Monday, June 20, 2016

சனாதன மதத்தை காத்தல் என் தர்மம். அதில் என் தலையே போனாலும் வருத்தம் இல்லை.

மத அடிப்படைவாதிகளை பற்றி எழுதுவதால், எனது பாதுகாப்பை பற்றி கவலை பட்ட அன்பான தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் மிக்க நன்றி. இன்று வரை அப்படிப்பட்ட மிக தீவிரமான எதிர்ப்பு வந்தது இல்லை. சில சின்ன மிரட்டல்கள் வந்தன. எழுதுவதற்கு கை இருக்காது என்று ஒருவர் அன்பாக எச்சரித்தார். நான் பதிலுக்கு” நான் எழுதியது சரி என்பதை உங்கள் எச்சரிக்கை சொல்கிறது” என்றவுடன் அமைதியாகி விட்டார்.

மரணத்தை பற்றி பயம் இல்லாமல் இல்லை. குடும்பத்தை பற்றி கவலை இருக்கிறது. யார் போனாலும் இருந்தாலும் , ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை தொடர்ந்து பயணிக்க போகிறது. ஆனாலும் கொடூரமாக கொல்லப்பட்டால், அது குடும்பத்தில் தீராத வடுவாக போய் விடும் என்று கவலையாக இருக்கிறது. தந்தை அற்ற மகனாக என மகன் தரணியில் தடுமாறி நிற்பானோ என்று கலக்கமாக இருக்கிறது.

ஆனால் வேறு வழி இல்லை எழுதி தான் ஆக வேண்டும், அது நம்மை மரணத்திற்கே இட்டு சென்றாலும். எல்லா விஷயங்களையும் பற்றிய கவலை கொள்ளும்போது, என் ஆன்மிக நம்பிக்கையையும், என் முன்னோர்கள் வழி வந்த கலாச்சாரத்தையும் , அதனை தாங்கும் என் ஹிந்து மதத்தையும் பற்றி நான் கவலை கொள்ள தான் வேண்டும். நாம் கவலை கொள்ளாமல் வேறு யார் கவலை கொள்ள முடியும்.

வீட்டிற்குள் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு விட்டு, கோவில்களுக்கு தீங்கு நேரும்போது, எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று மற்றவர்கள் இருக்கும் போது, என்னால் இருக்க முடியவில்லை. குறைந்த பட்சம் என் எழுத்தில் எதிர்ப்பை காட்டி இருக்கின்றேன்.

ஒரு நண்பர் அயல்நாட்டில் வேலை கிடைத்த பிறகு எழுதுவதை நிறுத்தி விட்டார். இன்னோர் நண்பர் கட்சிகளில் ஆர்வம் கண்ட பின்பு எழுதுவதை நிறுத்தி விட்டார். இன்னோருவர் ஹிந்து மதம் என்ற எழுதுவதே தன் சாதி பெருமை காக்க என்றளவில் வைத்து கொண்டார்.

நான் தொடர்ந்து எழுதுவதால் சில இடங்களில் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். ஒரு அன்பர் அவரின் குழந்தைகளிடம் என்னை விட்டு விலகி இருக்க சொன்னார். இன்னொருவர் நட்பை துண்டித்தார். சில உறவுகள் அன்னியபட்டன. அலுவலகத்தில் நான் ஒரு ஹிந்து ,மத வெறியனாக அடையாளம் கொள்ளப்பட்டேன். குடும்ப உறவுகளில் பேதங்கள் வந்தன உண்மையில் மாற்று மதத்தவரால் பாதிக்கபட்டதை விட , என் முதுகில் குத்தியது சாட்சாத் நம் ஹிந்துக்கள் தான்.

தாங்கள் மதச்சார்பற்ற ஹிந்து என்று காட்டுவதற்காக ,தன் ஆன்மிக நம்பிக்கையை இழிவாக பேசுபவர்களுடன் கை கோர்த்து திரிந்து , அவர்களை கொண்டாடி நம்மை இழிவு படுத்த செய்தனர். குறிப்பாக பல பெண்கள் இதை செய்தனர்.

