மாற்றிகள் உருவாக்குகிறார்கள்

ஏன் என்றால் கிறிஸ்தவம் , நமது கோவில்களில் குடி கொண்டு இருக்கும் தெய்வங்களை சாத்தான் என்று அழைத்து , நமது ஆலயங்களை கவனிக்க யாருமின்றி அழித்து விடும்.

எங்கே எல்லாம் கிறிஸ்தவம் உள்ளே நுழைகிறதோ , அந்த மண்ணின் பழம்பெரும் கலாச்சாரம் கொல்லப்படும் என்பது வரலாற்று உண்மை.

எப்போது நம் வீட்டு படியேறி, துண்டு காகிதங்களை கொடுத்து, ஏசுவே மெய்யான தெய்வம் என்று நம்மை மாற்ற முயன்றதோ , அன்றே நமக்கு புரிந்து விட்டது , கிறிஸ்தவம் நம் தேசத்தை துண்டாட போகிறது என்று.

கிறிஸ்துவை எதிர்ப்பது நம் வேலை அல்ல. பாவம் அவர், இந்த கிறிஸ்தவ மத மாற்றிகள் உலகங்கும் நடத்திய ரத்த களரியை முன்னமே அறிந்து தான், தன்னை பலிதானம் கொடுத்தார்.

கிறிஸ்துவத்தை மறுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை. இல்லை இந்த தேசமே காலவதியாகிப் போகும்

வினை தீர்ப்பவர் விநாயகர், இந்த முறை வினையை விதைத்தது திமுக

வீட்டில் உள்ளவர்களை இவர்கள் சொல்லும் பகுத்தறிவு பக்கம் திருப்ப முடியாத பகுத்தறிவு வீரர்கள் , நாட்டை பகுத்தறிவு பக்கம் திருப்புகிறார்களாம்.

உங்கள் பகுத்தறிவு உங்கள் வீட்டிலே எடுபடவில்லை. நீங்கள் எல்லாம் தலைவராகி எண்ணத்தை சாதிக்க போகிறிர்கள்.

தலைவன் என்பவன், எல்லா மக்களையும் அரவணைத்து தழைக்க செய்பவன். தலைவன் என்ற சொல்லின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியாது.

பெரும்பான்மை மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது கூட அபத்தம் என்ற கீழ்த்தரமான சிந்தனையை இவர்கள் எப்படி பெற்றார்கள்?

இவ்வளவு பயந்து கொண்டு உடனடியாக வாபஸ் பெறுகிறார்கள். யாரை கண்டு பயம்?

கொஞ்சம் உற்று நோக்கினால், பதில் மாற்று மதத்தவர்கள்.
மாற்று மதத்தவர்களின் அடிப்படை , ஹிந்து மதத்தை மறுத்தல். நம் கடவுள்களை சாத்தான் என்று சொல்லுதல்.

ஹிந்து மதத்தை மறுத்தால் தான், ஹிந்து மக்களை தனது மதத்திற்கு இழுக்க முடியும். அவர்கள் சிறுபான்மை ஆனதால், மிக வெளிபடையாக செய்ய முடியாது.

சிறுபான்மையருக்கு குரல் கொடுக்கும் தலைவர்கள் தமிழகத்தில் பலர் உண்டு. ஆனால் குரல் கொடுக்கும் தலைவர்கள் ஹிந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், குறைந்த பட்சம் எந்த மதமானாலும் அதற்கு மதிப்பை தருபவர்கள்.

ஆகவே இந்த தலைவர்கள் அவர்களுக்கு சரிப்பட்டு வர மாட்டார்கள். மாற்று மதத்தவர்களின் ஒரே அடிப்படை ஹிந்து மதத்தை மறுத்தல். அதை செய்ய கூடிய ஒரே இயக்கம் திமுக.
அதனால் திமுக பின் அணிவகுத்து நிற்கிறார்கள்
.
திமுக ஹிந்து மதத்தை இழிவு படுத்த .இன்னும் மிக தீவிரமாக திமுக பக்கம் செல்லுகிறார்கள். இதை உணர்ந்த திமுக இன்னும் ஹிந்து மதத்தை வேகமாக மறுக்க, மாற்று மதத்தினர் , கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனார். எவ்வளவு ஊழல் செய்யட்டும் கவலை இல்லை , எங்கள் ஆதரவு திமுகவிற்கு தான் !!

