Thursday, May 26, 2016

ஸ்ரீரடி போக வேண்டும் என்று எனது தாயருக்கு நீண்ட நாட்களாக ஆசை.

ஸ்ரீரடி போக வேண்டும் என்று எனது தாயருக்கு நீண்ட நாட்களாக ஆசை. என்னிடம் சொல்ல தயக்கம். ஏன் எனில் எனக்கு மகான்கள் மேல் மரியாதை உண்டே தவிர பக்தி இருந்தது இல்லை. உலகில் அனைவரும் இறையின் பிள்ளைகள். இறையுடன் பேசுவதற்கு இன்னோர் துணை எனக்கு தேவை இல்லை. என் குரல் அந்த இறையை எட்டும் என்பது என் எண்ணம். அது மட்டும் அல்ல, குரு என்று ஒருவரை பற்றி கொள்ள சீடன் என்ற தகுதி வேண்டும். சீடன் என்ற தகுதி ஒரு போதும் எனக்கு வரப் போவதில்லை. கட்டற்ற என் மனம் கட்டளைகளை ஏற்கும் கண்ணியத்தில் இல்லை.

மற்றும் ஒரு காரணம், குறிப்பாக இந்த தேசம் அன்னியர் ஆட்சியில் அடிமை பட்டு சின்னாபின்னமாகி கொண்டு இருந்த போது, பல மகான்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். அற்புதங்கள் செய்தவர்கள் எவரும் என் தேசத்தை மீட்டு எடுக்கும் மீட்பராக இல்லாமல் இருந்தார்கள் என்பது இன்று வரை எனக்கு வேதனையாகவே இருக்கிறது.

என்னை பற்றி அறிந்த என் தாய் தயக்கத்துடன்
இருந்தார். நிலையற்ற வாழ்கையில் நாளை என்பதை பற்றிய நம்பிக்கை எனக்கு குறைய தொடங்க, சீக்கிரம் அம்மாவை அழைத்து சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து Anbudan Sharavanan அவர்களை தொடர்பு கொண்டு , பயணத்தை உறுதி(may4th, May5th, 2016) செய்து கொண்டேன். அப்பா கிராமத்தில் வேலை இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார்
என் தாயிற்கு வியாழக்கிழமை சாய் பாபாவை தரிசிக்க வேண்டும் என்பதே நோக்கம். புதன் வியாழன் இரண்டு நாளும் சாய் தரிசனம்.
புதன்கிழமை அதிகாலை 5.15 சென்னையில் இருந்து விமான பயணம். அம்மாவிற்கு முதல் முறை விமான பயணம். உள்ளே மிக ஆனந்தம் எனக்கு. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எந்த பிள்ளைக்கும் , என் ஆனந்தம் புரியும். ஏழு மணி அளவில் புனேவை அடைந்தோம்.

அங்கே இருந்து சீரடி நோக்கி மினி பேருந்தில் பயணம். போகும் வழியில் அஷ்ட விநாயகா கோவிலில் ஒன்றான மகாகணபதி கோவிலில் தரிசனம். சுயம்பில் உருவான கணபதி என்று சரவணன் அவர்கள் கோவில் வரலாறு பற்றி சொல்கிறார். சுயம்பு லிங்கம் பற்றி அறிந்து இருந்த எனக்கு சுயம்பு கணபதி என்ற ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந்தோம்.

மத்திம அளவு உடைய கோவில். முழு முதற் கடவுள் முன்பு முதல் தரிசனம், தாய் தந்தையர் தான் உலகம் என்று சொல்லி ஞானப்பழத்தை பெற்று , மற்ற பிள்ளைகளுக்கு யாரை முதலில் வழிபட வேண்டும் என்று சொன்ன பிள்ளை அல்லவா இவர். சுற்றி வந்தால் சிறிய சிவலிங்கம் அதன் அருகே அர்ச்சகர். “இன்று பிரதோஷம்” என்று உற்சாகமாக தாய் சென்று வழிபட்டார். நம் தோஷங்களை தொலைக்கும் தெய்வத்திற்கு முன் நாம் நிற்கும்போது “நாம்” தொலைந்து போகின்றோம். தாய் போலாம் என்று சொன்னதால் “நாம்” உயிர் பெற்று , ஆலயத்தை விட்டு வெளி வந்தோம்.

