Monday, March 16, 2020

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி கொள்ளுங்கள். பதட்டம் கொள்ளாதீர்கள், அடுத்தவரையும் பதட்ட படுத்தாதீர்கள். கண்ட செய்திகளை நண்பர்களுக்குக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து வதந்திகளை பரப்பாதீர்கள். அதுவே இப்போது முக்கியம். எத்தனையோ கொல்லை நோய்கள் வந்து போய் உள்ளன உலகம் தோன்றியதில் இருந்து. உலகம் அழிய வில்லை, மீண்டு எழுந்து பயணித்து இருக்கிறது.இப்போதும் பயணிக்கும் ஆனால் பயணிகள் யார் என்பது படைத்தவன் கையில் மட்டும் தான்.நோயே விதியானால், மரணமே சில பேருக்கு வரம், எல்லா பற்றுகளில் இருந்தும் பிய்த்து கொண்டு போய் ஈசனின் திருவடியில் நம்மை சேர்த்து விடும்.
"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்"

No photo description available.

என்ன சொல்லி அழைப்பது ஈசனை

என்ன சொல்லி அழைப்பது ஈசனை . பித்தனா அல்லது என் அப்பனா என்று தெரியவில்லை. சிறு வயதில் இருந்து சிறு காயம் பட்டாலும் அம்மா என்று விம்மி விளித்தல் விலகி போய், ஈசனே என்று அலறிய அழுகுரலாக அது மாறி போனது. ஈசனை இஷ்ட தெய்வமாக ஏற்றால் கஷ்டம் மட்டுமே அவனின் கருணையாக உனக்கு வரும் என்று சொன்னவர் பல உண்டு.ஆனால் அவனே எனக்கு எப்போதும் இஷ்டமாக இருப்பதால் இன்னல்களிலும் ஒரு இன்பம் கண்டதுண்டு. வாழ்க்கை ஒரு நிரந்தமற்ற நிர்ணயத்தை நோக்கி நகர்கையில் ஈசனை பற்றிய நம்பிக்கையே அடுத்த நொடிகளை நடத்தி கொண்டு போய் உள்ளன. இதயத்தை இரு கூறாக பிளந்த வேதனைகளிலும், முதுகிலே வேலாக பாய்ந்த துரோகத்திலும் , மருந்தாக அவன் ஒரு போதும் வந்தது இல்லை, மாறாக தோழனாகவே வந்து உள்ளான். எந்த மந்திரமும் நினைவில் நின்றது இல்லை .அவன் பெயரை சொல்வதும் அவனை எப்போதும் நினைத்தலே நிறைவாக இருக்கிறது.
எல்லா ஈசனின் அடியார்களை போலும், எனக்கும் சிவராத்திரி அன்று எப்படியாவது சிவலோகம் போக வேண்டும் என்ற வேட்கை உண்டு. ஆனால் பிறப்பு அறுக்கும் எம்மானிடம், பிணைப்பு அறுத்தல் பற்றி யாசிக்கும் முன், பிள்ளை வந்து நாவில் நிற்கிறது. தரணியில் இருக்கும் எல்லா தந்தைகளுக்குமான தடுமாற்றம் தான் இது. தடுமாறும் போது எல்லாம் தாங்கி பிடிக்கும் தகப்பனாக ஈசனே நிற்கின்றான். அவதாரம் எல்லாம் அவனுக்கு அவசியம் இல்லை, எப்பொழுது கேட்பின் , அப்பொழுது அந்த கணமே இறங்கி வந்து உள்ளான். பாற்கடலின் அமுதத்தை மற்ற தெய்வங்கள் ஏற்க, இவன் மட்டுமே உலகம் காக்க ஆலகால விஷத்தை ஏற்றான். முக்தி தேடும் மனிதர் எல்லாம் பற்றி கொள்வது மஹா தேவரை தான். இச்சைகளை இழக்க துடிக்கும் எவரும் அடைய துடிப்பது இந்த தேவாதிதேவனை தான்.
பொருள் வேண்டுவர் இவர் பின் போவதும் இல்லை, அருள் வேண்டுபவரும் இவரை அணுகுவதும் இல்லை.
இவரை தேடி போவர்கள், தேடுவதும் , வேண்டுவதும், இவரை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஹர ஹர மகாதேவா !!