பாகிஸ்தானின் மலலாலா என்ற பெண்ணிற்கு வேதனைபட்டு விவாதம் செய்த ஹிந்துக்கள், அதே பாகிஸ்தானில் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக தினமும் வேட்டையாட படும் ஹிந்து பெண்களை பற்றி நாம் பேச்சு எடுத்தால் ,மெல்ல அந்த விவாதத்தை தவிர்க்கின்றனர். அந்த மலலாலா, ஒரு போதும் ஹிந்து பெண்களை பற்றி பேசியதில்லை என்ற சொன்னால் நம்மை வெறுப்போடு பார்க்கிறார்கள்.

தன் குழந்தைகளிடம் ஹிந்து மதம் சாத்தனை வழிபடும் கூட்டம் என்று கற்பித்து விட்டு, நம்மிடம் வந்து நட்பாக நாங்கள் அன்பு மதம் என்று சொல்லி திரியும் கூட்டத்துடன் எதற்காக போலியான நட்பை கொண்டாட வேண்டும்.

கவலை பட பல காரணம் பல இருக்க , இது ஒரு வேலை என்று எழுதி கொண்டு இருக்கிறாயே என்று ஏளனம் செய்தவர்கள் பலர். என் புகைபடத்திற்கு லைக் போட்டு விட்டதால், என் பதிவுகள் அவரின் முகபுதகத்தில் வந்ததை கண்டு. தன் மனைவி முகம் சுளிக்கிறாள் என்ற சொல்லி , புகைபடத்திற்கு லைக் செய்வதற்கு பதில் , புகைப்படம் நன்றாக  இருந்தது என்று whatsup மெசேஜ் அனுப்பிய நண்பர்கள்.

இவர்கள் எல்லாருக்கும் சேர்த்து தான் நானும் என்னை போன்றவர்கள் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கின்றோம். ஒரு தேசம் நிலையாக இருந்தால் தான் , அந்த தேசத்தின் பொருளாதாரம், நிம்மதி எல்லாம் நிலையாக வளரும். ஆனால் அந்த தேசம் மாற்று மதத்தவரால் ஆட் கொள்ளபட்டால் , அந்த தேசத்தின் ஆன்மா கொல்லப்படும்.

கிறிஸ்தவத்திற்கும் , இஸ்லாத்திற்கும் முன்னே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, செழித்து வரும் பெருமை மிகும் தமிழ் கலாச்சாரத்தில் வழி வந்த கூட்டம் நாம். இது நம் மண். ஹிந்து மதம் என்ற பெயர் வைத்தாலும் வைக்க வில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. என் முன்னோர்கள் வழிபட்ட அத்தனை தெய்வங்களையும் ஹிந்து மதம் ஏற்கிறது.

எங்கள் கோவில்கள் எங்களின் தமிழ் வரலாற்றின் உச்சத்தை சொல்கிறது. என் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர அல்லும் பகலும் உழைப்பது என் கடமை. என் முன்னோர்கள் காத்த சனாதன மதத்தை காத்தல் என் தர்மம். அதில் என் தலையே போனாலும் வருத்தம் இல்லை.

Wednesday, June 15, 2016

தலித் உரிமை பெற விரும்பும் கிறிஸ்தவ திருசபைகள்

கிறிஸ்தவ மதம் மாறிய தாழ்த்தபட்டவர்களுக்கு , தலித் உரிமம் வேண்டும் என்ற சில கிருஸ்வத சபைகள் கோரிக்கை விடுப்பது , ஒன்றை தெளிவாக உறுதி செய்து உள்ளது. பரிசுத்த ஆவியின் அன்பை பெற்ற பின்னரும் , இவர்களால் சாதி என்ற சாத்தனை வெல்ல முடிய வில்லை.

கிட்டத்தட்ட இவர்கள் சொல்வது" நீ கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் இயேசு உன்னை சாதியில் இருந்து ரட்சிக்க மாட்டார். அதற்கு பதிலாக ஹிந்து மதத்தில் இருந்து தலித் உரிமை நீ பெற்று வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உன்னை ரட்சிக்கும்."

வருத்தமாக இருக்கிறது, இறைவனின் மகனுக்கு எவ்வளவு இழுக்கை இந்திய திருசபைகள் பெற்று தருகின்றன. இவர்கள் உண்மையில் இயேசுவின் அன்பை இயம்புவார்கள் என்றால் என்ன சொல்லி இருக்க வேண்டும் ," கிறிஸ்தவத்திற்கு மாறிய பின்னரும் , இங்கே யாராவது சாதி பார்த்தால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல , அவர்கள் எந்த திரு சபையிலும் சேர்த்து கொள்ள பட மாட்டார்கள்"

இதை சொல்ல இவர்கள் தயாராக இல்லை. மாறாக இவர்கள் என்ன சொல்கிறார்கள், ஒரு கிறிஸ்தவ பெண் ஹிந்து ஆண்மகனை மணம் முடித்தால் , அந்த பெண் இறந்த பிறகு அவளை எங்கள் இடங்களில் அடக்கம் செய்ய மாட்டோம்.