அங்கிருந்து மீண்டும் பயணம். நடு வழியில் “SMILE STONE” என்ற உணவகத்தில் காலை உணவு. இட்லியும் தோசையுமாக வயிறு நிரம்பகிறது. சரவணன் “எதை பற்றியும் கவலை கொள்ளாமல் , என்ன வேண்டுமோ விரும்பி வாங்கி சாப்பிடுங்கள்” என்று விருந்தோம்பல் செய்து கொண்டே இருக்கிறார்.

உச்சி பொழுதில் தங்கும் விடுதி அடைந்தோம். நல்ல உணவுக்கு பிறகு , நானும் சரவணன் அவர்களும் தரிசனத்திற்கான அடையாள சீட்டை பெற்று வந்தோம். மாலை நான்கு மணி அளவிற்கு சாய் தரிசனம் என்பதால் சிறிது ஒய்வு எடுத்து கொண்ட பிறகு, கோவிலை அடைந்தோம். ஒரு 1.5 கிலோமீட்டர் தொலைவில் கோவில்.

சுற்றி கூடாரங்கள் வைத்து வெயில் தெரியாமல் வைத்து இருக்கிறார்கள் கோவிலை சுற்றி. மொபைல் கேமரா எதுவும் அனுமதி இல்லை என்பதால் எல்லாவற்றையும் விடுதியில் வைத்து விட்டோம்.

முதலில் சமாதி மந்திர். உள்ளே நுழைந்தால் சிறிய சிறிய சுற்றுகளை கடந்து பாபாவின் தரிசனம். பாபா உக்காந்து கொண்டு இருக்கிறார். தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயிர் உள்ள ஒரு பெரியவர் அமர்ந்து இருப்பது போல் பிரமை ஏற்படுகிறது.

என்ன ஒரு கனிவான முகம். மெல்ல தடுமாற்றம் பரவுகிறது நம்மிடம். செய்த பிழைகள் நம் கண் முன் வந்து நம்மை செயல் இழக்க செய்கின்றன. உண்மை அவரின் முகம் வழியாக நம் உள்ளத்தில் ஊடுருவி பொய்யான நம் மனதை உடைக்கிறது. “பாபா பாபா” என்ற பல உதடுகள் அலறுவதை உணர முடிகிறது. நாம் தூரத்தில் நிற்கும்போதே , நம்மை உணர செய்கிறார் என்பதை விழிக்குள் வதைபடும் விழிநீர் உணர்த்துகிறது.

அருகாமையில் நெருங்க நெருங்க மனம் நிலை பெறுகிறது, பாபாவின் கண்கள் நமக்கு பின் வருபவரை நோக்கி பயணிக்கிறது. “என் அருகாமையில் நீ வந்து விட்டாய் அல்லவா இனி பயம் இல்லை உனக்கு, நான் அடுத்த பக்தனிடம் செல்கின்றேன்” என்பது போல் எனக்கு பட்டது. பாபாவின் முன் வணங்கி விட்டு அவரை பார்த்து கொண்டே வெளியேறினால் , மீண்டும் அவரின் கண்களிடம் அடிமையாகின்றோம். மெல்ல விடுவித்து கொண்டு வெளி வந்தோம்.

சாய் அமர்ந்து அருள் செய்த வேப்ப மரத்தடிக்கு சரவணன் அழைத்து சென்றார். எப்போதாவது விழும் வேப்ப மர இலையை எடுப்பதற்கு என்று ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கிறது. சுற்றி வந்து விழுந்து வணங்கி வெளி வந்தோம்.
அதன் பின் சாய் உபயோகபடுத்திய பொருட்களை காண அழைத்து சென்றார். சாயின் பூத உடலை வைத்து இருந்த படுக்கையை காணும்போது ஒரு வித சோகம் பற்றி கொள்கிறது.

பின்பு சாயின் விபூதி பெற்று கொள்ள சென்றோம், ஒரு சிறிய சுண்டு விரல் அளவு உள்ள பொட்டலம் தருகிறார்கள். ஒன்றுக்கு மேல் தர மறுக்கிறார்கள். மக்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பெற்று கொள்கிறார்கள். நானும் சில முறை மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பெற்று கொண்டேன்.
அங்கே இருந்து சாய் ஆரத்தி எடுக்கும் இடத்திற்கு ஆழைத்து சென்றார் சரவணன். துளசி மாட அளவில் தத்தாரேயர் கோவில். ஒவ்வொருமுறை ஆரத்தி எடுத்து முடிந்த பின்பு சாய் இங்கே சுற்றி வரும் பழக்கம் வைத்து இருந்தார். சமீபத்தில் குழந்தை வரம் வேண்டி ஒரு பெண்மணியும் அவரது அம்மாவும் சுற்றிய போது, சாய் அவர்கள் பின் தென்பட்டதாகவும் , சிறிது காலத்தில் அந்த பெண்மணிக்கு குழந்தை பிறந்தாதகவும் சொன்ன போது, மனம் அதிர்ந்தது.