Sunday, January 21, 2018

பரதம் ஆடும் பெண்கள்

என்ன சொல்லுங்க, பரதம் ஆடும் பெண்களையோ, அவர்களை பார்த்தலோ ஒரு மிக பெரிய மரியாதையும் ஈர்ப்பும் வருகின்றன. அவர்களை பார்த்தால் ஒரு வித சந்தோசுமும் பெருமிதமும் வருகின்றன. அதுவும் வெளி தேசத்தில் பரத உடையுடன் அயல் நாட்டு பெண் சாலையில் கடந்து போவதை பார்த்தால் உள்ளம் பரவசம் அடைகிறது. மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து நண்பர்களிடம் சொன்னால் ஏளனமாக சிரிக்கிறார்கள். திருவான்மியூர் கோவிலில் ஒரு இளம்பெண் ஆடுவார், எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நின்று பார்த்து விட்டு வருவேன், அடுத்த முறை எப்ப ஆடுவார்கள் என்று விசாரித்து விட்டு போய் முதல் ஆளாக போய் கடைசியில் நின்று பார்த்து விட்டு வருவேன். பக்கத்தில் நிற்பவர்கள் ஏதோ ஏதோ முத்திரை என்று சொல்வர்கள். நல்லா ஆடுகிறார்கள் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றும் புரியாது, ஆனால் இது சிவனின் அபிநயம் என்று சொல்லும் போது , உள்ளம் அதிர தொடங்கி விடும். நண்பர்களிடம் சொன்ன போது சிரித்தார்கள். வந்து பார்த்து பெண் அழகாக இருக்கிறார்கள் என்றார்கள். போய் பேசு சுகன் என்றார்கள்.
ஒரு பெண்ணின் அழகில் மயங்கும் வயது தான் அப்போது எனக்கு, ஆனால் பரத உடையில் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை அப்படி பார்க்க ஏனோ தோன்ற வில்லை. என் அப்பன் ஈசனின் எல்லா கோலத்தையும் அபிநயம் காட்டி ஆடினார்கள். அர்த்தநாரிசுவார் கோலம் கொண்டு, இரு கால் மாற்றி ஒரு கால் அபிநயம் பிடிக்கும்போது சப்த நாடியும் ஒடுங்கி போனது. சில பாட்டிமார்கள் கீழே விழுந்து வணங்கினார்கள். என்னை அறியாமல் நானும் மண்டி இட்டு அழுது இருக்கின்றேன். “உன்னை அறிவது அடைவதும் எப்படி என்று தெரியாமல் அலைகின்றேன் ஈசனே, வாமனமாக வந்தவன் ஒரு கால் வைத்து ஒருவனை மண்ணுள் இழுத்தது போல், ஏற்றிய ஒரு காலை என் மேலும் வைத்து உன் பாதத்தில் என்னை ஏற்க கூடாதா என்று மனதிற்குள் புலம்பி இருக்கின்றேன்”. உடன் வந்த நண்பர்கள் கேலி செய்தார்கள்.
உன்னை விட கண்டிப்பாக மூன்று நான்கு வயது சின்ன பெண் அவர்கள், மண்ணில் மண்டி ஈடுகிறாய் என்றார்கள். இந்த பிறவியில் உயிரை மறித்து வைத்து இருக்கும் உடல் இருக்கும் வரை, ஈசனின் நடன கோலத்தை நேரிடையாக காண முடியாது, உடலை வெறுத்து ஈசனை தாண்டி உயிர் பறக்கும் போது தான் , ஈசனின் கோலத்தை காண முடியும். அதுவும் உடனடியாக ஈசனிடம் போக முடியாது. பக்கம் பக்கமாய் நிரம்பிக இருக்கும் பாவத்தின் கணக்கிற்கு எல்லாம் கணக்கு சொல்லி விட்டு, அந்த பரமனிடம் போகும் நாள் எக்காலமோ. காரைக்கால் அம்மையார் புராணம் படித்தால் உமையோடு பாகனாக உள்ளம் கவர் கள்வன் இறங்கி, ஆடிய ஆட்டம் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எப்படி ஆடினான் என்று யார் அறிவார், அந்த அம்மை மட்டுமே அறிவாள். ஆனால் பரதம் ஆடும் பெண்ணே ஆணோ , தத்ருபமாக இம்மையிலே காட்டுகிறார்கள். ஆலகால விஷத்தை ஈசன் எடுத்து அதிரத்தில் வைக்க அகிலாண்டேஸ்வரி அலறி வருவதை அபிநயமாக பிடிக்கிறார்கள். நம் மனமும் சேர்ந்து கரைகிறது. குழந்தை கண்ணனுக்கு யோசதை தாயார் உணவு தரும் நடனங்கள், பக்தியுடன் உற்று கவனித்தால் சரியாக புரியும்.
ஊர் திருவிழாவில், பல்லக்கில் ஏறி வரும் அம்மனை எப்படி பக்தியுடன் பக்தன் கை கூப்பி பார்கின்றானோ , அப்படி தான் பரத உடையில் இருக்கும் நபர்களையும் என்னால் பார்க்க முடியும், இதை யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. பரத உடைக்குள் அதை படைத்தவன் தென்படுகின்றான் என்று சொன்னால், மறை கழண்டு விட்டது என்றார்கள். என் காதுகளுக்கு எங்கேயாவது பரதம் ஆடுகிறார்கள் என்றால் யாரிடம் சொல்லமால், போய் பார்த்து விட்டு சத்தம் இல்லாமல் வந்து விடுவேன். பரதம் நம் பாரத தேசத்தின் பொக்கிஷம், பரத கலையை தன்னுள் ஏற்று அதை சரியாக நிகழ்த்தி பறை சாற்றுவார்கள் அதனின் பாதுகாவலர்கள்.

