Wednesday, June 15, 2016

தலித் உரிமை பெற விரும்பும் கிறிஸ்தவ திருசபைகள்

கிறிஸ்தவ மதம் மாறிய தாழ்த்தபட்டவர்களுக்கு , தலித் உரிமம் வேண்டும் என்ற சில கிருஸ்வத சபைகள் கோரிக்கை விடுப்பது , ஒன்றை தெளிவாக உறுதி செய்து உள்ளது. பரிசுத்த ஆவியின் அன்பை பெற்ற பின்னரும் , இவர்களால் சாதி என்ற சாத்தனை வெல்ல முடிய வில்லை.

கிட்டத்தட்ட இவர்கள் சொல்வது" நீ கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் இயேசு உன்னை சாதியில் இருந்து ரட்சிக்க மாட்டார். அதற்கு பதிலாக ஹிந்து மதத்தில் இருந்து தலித் உரிமை நீ பெற்று வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உன்னை ரட்சிக்கும்."

வருத்தமாக இருக்கிறது, இறைவனின் மகனுக்கு எவ்வளவு இழுக்கை இந்திய திருசபைகள் பெற்று தருகின்றன. இவர்கள் உண்மையில் இயேசுவின் அன்பை இயம்புவார்கள் என்றால் என்ன சொல்லி இருக்க வேண்டும் ," கிறிஸ்தவத்திற்கு மாறிய பின்னரும் , இங்கே யாராவது சாதி பார்த்தால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல , அவர்கள் எந்த திரு சபையிலும் சேர்த்து கொள்ள பட மாட்டார்கள்"

இதை சொல்ல இவர்கள் தயாராக இல்லை. மாறாக இவர்கள் என்ன சொல்கிறார்கள், ஒரு கிறிஸ்தவ பெண் ஹிந்து ஆண்மகனை மணம் முடித்தால் , அந்த பெண் இறந்த பிறகு அவளை எங்கள் இடங்களில் அடக்கம் செய்ய மாட்டோம்.

ஒரு பெண் இறந்த பிறகும் ஹிந்து ஆண் மகனை திருமணம் செய்த தீட்டு தொடரும். அதனால் அனுமதிக்க மாட்டோம். (நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களின் பாட்டிக்கு இதுதான் நிகழ்ந்தது)

ஆனால் ஹிந்து மதத்தின் சாதி உரிமையை மட்டும் நாங்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்.  என்ன கதை இது, ஏன் இந்த போலித்தனம்.

நீதிமன்றம் நிராகரித்து விடும் என்பது மட்டும் அல்ல,  கிறிஸ்தவத்தில் சாதி இருக்கிறது என்பதை உலகம் அறிய ஒத்து கொள்ள வேண்டும் என்ற பயத்தினால் , அரசியல்வாதிகள் பின்னர் அலைகின்றனர்.

ஹிந்து மதத்தின் தாழ்த்தப்பட மக்களை ரட்சிக்க வந்ததாக சொன்ன கிறிஸ்தவம் , அங்கே இங்கே சுற்றி மீண்டும் ஹிந்து மதத்திடமே கேட்கிறது "எம் மக்களை காக்க தலித் உரிமையை எங்களுக்கு கொடுங்கள் என்று"


அந்த பரிசுத்த ஆவி உண்மையில் பதறி போய் இருக்கும்!!!!

பாரதம் vs பாகிஸ்தான்

மோடியின் கடந்த ஐந்து நாள் வெளிநாட்டு பயணம், இந்திய தொலைகாட்சிகளில் விவாதிக்க படுவதை விட , பாகிஸ்தான் தொலைகாட்சியில் அதிகம் விவாதிக்க படுகிறது. வெறுப்பில் பிறந்த தேசம் , பொறாமையில் எரிகிறது. ஆற்றாமையில் அழுகிறது.

ஹிந்துக்களுடன் வாழ முடியாது என்று , தங்கள் மதத்திற்கு என்றே ஒரு தேசத்தை வரமாக பெற்ற கூட்டத்திற்கு அதுவே சாபமாக மாறி இருக்கிறது.

காபிர்கள் அற்ற தேசம் என்று கொண்டாடி மகிழ்ந்த கூட்டம் , இன்று காயப்பட்டு கதறுகின்றது. தனியாக போனால் தலை நிமிரலாம் என்றவர்கள், தரணியில் தலை கவிழ்ந்து இருக்கிறார்கள்.

தங்கள் மதம் தங்களை இந்த மண்ணில் மலர வைக்கும், என்று நம்பியவர்களை , அந்த மதமே வழி மறித்து , முறித்து போட்டு இருக்கிறது.
இது யார் செய்த குற்றம்?