அறிவுக்கு என்று அவதரித்த தத்தாரேரை சுற்றும் போது, சாயும் வருகிறார் என்பது செய்தி , கொஞ்சம் யோசித்து பார்த்தால் பரம் ஆத்மாவை ஜீவ ஆத்மா சுற்றுகிறது போலும்.

அடுத்து அணையா விளக்கு தரிசித்தோம்.

வெளி வந்து துவாரகாமாய் நோக்கி போனோம். இது சாயி பாபா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்கி உறங்கிய இடம் என்று சரவணன் விளக்கமளித்தார். ஒரு மசூதி போல் இருக்கிறது. ஒரு அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டு இருக்கிறது , பாபா பயன்படுத்திய கல்லால் ஆன இருக்கையை வைத்து இருக்கிறார்கள்.

மௌனமான இடமாக இருக்கிறது. சிறிது நேரம் அமர்ந்தால் சில்லென்று மனம் குளிர்கிறது. “என்னிடம் இருந்து என்னை காப்பாற்ற சொல்லி தாருங்கள் , உங்களுக்கு கிடைத்த தெளிவு எனக்கும் கிடைக்க உதவி செய்யுங்கள்” என்று மனம் அந்த மகானிடம் மன்றாடுகிறது.

துவாரகாமாய் அருகே சாவடி என்று ஒன்று இருக்கிறது. அங்கே பாபா தங்கும் பழக்கம் உண்டு என்றார் சரவணன். ஆண்கள்/பெண்கள் என்று தனியாக உள்ளே சென்று பார்க்கும்படி வைத்து இருக்கிறார்கள்.

அதனை தொடர்ந்து , பாபாவின் நண்பர் அதுல் பாபா இருந்த இடத்திற்கு அழைத்து சென்றார். இவர்தான் பாபாவிற்கு குர்ஆன் வாசித்து காண்பிப்பார் எனவும் , பாபா உயிருடன் இருக்கும் போதே இவர் தான் ஆரத்தி காண்பித்தார் எனவும் சரவணன் மூலம் அறிகின்றோம். மகான்களின் தோழர்களும் இங்கே மகான்களாக கொள்ளப்படுவது இயல்பு.

எல்லாம் முடிந்து வெளியே வந்தோம். ஒரு ஓரமாக அமர்ந்து அம்மா பாபா சுய சரிதை படிக்கத் தொடங்க, என்ன செய்வது என்று புரியாமல் கோவில் எதிரே அமர்ந்து கொண்டேன். உற்று பார்த்தல் எங்கே நோக்கினாலும் பாபாவை பற்றிய செய்திகள். காலங்கள் கடந்தும் ஸ்ரீடியை பாபா இயக்கி கொண்டு இருக்கிறார். அவரை மையம் வைத்தே சீரடி சுழல்கிறது. வழக்கம் போல் இஸ்லாமியர்களை விட ஹிந்துக்கள் அதிகம் தென்படுகின்றார்.

அன்று இரவு நல்ல உணவிற்கு பிறகு நல்ல உறக்கம். அடுத்த நாள் மீண்டும் காலை பாபா தரிசனம். அம்மாவிற்கு வியாழக்கிழமை தரிசனம் என்பதால் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் பாபாவின் முன் நிற்கும்போது அதே பயம், அதே தடுமாற்றம் எனக்கு. வெளி வந்து மீண்டும் புதன்கிழமை சுற்றிய அதே முறையில் மீண்டும் ஒரு தரிசனம்.

அங்கே இருந்து தங்கும் விடுதி வந்து உணவருந்தி விட்டு கிளம்பினோம். சனிஷிக்னாபூர் கோவிலை நோக்கி பயணம். போகும் வழியில் கரும்பு சாறு பருகினோம். சீரடியில் இருந்து நாப்பது கிலோ மீட்டர் உள்ள கோவில். வீடுகளில் கதவு கிடையாது என்ற சரவணன் விளக்கம் அளித்து கொண்டு இருந்தார். அப்படிதான் இருந்தன. ஆனால் இது மெல்ல வியாபார தளம் என்று ஆகி கொண்டு இருக்கிறது. வெளியூரில் இருந்து மக்கள் வருகின்றனர் என்பதால் சில வீடுகளில் கதவுகள் தென்படுகின்றன போலும்.