HALO GAME

ரொம்ப நாளாக halo கேம்மில் multiplayer பகுதியை தாண்ட முடிய வில்லை. killerking என்று பெயர் வைத்து கொண்டு ஒருத்தன் என்னை அந்த விளையாடில் துவம்சம் செய்து அடிப்பான். கிட்டத்தட்ட குறைந்தது ஆறு மாதமாக முயற்சி செய்து கொண்டு இருந்தேன். எப்படி விளையாடினாலும் கடைசியில் அழித்து விடுவான், எங்கோ கனடாவில் இருந்து விளையாடுகின்றான் போல. ரொம்ப நாள் கழித்து இன்று விளையாட request அனுப்பி இருந்தான். சரி இன்றாவது முயற்சி செய்யலாம் என்றென்னி, மூன்று மணி நேரமாக தாக்கு பிடித்து படைகளை கட்டி, பாதுகாப்பு படைகளை கோட்டைக்கு காவல் வைத்து, அவன் மேப்பில் இருக்கும் இடம் பார்த்து அடிக்க வேண்டும் என்று கிளம்பும் நேரத்தில், நண்பரின் நண்பர் என்று ஒருவர் வீட்டிற்கு வந்தார். ஜீ இது ஒண்ணுமே இல்லே ஜி, எல்லா கனரக ஆய்தத்தையும் தூக்கி பின்னாடி போடுங்கள், ஹெலிகாப்டரில் தூக்கி எல்லாவற்றையும் வைத்து கொள்ளுங்கள், மின்னல் வேகத்தில் போய் அடித்து விடலாம் என்று சொன்னார். ஜீ அப்படி எல்லாம் பண்ணால் நம்ம கோட்டை காலியாகி விடும்.
நம்மளை முடித்து விடுவார்கள், மூன்று மணி நேரம் தாக்கு பிடித்து நிலைகளை பலபடுத்தி உள்ளேன், கீழே போவது தான் பாதுகாப்பு, தரை படைக்கு பாதுகாப்பாக வான் படை இருக்கட்டும் என்றேன், இந்த இடத்தில் என்னால் save கூட செய்ய முடியாது, என்னால் மீண்டும் இவ்வளுவு நேரம் செலவு செய்ய முடியாது. என் நட்பு படைகளை முதலில் அழித்து விட்டான், நான் மட்டும் தான் எஞ்சி இருக்கின்றேன்.
நாம் பொறுமையாக நகர்ந்தால் மட்டும் தான் முழு வரைபடம் தெரியும். எதிரி mapல் இடம் மாறி கொண்டே இருப்பார் என்று சொல்லி பார்த்தேன். குருட்டாம் போக்கில் போய் இறங்க முடியாது ஜி என்றேன். மனுஷன் கேட்டாரா. ஜீ எத்தனை முறை விளையாடி உள்ளேன் சொல்லி, மொத்த படையையும் ஏற்றி, காவலுக்கு நின்ற படைகளையும் ஏற்றி, நேராக மேப்பில் ஒரு இடத்தில இது தான் killer king கோட்டையின் பின்புறம் என்று சொல்லி, நேராக எதிரி படைகளின் மையத்தில் போய் இறக்கி விட்டு சோலியை முடித்து விட்டார். மூச்சு விட கூட நேரம் இல்லை, மொத்தமாக முடித்து விட்டான் killer. அடுத்த ஒரு நிம்டத்தில், என் மொத்த கோட்டையும் அழித்து வெற்றி பெற்று விட்டான். next time best of luck rajendra chola என்று சொல்லி போய் விட்டான்.
ஜீ multiplayer விளையாடி இருக்கீர்களா என்று அந்த நபரிடம் கேட்டேன், multiplayer ன்னா என்ன ஜி என்றாரே பார்க்கலாம். மயக்கம் போடாத குறை தான் எனக்கு . வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வந்தது. நமக்கு மட்டும் தான் இப்படி நடக்கும்.

