Monday, September 26, 2016

எத்தனை முறை கேட்டாலும் அமுதமான பாடல்

எத்தனை முறை கேட்டாலும் அமுதமான பாடல். ராமனுக்கு இங்கே நிகர் ராமன் தான். வடக்கில் இறை இறங்கி தெற்கு நோக்கி வந்து இருக்கிறது, மீண்டும் தெற்கில் இருந்து வடக்கே போய் இருக்கிறது. மொத்த இந்திய தேசத்தையும் இறை நடந்தே அளந்து இருக்கிறது. இராமாயணம் படிக்கும் போது, இறையுடன் நாமும் வடக்கில் தொடங்கி , தெற்கே வந்து மீண்டும் வடக்கு நோக்கி போகின்றோம்.

வாழும் தேசத்தின் புவியியல் வரலாறும் ராமாயணத்தில் சேர்த்து வாசிக்கபடுகிறது. இறையின் மீது விழுந்த பற்றும் பக்தியும், அது நடந்து போன தேசத்தின் மீது இயல்பாக விழுகிறது , அந்த இந்திய தேசத்தில் தான் நான் பிறந்தேன் என்று உணரும்போது தேசத்தின் மீதான காதல் விழுதாகி பழுத்த ஆலமரமாகிறது , நமது அடுத்த தலைமுறைக்கும் பற்றி படர்கிறது.
ஏன் இராமயணம் படிக்க வேண்டும் என நம் முன்னோர் சொன்னது இப்போது புரிகிறது.

https://www.youtube.com/watch?v=cS0ZFfoCqu8

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...