எங்கே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால , மாற்று மதத்தினர் நம்மை விட்டு விலகுவார்கள் என்ற பயம் தான் மிக அவசரமாக மறுப்பை வெளியிட காரணம்..

இது தான் உண்மை. என்னதான் பூசி மறைத்தாலும் , இதுதான் நிதர்சனம்.

உண்மையில் சொல்ல போனால். திமுக வின் இந்த செயல் , இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது. எல்லா மக்களையும் சமமாக நடத்து என்று சொல்வது நமது அரசியல் அமைப்பு சட்டம்.

வினை தீர்ப்பவர் விநாயகர், இந்த முறை வினையை விதைத்தது திமுக, வினையின் பலனை அந்த விதி முடிவு செய்யட்டும்.

ஒரு வேண்டுகோள்!!!

ஒரு வேண்டுகோள்!!!

எனது முக நூல் பதிவுகளுக்கு கருத்துக்களை பகிரும் போது, அது ஒரு வரம்புக்கு உட்பட்டு இருப்பது நல்லது. வார்த்தைகள் வலிமையாக இருக்கலாம் இன்றி, அது விரசமான வார்த்தைகளாக இருக்க கூடாது. யாரோ நம் மதத்தை பற்றி விரசமான வார்த்தைகளை உபயோக படுத்தினார்கள் என்பதற்காக , நாமும் அந்த செயலில் இறங்குவது நமக்கு மதிப்பை தராது. அவர்களும், இவர்களும் ஒரே மாதிரி என்ற பிம்பம் ஏற்பட்டு விட்டால், நாம் என்ன நல்ல கருத்துக்கள் சொன்னாலும் அதை படிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

உங்கள கோபம் நியாயமானது. ஒரு விதி செய்யக்கூடியது. ஆனால், தவறான வார்த்தைகள் நமக்கு தோல்வியை பெற்று தரும் என்று புரிந்து கொள்ளுங்கள். நமது சகதோரிகள் கூட நம் பதிவை பகிர்ந்து கொள்ள சங்கடபடுவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இதற்கு பிறகும், அந்த மாதிரி வார்த்தைகளை என் பதிவுக்கு போடபட்டால் , கண்டிப்பாக அதை நீக்கி விடுவேன். என் மேல் யாரும் வருத்தம் கொள்ளாதீர்கள்.

எனக்கும், கோபம், வருத்தம், ஆத்திரம் வரும். வெல்ல முடியாத வார்த்தைகளுடன் விவாதம் செய்து, வீதியில் வீழ்வதை விட, மெளனத்திடம் மண்டி இட்டு விடலாம் என்பதில் நம்பிக்கை உடையவன் நான்.

திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின், பதிவுகளும், கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் அழகும், எனக்கு உந்து சக்தி தந்தவை. அவரிடம் இருந்து தான் நிறைய விசயங்கள் கற்றுக் கொண்டேன்.

நாகரிகத்தின் செயலை நமது வார்த்தை நடையில் கூட நடத்தி காட்ட முடியும்.

தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.

யுத்தம் நிற்பது என் எதிரே நிற்பவரை பொறுத்தே. அது என் கையில் இல்லை

ஒரு கிறிஸ்தவ நண்பர் என்னிடம் கேட்டார் எப்போது கிறிஸ்தவத்தை எதிர்ப்பதை நிறுத்துவாய் என்று .

என் பதில் இது தான், எப்போது கிறிஸ்தவ மத மாற்றிகள் மத மாற்றத்தை நிறுத்துகிறார்கள் என்பதை பொறுத்து தான் என் முடிவு.

ஹிந்து மதத்தின் சாதி சாயலை சொல்லி கொண்டு இனி கிறிஸ்தவம் இங்கே வேலை செய்ய முடியாது. ஆதிக்க சாதியின் செயல் என்னவென்று அவர்களை விட எனக்கு தெரியும். என் சாதி என்னவென்று கேட்டு விட்டு, சாதி பாகுபாடு காட்டிய மனிதர்களை நேரில் சந்தித்து இருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்ல. ஏன் எனில், இறை பாகுபாடு அற்றது. 63 நாயன்மார்களையும், ஆழ்வார்களின் வரலாறும் எனக்கு சொல்லிய ஒரே உண்மை இறைவன் அடியவருக்கு அடியவன். என்னை கோவிலுக்கு வெளியே இருந்து இறை ஆரதானை பண்ண சொன்னாலும், உள்ளே வந்து இறை ஆரதானை பண்ண சொன்னாலும், என் கோபம் என்னை தடுத்தவனை நோக்கி தான் பாயும்.

