இறை மனிதருள் மானிடராக மலர்ந்த நாள். கண் இருந்தும் குருடராக இருளில் திரிந்த
மனித கூட்டத்திற்கு கதிரவனாய் வந்தவன் எங்கள் கண்ணன். வாழ்விற்கும்
சாவிற்கும் இடைப்பட்ட போர்க்களத்தில் நின்று ஆடி கொண்டு இருக்கும்
ஆத்மாவிற்கு அருளிய பரம ஆத்மா .
எப்போதும் எதிர்மறை எண்ண அம்புகளால் துளைக்கப்பட்டு துன்பப்படும் மனது , இறையை துணைக்கு அழைத்தால் , இறை வந்து நிற்கும், பாதகமாய் யோசிக்க வைக்கும் பாணங்களை பதறடித்து , நம் மனதை பாதுகாக்கும் என்று கருத்தை கருத்தரிக்க வைக்கவே கண்ணன் களம் கண்டான் நம் புண்ணிய பாரதத்தில்.
எப்போதும் எதிர்மறை எண்ண அம்புகளால் துளைக்கப்பட்டு துன்பப்படும் மனது , இறையை துணைக்கு அழைத்தால் , இறை வந்து நிற்கும், பாதகமாய் யோசிக்க வைக்கும் பாணங்களை பதறடித்து , நம் மனதை பாதுகாக்கும் என்று கருத்தை கருத்தரிக்க வைக்கவே கண்ணன் களம் கண்டான் நம் புண்ணிய பாரதத்தில்.
பேதையாக கலைந்து கிடைக்கும் சிந்தனையில் , கீதையாக கண்ணன் உள் இறங்க,
கள்ளுண்ட கள்வனாக கவனம் எல்லாம் கண்ணன் மேலே குவிகிறது. எங்கள் கண்ணன்
வரலாறு சொல்லாமல் , பாரதத்தின் வரலாறு சொல்ல படுவதில்லை. கண்ணனை மறுத்து
இங்கே வேறு கதைகள் இல்லை.
ஊசலாடும் உள்ளத்திற்கு அவன் சொன்ன உபதேசத்தை தவிர்த்து வேறு வார்த்தை உலகில் இல்லை. எங்கே எல்லாம் துர் சிந்தனையும் , நற் சிந்தனையும் நேர் கோட்டில் நிற்கிறதோ அங்கே கீதை வரும் அதன் உடன் எங்கள் கண்ணன் வருவான் மற்றும் ஒரு களம் காண " கல்கியாக"
கல்கியின் அவதார திரு நாளை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் அனைவருக்கும் கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஊசலாடும் உள்ளத்திற்கு அவன் சொன்ன உபதேசத்தை தவிர்த்து வேறு வார்த்தை உலகில் இல்லை. எங்கே எல்லாம் துர் சிந்தனையும் , நற் சிந்தனையும் நேர் கோட்டில் நிற்கிறதோ அங்கே கீதை வரும் அதன் உடன் எங்கள் கண்ணன் வருவான் மற்றும் ஒரு களம் காண " கல்கியாக"
கல்கியின் அவதார திரு நாளை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் அனைவருக்கும் கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்