ஒரு பெண் இறந்த பிறகும் ஹிந்து ஆண் மகனை திருமணம் செய்த தீட்டு தொடரும். அதனால் அனுமதிக்க மாட்டோம். (நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களின் பாட்டிக்கு இதுதான் நிகழ்ந்தது)

ஆனால் ஹிந்து மதத்தின் சாதி உரிமையை மட்டும் நாங்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்.  என்ன கதை இது, ஏன் இந்த போலித்தனம்.

நீதிமன்றம் நிராகரித்து விடும் என்பது மட்டும் அல்ல,  கிறிஸ்தவத்தில் சாதி இருக்கிறது என்பதை உலகம் அறிய ஒத்து கொள்ள வேண்டும் என்ற பயத்தினால் , அரசியல்வாதிகள் பின்னர் அலைகின்றனர்.

ஹிந்து மதத்தின் தாழ்த்தப்பட மக்களை ரட்சிக்க வந்ததாக சொன்ன கிறிஸ்தவம் , அங்கே இங்கே சுற்றி மீண்டும் ஹிந்து மதத்திடமே கேட்கிறது "எம் மக்களை காக்க தலித் உரிமையை எங்களுக்கு கொடுங்கள் என்று"


அந்த பரிசுத்த ஆவி உண்மையில் பதறி போய் இருக்கும்!!!!

பாரதம் vs பாகிஸ்தான்

மோடியின் கடந்த ஐந்து நாள் வெளிநாட்டு பயணம், இந்திய தொலைகாட்சிகளில் விவாதிக்க படுவதை விட , பாகிஸ்தான் தொலைகாட்சியில் அதிகம் விவாதிக்க படுகிறது. வெறுப்பில் பிறந்த தேசம் , பொறாமையில் எரிகிறது. ஆற்றாமையில் அழுகிறது.

ஹிந்துக்களுடன் வாழ முடியாது என்று , தங்கள் மதத்திற்கு என்றே ஒரு தேசத்தை வரமாக பெற்ற கூட்டத்திற்கு அதுவே சாபமாக மாறி இருக்கிறது.

காபிர்கள் அற்ற தேசம் என்று கொண்டாடி மகிழ்ந்த கூட்டம் , இன்று காயப்பட்டு கதறுகின்றது. தனியாக போனால் தலை நிமிரலாம் என்றவர்கள், தரணியில் தலை கவிழ்ந்து இருக்கிறார்கள்.

தங்கள் மதம் தங்களை இந்த மண்ணில் மலர வைக்கும், என்று நம்பியவர்களை , அந்த மதமே வழி மறித்து , முறித்து போட்டு இருக்கிறது.
இது யார் செய்த குற்றம்?

பாரதம் விண்வெளியிலும் தனக்கான இடத்தை பிடித்து விட, பாகிஸ்தான் பூமியில் தன் நிலத்திற்காக போராடுகிறது.

உலகின் ஆக்க பூர்வமான அறிவு சக்திகளின் அட்டவணையில் பாரதம் இடம் பிடிக்க, உலகின் அழிவு சக்திகளின் அட்டவணையில் பாகிஸ்தான் இடம் பிடிக்கிறது.

உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் , தங்கள் கிளைகளை நம் தேசத்தில் திறந்து கொண்டு இருக்க, உலகின் தலைவலியாக இருக்கும் தீவிரவாதிகள் தங்கள் கிளைகளை பாகிஸ்தானில் திறந்து கொண்டு இருக்கின்றன.

இன்று பாகிஸ்தான் இந்தியாவிடன் இணைந்தே இருக்கலாம் என்ற குரல்கள் வளர்கிறது. அந்த குரல்களில் ஏக்கம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்தே இருந்திருந்தால். இந்தியா இன்று இந்தளவு வளர்ந்து இருக்க வாய்ப்பில்லை.

