எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி கொள்ளுங்கள். பதட்டம் கொள்ளாதீர்கள், அடுத்தவரையும் பதட்ட படுத்தாதீர்கள். கண்ட செய்திகளை நண்பர்களுக்குக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து வதந்திகளை பரப்பாதீர்கள். அதுவே இப்போது முக்கியம். எத்தனையோ கொல்லை நோய்கள் வந்து போய் உள்ளன உலகம் தோன்றியதில் இருந்து. உலகம் அழிய வில்லை, மீண்டு எழுந்து பயணித்து இருக்கிறது.இப்போதும் பயணிக்கும் ஆனால் பயணிகள் யார் என்பது படைத்தவன் கையில் மட்டும் தான்.நோயே விதியானால், மரணமே சில பேருக்கு வரம், எல்லா பற்றுகளில் இருந்தும் பிய்த்து கொண்டு போய் ஈசனின் திருவடியில் நம்மை சேர்த்து விடும்.
"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்"