சனி மீது இப்போது நேரிடையாக எண்ணெய் ஊற்றும் வழக்கம் இல்லை. ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்ற வேண்டும், அது சனி பகவானின் மேல் ஊற்றும். அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர் சொல்லி ஊற்றி வந்தார். இந்த சனி சுயம்பு லிங்கம் என்று சொல்கிறார்கள். ஒரு பெரிய கருமை நிற கல்.
சங்கரனின் பெயர் பெற்ற சனி பகவான் சங்கடங்களை தீர்த்து கொண்டு இருக்கிறார். அங்கே இருந்து மீண்டும் கிளம்பி புனே விமான நிலையத்திற்கு பயணம். போகும் வழியில் “SMILE STONE” உணவகத்தில் சிறிது தேநீர் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்..

இரவு 8.30 மணி அளவில் புனேவை அடைந்தோம். ஸ்ரீ கிருஷ்ணா உணவகத்தில் இரவு உணவை சரவணன் அளித்தார். அங்கே இருந்து புனே விமான நிலையத்தை அடைந்தால, விமானம் ஒரு மணி நேரம் தாமதம்.
Anbudan Sharavanan அவர்களுக்கு நன்றி சொன்னேன். உண்மையில் இது நல்ல தெய்விக பயணமாக அமைந்தற்கு பாபாவின் கருணை மட்டும் அல்ல, இவரும் ஒரு காரணம். எந்த இடத்திலும் முக சுளிப்பு இல்லை. நட்பான உரையாடல்கள், திட்டமிட்ட செயலாக்கம். தெளிவான விளக்கம் தருதல். மிக சிறப்பாக பயணத்தை அமைத்து கொடுத்தார்.

இரவு ஒன்றரை மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். வீட்டிற்கு உள்ளே நுழையும்போது, வருட வருடம் இனி சாய் கோவிலுக்கு போய் வர வேண்டும் என்ற எண்ணமும் சேர்த்தே மனதினுள்
நுழைந்தது.





 