H ராஜா

ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவியுடன் கடுமையான விவதாம் நேற்று, ஹ.ராஜாவை பற்றி. H ராஜாவை அடக்கி பேச வேண்டும் , மதவாதி என்று. சரி ராஜா என்ன மதவாதமாக பேசி விட்டார்கள் என்று கேட்டேன். சிறுபான்மையினருக்கு எதிராக பேசுகிறார் என்றார்கள். இயேசு , முகம்மது நபி இல்லை என்று சொன்னாரா, இல்லை அவர்களை கும்பிட கூடாது என்று சொன்னாரா, இல்லை அவர்கள் மத நம்பிக்கையை இழித்து பேசினாரா, இல்லை மத மாற சொன்னாரா என்று கேட்டேன், பதில் இல்லை. விஜயை கிறிஸ்தவர் என்று சொல்கிறார். கிறிஸ்தவரை கிறிஸ்தவர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று கேட்டேன். பிஜேபி தான் ஹிந்து வாதம் பேசுகிறார்கள் என்றார். பேசினால் என்ன தவறு என்று கேட்டேன். இல்லை நான் ஹிந்து ஆனால் நான் மதவாதி அல்ல என்றார். ஹ ராஜா மாதிரி ராஜா இல்லை என்றார்.
சுள்ளேன்று கோபம் வந்து விட்டது. நீ ஏன் உன்னை அப்படி நினைத்து கொள்கிறாய் என்று சொல்கின்றேன், உன்னை சுற்றி ஹிந்துக்கள், உன் அடுத்த வீடு அதற்கு அடுத்த வீடு எல்லாம் ஹிந்துக்கள், உனக்கு மற்றவரை பற்றி பயம் இல்லை. மாற்று மதம் தெருக்களில் நீ வாழ்ந்து இருக்கிறாயா. USA வில் கூட கவனமாக அதிகமாக இஸ்லாமியர் வகிக்கும் குடி இருப்புகளை தவிர்த்து இங்கே வீடு எடுத்தாய் என்று என்னிடம் சொன்ன நீங்கள் மதவாதிகள் இல்லை. ஆனால் ஹிந்துக்களை எச்சரிக்கும் ஹ ராஜா மதவாதி.
H ராஜா என்ன சொல்கிறார், ஹிந்து மதத்தை அசிங்க படுத்ததாதீர்கள், நீங்கள் மாற்று மதத்தவராக இருந்து கொண்டு ஹிந்து மதத்தை விமர்சனம் செய்யாதீர். அப்படி விமர்சிக்க வேண்டும் என்றால் எல்லா மதத்தையும் விமர்சனம் செய்யுங்கள். என்ன தவறு. உங்கள் சுயநலத்திற்காக வீட்டிற்குள் ராமரையும், கிருஷ்னரையும், சிவனையும், பெருமாளையும், விநாயகரையும் விழுந்து விழுந்து கும்பிட்டு விட்டு , வெளியே வந்து அந்த தெய்வங்களை செருப்பால் அடிப்பேன் என்றும், கல் என்றும், சாத்தான் என்று, கற்பனை கதைகள் என்று பேசுபவனை மறந்தும் மதவாதி என்ற சொல்ல மாட்டீர்கள். உங்கள் நட்பில் இருக்கும் எந்த மாற்று மத நண்பர்களாவது மறந்தும் அப்படிபட்ட விசயத்தை தவறு என்றோ , நான் கண்டிக்கின்றேன் என்றோ முக புத்தகம் உட்பட எங்கேயும் பதிவு செய்ய மாட்டார்கள்.