மிக பெரிய அழிவை இந்தியா சந்தித்து இருக்கும். நல்ல வேளை இறை அருள் நம்மை காப்பாற்றியது. யாரிடம் இருந்து இந்த ஆன்மிக பூமியை விலக்கி வைக்க வேண்டுமோ அவர்களிடம் இருந்து சரியாக விலக்கி வைத்தது.

ஆப்கானிஸ்தான் என்ற தேசம் நாப்பது வருடங்கள் முன் சுற்றுலா துறையில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தது. பெண்கள் படிப்பறிவு உள்ளவர்களாக இருந்தனர் . இன்று சின்ன பின்னமாகி போனது ? யார் காரணம் என்று கேட்டால் , சத்தியமாக தாலிபன்கள் இல்லை.

இவர்களை ஆரம்பித்தில் இருந்தே அடக்கி வைக்க தவறிய அந்த தேசத்தின் நல்ல உள்ளம் படைத்த மக்கள். தங்கள் மதத்திற்காக செய்கின்றான் என்று அவர்களின் எல்லா அடாது செயலகளையும் பொறுத்த மக்கள். விளைவு அந்த மக்கள் மீதே தாலிபான் பாய்ந்தது.

அந்த தேசம் கலைத்து போடப்பட்டது.

அது தான் பாகிஸ்தானில் நிகழ்ந்தது. நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த தேசம் திருந்த போவதில்லை, எதற்கும் வருந்த போவதில்லை. மீண்டும் இணைந்தால் , நம்மையும் கீழ் நோக்கி தான் இழுப்பார்கள்.

தகவல் தொழில்நுட்பம் வேண்டும், செயற்கை கோள்கள் வேண்டும். ஆடம்பரமான சுதந்திரமான வாழ்க்கை வேண்டும், ஆனால் கூடவே கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் வேண்டும், எல்லாரும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும். எல்லாரும் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்ற வேண்டும். இந்த நோக்கம் கொண்டவர்களுடன் பாரதம் ஒரு நாளும் வாழ முடியாது.

ஆப்கான் ஒரு இஸ்லாமிய தேசம் , பாகிஸ்தான் இன்னோர் இஸ்லாமிய தேசம். ஆனால் பாகிஸ்தான் ஆப்கானின் அழிவை விரும்புகிறது. இதை நாம் சொல்ல வில்லை. ஆப்கான் மக்கள் சொல்கிறார்கள். இவர்களால் காபிர்கள் தேசம் என்று இழிவாக அழைக்கப்பட்ட , இந்தியா ஆப்கானுக்கு உதவி செய்கிறது.

மதத்தை முன் நிறுத்திய தேசம் மெல்ல மடிந்து கொண்டு இருக்க, பெரும்பான்மை ஹிந்துக்கள் கொண்ட தேசம் மத சார்ப்பற தன்மையில் செழித்து வளர்ந்து வந்து இருக்கிறது.

மத சார்பற்ற தன்மை சொன்ன மதத்தின் நிழல்களில் இருந்து உருவாகி வந்த பாரதத்தின் தலைவர் இன்று பரணி எங்கும் புகழ் பெறுகிறார்.

சில வருத்தம் இவர் மேல் இருந்தாலும் இவர் என் தேசத்தின் தலைவர், இவரின் ஆளுமையில் என் தேசம் அரவணைப்பு பெறுகிறது என நினைக்கும்போது உள்ளம் உண்மையில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறது. இறைக்கு பிரியமானது நமது இந்திய தேசம் அல்லவா
Suganthan Rajamanickam's photo.

Wednesday, June 1, 2016

எங்குமே நிரந்தரம் இல்லா பந்தங்களே

என்ன தான் நெருங்கிய உறவானாலும் , நட்பானாலும் , வாழ்க்கையின் ஒரு கட்டத்திற்கு மேல் அதை தொடர முடியாத நிலை ஏற்படலாம். அதை தொடர்வது நமது வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுத்தி, இரண்டு பக்கமும் வேதனை படுவதை விட, அந்த உறவுகளையும், நட்ப்பையும், அப்படியே விட்டு விட வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

இந்த உறவும், நட்பும் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா என்று தவித்த காலங்கள் உண்டு. நமது முடிவால் அவர்கள் வருந்த போகிறார்கள் என்று நாம் வருந்தி கொண்டு இருந்தோம். கவலைகள் நம்மை காயபடுத்த நாமே காரணமாக இருந்தோம்.