இறைவனை நோக்கி ஒரு போதும் பாயாது.

அதே நேரத்தில் கிறிஸ்தவம் கிறிஸ்தவத்தின் பெயரால் இந்த உலகத்தில் என்ன கோர தாண்டவம் ஆடி இருக்கிறது. இன்னும் என்னென்ன செய்ய காத்து இருக்கிறது என்பதையும் அறிவோம்.

சிலுவை போர்களையும், அதற்கு உத்திர விட்ட பெருமகனார் யார் என்பதையும், சிலுவை போர் வீர்கள் பொது மக்கள் மீது நடத்திய வெறியாட்டதையும் உங்கள் கிறிஸ்தவ வராலற்று பதிவாளர்களே நொந்து போய் எழுதி உள்ளார்கள்.

இறைமகனரை சிலுவையில் அறைந்த போதும், அன்பை மட்டும் இயம்பினர். சிலுவை போர்களை இறைமகனரா நடத்த சொன்னார்?

சாதியின் அழுக்கை எங்கள் ஹிந்து கடவுள்களின் மீது ஏற்றியது சரி என்றால், யூதர்களின் மீதான ரத்த வெறியாட்டதையும், கருப்ப நிற அடிமைகளை கூட்டம் கூட்டமாக கொன்ற, கிறிஸ்தவர்களின் பாவத்தை இறைமகனர் அல்லவா ஏற்க வேண்டும்.

உங்கள் கிறிஸ்தவ மத மாற்றிகள் படி, சாதி பிரிவினைக்காக எங்கள் ஹிந்து கடவுள்களை எங்கள் மக்கள் ஒதுக்க வேண்டும் என்றால், இறைமகனரையும் அல்லவா ஒதுக்க வேண்டும்.

அதுவே நியாயம்.செய்வீர்களா?

இயேசு மட்டும் கடவுள் என்று சொல்லி விட்டு, மாதவையும், அந்தோனியாருக்கும் , செபசிடினுக்கும் கோவில் கட்டி கும்பிட ஆரம்பித்த போதே, கிறிஸ்தவம் தனது தளத்தை இழுந்தது.

நீங்கள் ஏன் ஹிந்து மத கோவில்களை போன்று உங்கள் சர்ச்சுகளை கட்ட ஆரம்பித்து இருக்கிறர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். வரலாற்றை திரிக்க தானே. திட்டமிட்டு தான் தமிழ் பெயர்களை தவிர்த்து உங்கள் பெயர்களை western பெயரில் வைத்து கொண்டு இருக்கிறர்கள். தேர் திருவிழா, பூ மிதித்தல், பாத யாத்ரை போதல், காவி உடை அணிதல் எதற்காக. உங்கள் பைபிளை நீங்கள் வேதம் என்ற சொல்ல காரணம், எங்கள் வேதங்களை திருட தானே.

இன்னும் 100 வருடங்கள் கழித்து என்ன சொல்விர்கள் என்று எங்களுக்கு தெரியும். "இங்கே கிறித்தவம் ஹிந்து மதத்திற்கு முன்னரே வந்து விட்டது. பாருங்கள் எங்கள் பெயர்கள் கூட, எங்கள் ஊர்களின் பெயர்கள் கூட மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களின் பெயர்கள் போல உள்ளன. ஏசுவிற்காக தான் தஞ்சாவூர் கோவில் கட்டப்பட்டது. நாங்கள் மிகவும் தொன்மையானவர்கள்."

கற்பனை இல்லை. திருவள்ளவரை கிறிஸ்தவர் என்ற சொன்ன கூட்டம் அல்லவா நீங்கள்.