ஆனால் ஹிந்து மதத்தை இழிவாக பேசுபவர்களை கண்டிக்கும் ராஜாவை அசிங்கபடுத்தி வரும் அத்தனை விசயத்தையும்உங்கள் மாற்று மத
நண்பர்கள் விளம்பரம் செய்வார்கள், நீங்களும் சேர்ந்து அந்த எச்சிலை தொட்டு மீண்டும் உமிழ்வீர்கள். உங்கள் மாற்று மத நண்பர்கள் அவர்கள் மதத்திற்கும், அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கும் உண்மையாக இருக்கிறார்கள். நீங்கள் என்றாவது உங்கள் தெய்வத்திற்கு உண்மையாக இருந்து இருக்கீர்களா.
ஹிந்து மதம் என்று யார் இங்கே குரல் எழுப்பினாலும் அவன் தன் மதத்திற்கு விரோதமானது என்று மாற்று மதம் தன் மக்களுக்கு உளவியல் ரீதியாக சொல்கிறது. பயந்து போய் நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவரும் இருக்க வேண்டுமா. கோழைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தைரியமாக பேசுபவரை மத வாதி என்று ஏளனம் செய்கீற்ர்கள். ஹ ராஜாவை பற்றி கேவலமாக போடும் மீம்ச்களை மீள் பதிவு செய்வோர் , என்றாவது , கிறிஸ்தவ , இஸ்லாமிய தலைவர்களை கிண்டல் அடித்து வரும் விசயத்தை ஷேர் செய்ய வேண்டாம், முடிந்தால் படித்து பார்க்கவாது தைரியம் உண்டா. ஹிந்துக்களை ஆரிய வந்தேறி என்று வசைபடுவானை தான் தங்கள் தலைவன் என்று உங்கள் மாற்று மத நண்பர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை என்றாவது உணர்ந்தது உண்டா. என்ன சொன்னாலும் உங்கள் காதில் விழாது.. ஏன் என்றால் 80 கோடி ஹிந்துக்கள்ளில் ,75% கோடி ஹிந்துக்கள் நிம்மதியாக வாழ காரணம் 5 கோடி ஹிந்துக்கள்வாது தைரியமாக எதிர்த்து போராடுகிறார்கள். அதில் சொகுசுக உக்காந்து கொண்டு , அந்த 5 கோடி பேரை இழிவுபடுத்தி கொண்டு உள்ளீர்கள்.
சிஸ்டர் அடுத்த முறை உங்கள் நெற்றியில் போட்டு வைக்கும் போது, நினைவில் கொள்ளுங்கள், அது உங்கள் கணவரின் வாழ்வு உங்களுக்கு பெற்று தந்தது அல்ல, அது பல தலைமுறைகளாக ஹிந்துக்கள் குருதி சிந்தி நமக்களித்து விட்டு போன கொடை.
குறிப்பு: அந்த தம்பதியருக்கு ---->இந்த பதிவை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கான பதிவு மட்டும் அல்ல, உங்களை போன்ற ஆயிரக்கணக்கான கோழைகளுக்கு சமர்பணம்.  