யாருக்காகவும் காத்திருக்காத காலம் , நமது காயத்தை ஆற்றி விட்டு அதன் போக்கில் விரைந்து கொண்டு இருக்கிறது. நினைவுகளை நிறுத்தி பார்க்கையில், எங்குமே நிரந்தரம் இல்லா பந்தங்களே நின்று கொண்டு இருக்கின்றன

நாம் திருஞானசம்பந்தரா ?

நேற்று வெகு காலம் கழித்து தோழி ஒருத்தர் அழைத்து இருந்தார் ஜெர்மனியில் இருந்து. "சிலதொழில்கள் தொடங்க உள்ளதாகவும் , ஆனால் என் கணவர் மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர் என்றும், அதனால் ஜாதகரீதியில் கிரக நிலை சரி இல்லாத காரணத்தினால் சிறிது காலம் கழித்து தொடங்க விரும்புவதாகவும் , தனக்கு உடன்பாடு இல்லை எனவும் , யார் சொன்னாலும் மறுக்கிறார் . உன் பதிவுகளை விரும்பி படிப்பார் என்பதால் ஒரு வேளை நீ சொன்னால் கேட்கலாம் என்பதால் அழைத்தேன் என்றார்.

வேயுறு தோளிபங்கன் என்ற கோளாறு பதிகம் படித்தால் போதாதா, திருதிருஞானசம்பந்தர் கூட அதைத்தான் படித்தார் அல்லவா  என்ற வேறு கேட்டார். நான் பேச வேண்டியது உன் கணவரிடம் இல்லையம்மா, உன்னிடம் தான் என்றேன்.

அது திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு, சமணர்களை வெல்ல கிளம்பு போது, கிரக நிலை சரி இல்லை அவருக்கு ,அது போக்க இறையை வேண்டி பதிகம் பாடினார். இறை இரங்கியது அவருக்கு.

அது எப்படி நமக்கு பொருந்தும், நாம் திருஞானசம்பந்தரா ?
திருஞானசம்பந்தர் அழுதவுடன் தாயாக வந்து அமுது ஊட்டினாள் உலகம்மை. பிள்ளை பாதம் தேய்கிறதே என்ற பிறைசூடன் தங்க காலணிகள் அனுப்பினான். சம்பந்தர் இறையின் பிள்ளை.

நாமும் இறையின் பிள்ளைகள் என்றாலும் , நமக்கு இறை வருமோ அப்படி?
நீங்கள் திரு திருஞானசம்பந்தராக இருந்தால் மட்டுமே அந்த பதிகத்தின் முழு பயனை பெற முடியும். இங்கே ராமனாக இருந்தால் மட்டுமே சீதா தேவி போன்ற மனைவியை பெற முடியும்.

இறைவனின் செயல்களை நமது செயல்களுக்கு உதாரணம் காட்டுவது தவறு இல்லை, ஆனால் இறையின் இயல்பை நாம் இயம்பி கொண்டு இருக்கின்றமோ என்பதே இயற்கையின் கேள்வி ?
இறை நடந்த வழிகளில் இருந்து நாம் நமது வாழ்வியல் தடத்தை அமைத்து கொள்ளலாம். இறையுடனும் அவரின் அடியார்களுடனும் நம்மை ஒப்பிடுதல் பாவம்.

இறை நம்பிக்கை இல்லை என்றால் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தொடங்கி விடலாம்.

முயற்சி திருவினையாக்கும். உண்மை. ஆனால் இறை கூட மனிதனாக மண்ணில் இறங்கிய பிறகும், தன் மனைவியை மீட்டு எடுக்க காலம் கனிந்த பிறகே களம் கண்டது

தோழிக்கு இறை நம்பிக்கை உண்டு, ஆனால் ஜாதகம் மேல் நம்பிக்கை இல்லை , கணவருக்கு இரண்டும் உண்டு. ஒருமித்த கருத்து ஏற்படா விட்டால் ஒன்று கணவரின் கருத்துக்கு உட்படுங்கள், இல்லை உங்களின் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று பூ வாக்கு கேளுங்கள். இறை கண்டிப்பாக பதில் அளிக்கும் என்றேன்

அவரின் கணவர் ஏற்று கொண்டு விட்டார்.

நமக்கான பதில்களை நம்மை படைத்தவன் மட்டுமே அளிக்க முடியும்

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...