அடுத்த மதத்தின் வேர்களை திருடுவது தவறு என்று கேட்டால், மாறுபட்ட கலாசாரம் ஒன்றுடன் ஒன்று கலக்கிறது என்ற கதை வேறு.

நீங்கள் சொல்வதை போல் ஆரியரும், திராவிடரும் கலந்ததால், என்ன இங்கே மாறி போயிற்று. இன்னும் திராவிடர்களின் இயற்கை வழிபாடு இன்னும் நீடித்து இருக்கிறது. இன்னும் மெருகு ஏறி இருக்கிறது. இன்று வரை அதே சகிப்புத்தன்மை நீடித்து வந்து இருக்கிறது

நீங்கள் இங்கே கலந்ததால், என்ன நடந்தது, 1000 வருடம் கோவில்கள் இடிக்கப்பட்டு , உங்கள் சர்ச்கள்க்கு மட்டும் உங்கள் மக்கள் செல்ல வேண்டும் என்ற என்னத்தை தானே விதித்திர்கள். தனது மட்டும் உயரந்தது என்ற நீச தனமான சிந்தனையை தானே என் மக்களிடம் வளர்த்திர்கள்.

மயிலைப் கபாலி கோவிலின் ஆதியை பற்றி ஆரயாந்தால் அது எங்கே போய் முடியும் என்று எல்லோரும் அறிந்ததே. சகிப்புத்தன்மை காரணமாக தான் அமைதியாக் இருக்கிறோம்.

சாதி என் மதத்தின் பிரச்சினை, அதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம். முதலில் உங்கள் கிறிஸ்தவ மத மாற்றிகளை அடுத்து மதத்தை பார்த்து அச்சு அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள். சொந்தமாக யோசிக்க சொல்லுங்கள். யேசுவிற்கு மட்டும் சர்ச் கட்டி கும்பிட சொல்லுங்கள். ஒரே இறைவன் யார் என்று முதலில் முடிவு செய்யுங்கள். பின்பு மத வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

சாதி பிரிவினையை பற்றி நம் ஹிந்துக்கள் குறிப்பிட்டாலும், ஹிந்துக்கள் தலை குனிய தான் வேண்டும். ஆனால் அடுத்த மதத்திற்கு அதை பற்றி சொல்ல எந்த உரிமை இல்லை.

என் பதிவு சில நல்ல கிறிஸ்தவ உள்ளங்களை புண்படுத்தி விடும் என்பதை அறிவேன். மன்னித்து கொள்ளுங்கள் ஆனால் நீங்கள் உங்கள் மத மாற்றிகளை தடுக்க முயல வில்லை என்றால், ஒற்றுமை என்பது மிக பெரிய கேள்வி குறியாகி விடும்.

சாதியையும், கிறிஸ்தவத்தை எதிர்ப்பது என் கடமை என கருதுகின்றேன். இரண்டிலும் இருந்து நம் தேசத்தை மீட்டு எடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே, எனது களம் காயவில்லை, துணைக்கு யாரையும் துதிக்க வில்லை இறைவனை தவிர.

எனக்கு தெரிந்த வழியில் கடைசி வரை எழுத்து களத்தில் யுத்தம் செய்து கொண்டு தான் இருப்பேன்.

யுத்தம் நிற்பது என் எதிரே நிற்பவரை பொறுத்தே. அது என் கையில் இல்லை..

என் இந்திய தேசத்தின் இயலாமை, என் இமை வழியே வழிகிறது!.


எப்போது  இந்த பாடலை காண நேரும்போது, சொல்ல முடியாத ஒரு ஆதங்கம் மனதில் படர்கிறது.

சிறுவயதில் இருந்து நான் அடிக்கடிகேள்விப்பட்ட இரண்டு செய்திகள்.

1.தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்
2.பாகிஸ்தானின் அத்து மீறல்.

இரண்டும் இது வரை நின்றதில்லை. எப்போது நிற்கும் என்று யாரும் அறிய மாட்டார்கள்.

ஆயிரம் காரணம் இருக்கட்டும். ஆனால் பொருளீட்ட போன கணவனும், மகனும், தந்தையும் , உயிரோடு திரும்புவார்களா என்று ஒரு மங்கை மலங்க மலங்க விழித்து கொண்டு நின்றாள் , அவர்கள் வாழும் இடம் பெயர் தேசமா?