ஈசனை நினையாது எந்த நிமிடங்களும் என் வாழ்கையில் நகர்ந்ததே

ஈசனை நினையாது எந்த நிமிடங்களும் என் வாழ்கையில் நகர்ந்ததே இல்லை. பாசம் காட்டும் தாய்மார்கள் நிறைந்த கூட்டத்தில், பிள்ளை தன் தாயை சரியாக தேடி ஓடி கட்டி கொள்வது போல், ஆலயம் முழுவதும் எத்தனை தெய்வம் சூழ்ந்து நின்றாலும், மனம் ஈசனையே தேடி அவன் கால்களை கட்டி கொள்ளவே விரும்புகிறது. மற்ற தெய்வத்தின் மீது எனக்கு எந்த மனக்குறையும் எனக்கில்லை. எந்த தேசத்தில் வீற்று இருந்தாலும், சலனமற்றே சங்கரன் காட்சி தருகின்றான், சலனமற்று இருப்பது சவம் என்கிறரர்கள, இல்லை அது சிவம் என்கிறார்கள், எது எப்படி போயினும் எது சலனமற்றதோ , எதை அறிவது சாத்தியம் அற்றதோ , எது எல்லா சர்வ காலத்திலும் சஞ்சரித்து கொண்டு இருப்பதோ , அதன் முன் நிற்கும் போது சஞ்சலங்கள் வருகின்றன. எத்தனை சங்கடம் வந்தாலும் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் என்னிடம் அறுபட கூடாது என் ஐயனே என்று வழக்கமான வேண்டுதல் வருகையில் பிள்ளையை பற்றிய சிந்தனை வருகிறது. எனக்கு துணையாக வந்தது போல், என் பிள்ளைக்கும் துணையாக வா என் ஐயனே, எந்த நிலையிலும் என் மகனை மறுத்து விடாதே என்று பலமான வேண்டுகோள் வருகிறது. வேண்டி கொண்டு இருக்கும் போது, கையில் சிறிது பிரசாதம் தந்து விட்டு போகிறார் ஒரு பெண்மணி. எனக்கும் மட்டும் கொடுக்க வில்ல, அங்கே இருந்தவர்களுக்கு அவர் கொடுத்து கொண்டு போனார். ஆனால் எனக்கு அது என் ஐயன் கொடுத்தது. அப்படி தான் என்னை போன்றவர்களுக்கு தோன்றும். கண்ணில் ஜலம் கட்டியது, அந்த இடத்தை விட்டு நகரலாம் என்றால், திருநீறு எடுத்து கொள்ள வேண்டும்.
இந்திய கோவில்களில் நாமலே திருநீறு எடுத்து கொள்ளலாம், இங்கே போன முறை நானே தட்டில் இருந்து எடுத்த போது , நாங்கள் தருகிறோம், யாரும் தட்டில் கை வைக்காதீர்கள் என்று சொன்னதால். அங்கே வேலையில் இருந்து ஒரு அர்ச்சகரிடம் வேண்டினேன். பைரவர் பூசை முடிந்து தருகின்றேன் என்றார். சரி என்று ஒரமாக ஈசனுக்கு நேராக கண்ணை மூடி உக்காந்து கொண்டு இருந்தால், மொத்த வாழ்க்கையும் நிழற்படமாக உள்ளே ஓடியது, ஈசன் என்ற பெயர் மட்டும் உள்ளே பதியாமால் போய் இருந்தால், தயங்கி தயங்கி தடுமாறி தவித்த என் வாழக்கை தறிகெட்டு