Saturday, February 18, 2017

புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன், தந்தி டிவி- பாண்டே.

புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன், தந்தி டிவி- பாண்டே. இவர்கள் எல்லாருமே மிக தெளிவாக ஒரு அரசியல் சார்பு நிலையில் இருந்து பேசுபவர்கள். ஆனால் பாண்டே மட்டும் அதிக அளவில் விமர்சனம் செய்யபடுகிறார். நன்றாக கவனியுங்கள் , திராவிட கூட்டமும், பகுத்தறிவு கூட்டமும் , சிறுபான்மையில் பெரும்பான்மை கூட்டமும், பாண்டேவை தான் அதிக அளவில் குறி வைத்து விமர்சனம் செய்வார்கள். ஏன் என்றால் மற்றவர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள். மிக தெளிவாக ஹிந்து மதம், அதை ஆதரிப்பவர்கள், அதை ஆதரிக்கும் கட்சியை தான் இவர்கள் விவாதத்தில் கடுமையாக தாக்குவார்கள். பதில் சொன்னாலும் விடாமல் பல குறுக்கு கேள்விகளை கேட்பார்கள். ஆனால் திராவிட கூட்டதையும் , பகுத்தறிவு கூட்டத்தையும் சிறுபான்மை கூட்டத்தையும் , விவாதத்தில் ஒரு போதும் எதிர் கேள்வி கேக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு பதில் சொன்னால் உடனே ஏற்று கொள்வார்கள், குறுக்கு கேள்விகள் வராது.
ஆனால் முதன் முதலாக பாண்டே தான் திராவிட கூட்டதையும் , பகுத்தறிவு கூட்டத்தையும் சிறுபான்மை கூட்டத்தையும் எதிர் கேள்வி கேட்டார். பதில் சொன்னாலும் விடாமல் குறுக்கு கேள்விகள் கேட்டார். ஹிந்து கடவுள்களை விவாத்தில் மட்டம் தட்டும் போது கடுமையாக அதை எதிர்த்தார். மற்ற மத கடவுள்களை விமர்சிப்பதையும் அவர் எதிர்த்தார் என்பதும் கவனிக்க வேண்டியது. அது இவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை. ஏன் என்றால் இடது சாரி தத்துவத்திற்கு எதிராக எழும் குரலை ஊடகம் இது வரை அனுமதித்து இல்லை. ஜனநாயகத்தில் இடது சாரி குரலும், வலது சாரி குரலும் ஒலிக்க வேண்டும். அது தான் சம உரிமை. பாண்டே, தான் கடவுளை நம்புவன் என்பதை மறுக்காமல் ஒத்து கொண்டார்.
சசிகலாவை ஆதரிக்கும் மனியனிடம் அவர் கேட்ட எதிர் கேள்வி அளவிற்கு கூட வேறு எந்த புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன் கேக்க வில்லை. மாறாக ஆளநர் ஏன் தாமதப்படுத்துகிறார் என்ற குறுக்கு கேள்வியைத்தான் அவர்கள் விடாமல் திருப்பி திருப்பி கேட்டு கொண்டு இருநதார்கள். மக்கள் சசிகலாவை விரும்ப வில்லை என்று தெளிவாக தெரிந்து இருந்தும், அதை பற்றி அழுத்தி பேச யாரும் தயாரக இல்லை.
இடது சாரி கூட்டம் எப்போதும் தன் கொள்கையை ஒட்டி தான் மக்கள் எண்ணத்தை திசை திருப்ப முயலும். அதை தான் இப்போதும் இந்த இடதுசாரி ஊடக குழு சசிகலா விஷ்யத்தில் செய்து கொண்டு இருக்கிறது.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...