என் அடுத்த தலைமுறையும் இந்த அழுகையை காணுமோ எனறு பதட்டமாய் இருக்கிறது.

என் தேசத்தில் குறைந்த பட்சம் எல்லா மக்களும் எதாவது ஒரு பொருளை வாங்க முண்டியடித்து கொண்டு இருக்கும்போது, என் தேசத்தில் ஒரு பிரிவு மக்கள், உயிரற்ற தங்கள் மீனவர்களின் உடலையாவது வாங்க முடியுமோ அலைந்து கொண்டு இருக்கும் அவலத்தை எங்கே போய் செல்வது.

என் இந்திய தேசத்தின் இயலாமை, என் இமை வழியே வழிகிறது!.

இறைவனாவது இரங்குவான் என்று தெரியும். ஆனால் எப்போது என்று தெரியவில்லை.


ஈசன் வந்தான்

ஒரு வயதான தம்பதி எனக்கு நன்கு தெரிந்தவர், நான் எனது சிவலயாதிற்கான பதிவில் தீபம் போடாதீர்கள் என்று சொன்னதற்கு மிகவும் வருத்தப்பட்டார். இறைவனிடம் சிந்தனை குவிய வேண்டும் என்ற எண்ணத்திற்காக நான் அப்படி தெரிவித்தேன்.

சில பேர் எவ்வளவு மாறுபட்ட சூழ்நிலைகள் அமைந்தாலும் , இறைவன் முன் நிற்கும் போது, இறையை உணர்கிறார்கள். நான் அந்த ரகத்தில் இல்லை. அந்த பக்குவம் எப்போதும் எனக்கு இருந்து வந்தது இல்லை.
என் மனம் சலனதிற்கு மிக விரைவில் இரையாக கூடியது.

தீபத்தை கையில் ஏந்தி இறைவன் முன் நிற்கும்போது, என் கவனம் இறையில் இருந்து தீபத்தில் வழிகிறது. நெய் சிந்தி விடுமா என்ற எண்ணம் வருகிறது, இல்லை தீபம் அணைந்து விடுமா என்ற பதற்றம் வருகிறது. அர்ச்சனைக்கு கொடுக்கப்படும் தேங்காய் எவ்வாறு வரும் என்று மனம் தடுமாறுகிறது. மிக சரியாக நான் கொடுத்த அர்ச்சனை பை என்னிடம் வருகிறதா என்று கண்கள் நோட்டம் விடுகிறது. வெளியே விட்ட காலணிகள் களவாடபடுமா என்று கலக்கம் வருகிறது.

பக்குவம் அற்ற மனம் எப்போதும் இப்படித்தான் பிறழந்து கொண்டு இருக்கும்.
எங்கும் நிறையை எங்கும் வழிபடலாம் என்றாலும், ஈசன் முன் நிற்கும் தருணமே என்னை எப்போதும் தாங்கிப் பிடிக்கிறது. இன்று வரை என்னை என் வாழ்க்கை தடத்தில் , வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.

தன்னம்பிக்கை தானாக சில பேருக்கு வரும். அந்த கூட்டத்தில் நான் இல்லை. தன்னம்பிக்கை அற்ற எனது மனம் தலைவனுக்காக தவித்தது. தந்தை தோள் கொடுத்தாலும், தாய் அரவணைத்தாலும் எழுந்து நிற்க மட்டும் முடிந்தது. நடத்திக் கொண்டு போக மனதோடு ஒருவர் வர வேண்டும் அல்லவா. அங்கே ஈசன் வந்தான்.

ஆன்ம பலமற்ற மனம், ஆண்டவனின் அருகாமையை அறிந்தவுடன், அதிர்ந்தது. உள்ளத்திற்கு உதவி வந்தது என்று உவகை கொண்டது.

பிடி அற்று தவித்த மனம், பிறைசூடன் உள்ளே நுழைந்ததும், தடி ஊன்றி மீண்டும் தரணியில் நின்றது.

சூழ்நிலைகள் என்னை சிதறடிக்க செய்யும் என்று தெரிந்த பின், முடிந்தவரை என்னை சுற்றி நல் சூழ்நிலைகளை உருவாக்க முயன்றேன். அதில் ஒரு பகுதி தான் கோவிலுக்கு வெறுமனே செல்வது. அர்ச்சன்னை , தீபம் தவிர்ப்பது, அதுவும் அதிகாலை செல்வது. அலைபேசியை அணைத்து விடுவது, காலணிகளை கூட வீட்டில் விட்டு செல்வது.