ஓடி இருக்கும். தடுமாறி தளர்ந்து இருந்த போது, தில்லைநாதன் என் தாயுமானான். உதவி உதவி என்று உள்ளம் ஊமையாக விழுந்து உழன்றிய போது என் உள்ளம் கவர் கள்வனாக உள்ளே நுழைந்தான். மரித்து கொண்டு இருந்த மனம் மலர்ந்தது. சிந்தனைக்குள் சிவன் வந்த போது சித்தம் தெளிந்தது. சிற்றின்பம் எல்லாம் சிதைந்து போய், அவனே பேரின்பமாக எனக்கு தெரிந்தான். நீ மட்டும் வராமல் போய் இருந்தால் ஈசனே நான் என்னவாகி போய் இருப்பேன் என்று யோசிக்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது.
இந்த வாழ்வு என் பெற்றோர் ஆசியிலும் , உன் கருணையிலும் மட்டும் நிகழந்தது, பெற்றவர்க்கு பொறுப்பான பிள்ளையாக இருக்கின்றேன் பிள்ளையாக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டு உள்ளேன், நீ நல்ல பிள்ளை என்று தழுவி கொள்கிறார்கள். , ஆனால் உனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, என் தாய் தந்தையர் என்னை கட்டி கொள்வதை போல், என்னை நீ கட்டி கொள்ள மாட்டாயா, என்னை உன் பக்தன் என்று கொள்ள மாட்டாய. உன்னை நேராக காண வேண்டும், அத்தனை நாயன்மார்கள் உன்னை கண்டு இருக்கிறார்கள், என்னால் முடிய வில்லை , உன் அருகாமை எப்போதும் உணர்கின்றேன், ஆனால் உன்னை அறிவதும் அடைவதும் எனக்கு கை கூட வில்லை, என்ன் செய்தால் என்னை ஏற்று கொள்வாய் ஈசனே , நான் மட்டும் தான் இப்படி புலம்புகின்றேனா, இல்லை உன் பக்தர்கள் எல்லாரும் இப்படி தான் உள்ளே அலறுகிறார்களா என்று தெரிய வில்லையே. விடை தெரியாத இந்த வினாவானது, விழிஇமையில் விழிநீராக விடை பெற்றது. நெற்றியில் யாரோ கைப்பட, திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தால், அர்ச்சகர் நெற்றியில் தீருநீறு வைத்து, “we cannot reach/wake him, he is untouchable by anyone, but if you touch his heart, he will come for you, I do not know what is your problem , but your tears make him listen, whatever you pray, he will listen, do not worry ” என்று சொன்னார். அவரை கை எடுத்து கும்பிட்டு விட்டு, திருநீறை நெற்றி நிறைய அள்ளி பூசி கொண்டேன் , காரில் ஈசனை பற்றிய பாடல்கள் போட்டு கொண்டு வீட்டிற்கு திரும்பி வர மனம் அமைதியானது.
LikeShow more reactions
Comment