பாரதம் விண்வெளியிலும் தனக்கான இடத்தை பிடித்து விட, பாகிஸ்தான் பூமியில் தன் நிலத்திற்காக போராடுகிறது.

உலகின் ஆக்க பூர்வமான அறிவு சக்திகளின் அட்டவணையில் பாரதம் இடம் பிடிக்க, உலகின் அழிவு சக்திகளின் அட்டவணையில் பாகிஸ்தான் இடம் பிடிக்கிறது.

உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் , தங்கள் கிளைகளை நம் தேசத்தில் திறந்து கொண்டு இருக்க, உலகின் தலைவலியாக இருக்கும் தீவிரவாதிகள் தங்கள் கிளைகளை பாகிஸ்தானில் திறந்து கொண்டு இருக்கின்றன.

இன்று பாகிஸ்தான் இந்தியாவிடன் இணைந்தே இருக்கலாம் என்ற குரல்கள் வளர்கிறது. அந்த குரல்களில் ஏக்கம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்தே இருந்திருந்தால். இந்தியா இன்று இந்தளவு வளர்ந்து இருக்க வாய்ப்பில்லை.

மிக பெரிய அழிவை இந்தியா சந்தித்து இருக்கும். நல்ல வேளை இறை அருள் நம்மை காப்பாற்றியது. யாரிடம் இருந்து இந்த ஆன்மிக பூமியை விலக்கி வைக்க வேண்டுமோ அவர்களிடம் இருந்து சரியாக விலக்கி வைத்தது.

ஆப்கானிஸ்தான் என்ற தேசம் நாப்பது வருடங்கள் முன் சுற்றுலா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தது. பெண்கள் படிப்பறிவு உள்ளவர்களாக இருந்தனர் . இன்று சின்ன பின்னமாகி போனது ? யார் காரணம் என்று கேட்டால் , சத்தியமாக தாலிபன்கள் இல்லை.

இவர்களை ஆரம்பித்தில் இருந்தே அடக்கி வைக்க தவறிய அந்த தேசத்தின் நல்ல உள்ளம் படைத்த மக்கள். தங்கள் மதத்திற்காக செய்கின்றான் என்று அவர்களின் எல்லா அடாது செயலகளையும் பொறுத்த மக்கள். விளைவு அந்த மக்கள் மீதே தாலிபான் பாய்ந்தது.

அந்த தேசம் கலைத்து போடப்பட்டது.

அது தான் பாகிஸ்தானில் நிகழ்ந்தது. நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த தேசம் திருந்த போவதில்லை, எதற்கும் வருந்த போவதில்லை. மீண்டும் இணைந்தால் , நம்மையும் கீழ் நோக்கி தான் இழுப்பார்கள்.

தகவல் தொழில்நுட்பம் வேண்டும், செயற்கை கோள்கள் வேண்டும். ஆடம்பரமான சுதந்திரமான வாழ்க்கை வேண்டும், ஆனால் கூடவே கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் வேண்டும், எல்லாரும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும். எல்லாரும் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்ற வேண்டும். இந்த நோக்கம் கொண்டவர்களுடன் பாரதம் ஒரு நாளும் வாழ முடியாது.

ஆப்கான் ஒரு இஸ்லாமிய தேசம் , பாகிஸ்தான் இன்னோர் இஸ்லாமிய தேசம். ஆனால் பாகிஸ்தான் ஆப்கானின் அழிவை விரும்புகிறது. இதை நாம் சொல்ல வில்லை. ஆப்கான் மக்கள் சொல்கிறார்கள். இவர்களால் காபிர்கள் தேசம் என்று இழிவாக அழைக்கப்பட்ட , இந்தியா ஆப்கானுக்கு உதவி செய்கிறது.

மதத்தை முன் நிறுத்திய தேசம் மெல்ல மடிந்து கொண்டு இருக்க, பெரும்பான்மை ஹிந்துக்கள் கொண்ட தேசம் மத சார்ப்பற தன்மையில் செழித்து வளர்ந்து வந்து இருக்கிறது.

மத சார்பற்ற தன்மை சொன்ன மதத்தின் நிழல்களில் இருந்து உருவாகி வந்த பாரதத்தின் தலைவர் இன்று பரணி எங்கும் புகழ் பெறுகிறார்.

சில வருத்தம் இவர் மேல் இருந்தாலும் இவர் என் தேசத்தின் தலைவர், இவரின் ஆளுமையில் என் தேசம் அரவணைப்பு பெறுகிறது என நினைக்கும்போது உள்ளம் உண்மையில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறது. இறைக்கு பிரியமானது நமது இந்திய தேசம் அல்லவா
Suganthan Rajamanickam's photo.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...