எந்த வெளிச்சிந்தனை இன்றி, இப்போது எல்லாம், ஈசன் முன் அகம் மட்டும் நிற்கிறது. அதற்கு நானே உருவாக்கி கொண்ட சூழ்நிலைகள் சிறப்பாய் வருகிறது.

மற்றபடி குடும்பத்துடன் செல்லும் போது, குறிப்பாக மனைவியுடன் செல்லும் போது, இதை செய்யாதிர்கள்!!

செய்தால் விளைவுக்கு இறைவனும் பொறுப்பல்ல, இதை எழுதிய நானும் பொறுப்பல்ல!!

இது தான் சிறுபான்மை பேசும் உரிமையா?.

என் மதத்தையும் என் தெய்வத்தையும் ஏற்று கொள்ளுங்கள் என்று வீடு வீடாக தெருவாக பிச்சை எடுப்பவர்களை பிச்சைகாரர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது ? . இஸ்லாமியார்கள் இருக்கும் தெரு , வீடு என்று தெரிந்தால் அந்த பக்கம் இந்த கிருஸ்தவ மத மாற்றிகள் போக மாட்டார்கள். போனால் என்ன நடக்கும் என்பதை அறிவார்கள்.

என் வீடு ஏறி உன் கடவுளை என்னிடம் விற்க எந்த சட்டம் அனுமதி கொடுத்தது. இது தான் மத சுதந்திரமா? இது தான் சிறுபான்மை பேசும் உரிமையா?. சட்டத்ில் அனுமதி இல்லை. ஆனால் சட்டதின் மாட்சிமையை காக்க வேண்டிய ஆட்சியாளர்கள் சிறுபான்மை ஒட்டு வங்கியை குறித்து பயம் கொள்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம். அதை சிறுபான்மை மத மாற்றி கூட்டம் பயன் படுத்தி கொள்கிறார்கள்

இந்த நிகழ்வு ஊடகத்தில் வரும் போது. இப்படி குறிப்பட படும் " கிறிஸ்தவர்களை ஹிந்துக்கள் மிரட்டினார்கள்" . வழக்கம் போல் நம் ஹிந்துக்கள் அதை நம்புவார்கள். மௌனமாக கடந்து போவர்கள்.

இந்த நிகழ்வில் கூட , ஒரே ஒருத்தர்தான் தொடர்ந்து அவர்களை எதிர்க்கிறார். மற்ற ஹிந்துக்கள் வேடிக்கை பார்க்கிறர்கள். பல முறை இதே நிகழ்வை நானும் எதிர் கொண்டு உள்ளேன். சுற்றி உள்ள ஹிந்துக்கள் மௌனம் சாதிப்பார்கள்.

அடுத்த நாளே நம்மிடம் வந்து பெருமாள் கோவில் போய் வந்தேன், சிவன் கோவில் போய் வந்தேன் பிரசாதம் என்று நம்மிடம் கொடுப்பார்கள். எரிச்சலாய் வரும். "அட பாவி நேற்று உன் முன்னாடி தானே மத மாற்றி கூட்டம் நம் பெருமாளை விட்டு, இயேசுவை ஏற்க சொன்னது. வாய் திறந்து ஒரு வார்த்தை அவர்களை கேட்காமல், இன்று பெருமாள் பிரசாதம் தருகிறாய்".

ஹிந்து என்று மதம் இல்லாமல் போனால் , இங்கே எந்த பெருமாள் கோவிலும் , சிவன் கோவிலும் நிற்க போகிறது. எல்லாம் சர்ச்சுகள் ஆகவும் , மசுதியாகவும் மாறிப் போகும்.

இதை தடுக்க நாம் எந்த இயக்கத்திலும் இணைய தேவை இல்லை. நமது உறவுகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக நமது குழந்தைகளிடம், நமது வீட்டு பெண்களிடம். இதை சரியாக செய்தாலே போதும். எல்லாம் சரியாக தொடங்கும்.
-1:42

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...