திருவண்ணாமலை கோவில்

காலையில் நண்பர் ஒருவர் திருவண்ணாமலை கோவில் தேர் பவனி வீடியோவை அனுப்பி இருந்தார். நல்ல கூட்டம் , ஒரு நண்பரும் பார்த்து கொண்டு இருந்தார் , என்ன இவ்வளவு கூட்டம் இந்த பாட்டிகள் எல்லாம் விழுந்தால் என்ன செய்வது, வீட்டில் இருந்த படியே பார்த்து இருக்கலாம் அல்லவா என்றார் சலிப்பாக. இதே கேள்வியை அதே திருவண்ணாமலை தேர் திருவிழாவில் நானே நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருந்த பாட்டியிடம் கேட்டு பல வருடத்திற்கு முன் கேட்டு இருக்கின்றேன். என் பாட்டி கஷ்டப்பட்டு கொள்கீறிர்கள், வடம் பிடித்து இழுக்க உங்களால் முடியாமா, விழுந்தால் என்ன ஆவது, விலகி கொள்ளுங்கள் என்றேன்.
ஐயா, இது வடம் அல்ல, அது ஈசனின் கை, என் வாழ்நாள் முழவதும் என்னை கை பிடித்து அழைத்து போய் இருக்கின்றான், அவரை தவிர வேறு யாரும் எனக்கு நினைவு இல்லை. இன்று ஒரு நாள், ஈசனின் கை பிடித்து நான் அழைத்து போகின்றேன், முடியாமல் போனால், அவனே என்னை அழைத்து கொண்டு போகட்டும் என்றார். அப்போது ரெண்டு கெட்டான் வயது. கூட்டமாக என் வயது ஒத்த மங்கைகள் கடந்து போனால், மதி மயங்கும் வயது. என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. சிறிது தூரம் கடந்தவுடன் ,தேரின் மேல் இருந்தவர் சிலர், சில மாலைகளை கழற்றி வீசி எறிந்தார்கள், என்னை தாண்டி தேர் வடம் பிடித்து கொண்டு இருந்த அந்த பாட்டியின் தோளில் ஒரு மாலை வந்து விழுந்தது. அது தற்செயலாக கூட இருக்கலாம்,
ஆனால் பாட்டி சர்வேசா சர்வேசா என்று கை கூப்பி அழுதது. இறை திரும்பி பார்த்து இருக்கிறது என்று தான் உணர்ந்தேன். அது கயிறு என்று அந்த பாட்டி கருத வில்லை, அது அந்த கயிலை நாதனின் பொற்கைகள் என்று உணர்வுப்பூர்வமாக உருகி நிற்கிறார், ஒரு கயிறு அந்த பாட்டியை கடவுளடன் சுலபமாக இணைக்கிறது. தேர் ஏறி வருவது தெய்வம் என்று எனக்கு தெரியும், நானும் கையில் வடத்தை பிடித்து இருந்தேன், எதிர் திசையில் நின்ற கன்னியரை பார்த்து சிரித்ததும் அவர்கள் என்னை பார்த்து சிரித்ததும், அதையும் தாண்டி தெரிந்த உணவகத்தில் புரட்டோ சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும், தங்கும் விடுதியில் விட்டு வந்த பைக்கில் யாரும் பெட்ரோல் எடுத்து இருக்க கூடாது என்ற எண்ணம் தான்மாறி மாறி வந்தது.
என்னால் ஏன் பாட்டி மாதிரி யோசிக்க முடிய வில்லை என்று தோன்றியது. பாட்டி வயது இருந்தால் நான் யோசித்து இருப்பானோ என்ற சிந்தனை வந்தது. ஆனால் சிறு பிள்ளைகள், தன் சித்தத்தில் , சிவனை சிறைபிடித்து ஆளுடைய பிள்ளை என்று நாயன்மாரரக நிமிர்ந்து நின்ற வரலாறு படித்தது உண்டு. வயது என்பது விஷயம் அல்ல, உள்ளத்தில் யாரை வைக்க வேண்டும் என்பதில் தான் விவரம் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
பாட்டி நகர்ந்து போனது, அவர்கள் என்னை விட்டு நபரும் முன்பு, அவர்கள் காலை தொட்டு வணங்கி கொண்டேன், எதுவும் சொல்லாமல் அதற்கு கிடைத்த மாலையை எனக்கு கொடுத்து விட்டு போனார்கள். பைக்கில் திண்டிவனம் வரும் வரை அழுகை வந்து கொண்டு இருந்தது. 2௦14 வரை அந்த மாலையை பத்திரமாக வைத்து இருந்தேன். இடைப்பட்ட காலங்களில் மீண்டும் திருவண்ணாமலை போய் இருக்கின்றேன், அந்த பாட்டியை சந்திக்க சந்தர்பம் கிடைக்க வில்லை. ஒரு வேலை அடுத்த தேர் விழாவிற்கு போய் இருந்தால் சந்தித்து இருக்கலாமே என்னவோ. ஈசனே அறிவான்

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...