Monday, May 23, 2016

2016 தேர்தல் பிஜேபியின் நிலை

பிஜேபி ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியாதது வருத்தத்தை அளித்தாலும் , மீண்டும் DMK வர முடியாமல் போனது ஒரு விதத்தில் ஆறுதல் அளிக்கிறது பிஜேபி யை பொறுத்தவரை நரேந்திர மோடி தன்னால் முடிந்தவற்றை செய்து விட்டார். மத்தியில் ஆட்சியில் அமர்த்தி விட்டார். இன்றைய நிலைமை வரை, அவர் தான் மிக சிறந்த பிரதமராக இருக்கிறார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது , தமிழ் நாடு பிஜேபி எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்ய போகிறது. கண்டிப்பாக எல்லா மாநில கட்சிகளும் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்தத் தான் முயற்சிக்கும். எத்தனை MPகளை தமிழகத்தில் இருந்து நீங்கள் அவருக்கு தந்து உறுதுணையாக இருக்க போகிறீர்கள் என்று யோசியுங்கள்.
தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மக்களும் காலையில் எழுந்து படிப்பது தினசரி நாளிதழ்கள், செய்தி சேனல்கள்.
கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா செய்தி சேனல்களும் உங்களுக்கு எதிராக இருக்கின்றன. ஆன்மிக நம்பிக்கை கொண்ட நபரால் தொடங்கப்பட பாலிமர் தொலைக்காட்சி கூட மிக கவனமாக பிஜேபி பற்றி எதிர்மறை எண்ணம் வரும் அளவிற்கு தான் செய்திகள் தருகிறது. விகடனை பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களுக்கு எதிராக உங்கள் கட்சியின் சட்ட துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு எப்போதும் யார் முதல்வர் வேட்பாளர் என்று பார்த்து தான் வாக்கு அளித்து கொண்டு வருகின்றன. உங்கள் முதல்வர் வேட்பாளரை முதலில் தயார் செய்யுங்கள். அவரை முன் நிறுத்தி வேலை செய்யுங்கள். கண்டிப்பாக பலன் தரும்.
ரஜினிகாந்த் உட்பட எல்லா நடிகர்களையும் விட்டு விடுங்கள். அவர்களால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. உங்களால் அவர்கள் தான் பலன் அடைந்தனர். நெப்போலியன் வந்தார். என்ன விதத்தில் அவர் பிஜேபி க்கு உதவினார்.
கேரளாவில் கூட மாதா அமர்தான்மி அவர்களின் ஆதரவு பிஜேபி வேட்பாளர் அவர்களுக்கு கிடைத்தது. இங்கே எத்தனை மடங்கள் எத்தனை ஆன்மிக தலைவர்கள் உள்ளனர், அவர்கள் கூட ஏன் வெளிப்படையாக உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இல்லை. உங்கள் ஹிந்து மத பற்று கூட உங்களுக்கு உதவ வில்லை என்று யோசியுங்கள்
பல தமிழக பிஜேபி தலைவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்தனர் மறுக்க வில்லை. பல விவாதங்களில் நல் முறையில் பங்கு பெறுகின்றனர். ஆனால் இன்னும் போத வில்லை.
முக புத்தக போராளிகள் , பிஜேபி ஆதரவு நண்பர்கள் முக புத்தகத்தில் பிஜேபி யை பற்றி தவறான எண்ணம் பரப்ப படுவதை தடுகின்றனர், போராடுகின்றனர். அதற்கு மேல் அவர்களிடம் எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. களபணி வேறு விஷயம்.
அதிமுக, திமுக தலைவர்கள் உடல் அளவில் தளர்ந்து இருக்கிறார்கள். எதிர்காலத்தை காணும்போது அங்கே தலைவர்கள் தேவை வரும் என்று புரிகிறது
இங்கே தலைவன் யார் என்று பார்த்து தான் தொண்டன் உருவாகின்றான். முதலில் தமிழகத்தில் ஒரு தலைவர்/தலைவி கீழ் சேருங்கள் , அங்கே இருந்து பயணத்தை தொடங்க செய்யுங்கள்
கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை சுவைத்து விட்டனர், ஒரு முறை பிஜேபிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுப்பது தவறு இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன்

Friday, May 13, 2016

மறுத்தல் கூட மரியாதையாக வர வேண்டும்

ஒரு முறை உங்களை பற்றி எதிர் மறையான கருத்து சொல்கிறார்கள் உங்களிடம். நீங்கள் வருத்தம் அடைந்து உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள் . இரண்டாவது முறை உங்களை பற்றி மீண்டும் எதிர் மறையான கருத்து. மீண்டும் சுய பரிசோதனை செய்து உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறீர்கள். எல்லாம் சரியாகி விட்டது என்று நினைக்கும்போது , சாதாரண உரையாடலில் கூட உங்களிடம் கடுமையான வார்த்தைகளை கொண்டு காயபடுத்துகிறார்கள்.

இது சரியா என்று நாம் வலியோடு கேட்டால், நீ அணுகிய முறை சரியில்லை அதனால் உனக்கு கிடைத்தது என்று அவர்களின் கடுமையான வாரத்தைகளை நியாயபடுத்துகிறார்கள். இன்னும் ஒரு படி போய், முதல் முறை அவர்கள் நம்மிடம் என்ன எதிர்மறை கருத்து சொன்னார்களோ ,மீண்டும் அதில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்களும் அழுத்தத்தை பல பேருக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இன்னும் சற்று நிதானித்து பார்த்தால், அடிப்படையில் உள்ளுக்குள் அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு இருக்கிறது என்பது மெல்ல புரிகிறது. அப்படி நாம் என்ன செய்தோம் என்று கேள்விக்கு பதில் கடைசி வரை கிடைப்பது இல்லை.

மறுத்தல் கூட மரியாதையாக வர வேண்டும் என்பதை அறியாத மனிதர்களை விட்டு விலகுவதே அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது.

என் கல்லூரி வாழ்க்கை அது வேறு உலகம்

இன்று ஒரு கல்லூரி தோழர் ஒருவர் அழைத்து இருந்தார். அலைபேசியில், அவரின் உறவினர் ஒருவருக்கு வேலை வாய்ப்பு பற்றி அறிய. பேச்சு மெல்ல கல்லூரி வாழ்க்கை பற்றி திரும்பியது. அந்த கல்லூரி நாட்களில் அவர் என்னிடம் எப்போதும் எந்த மாதிரி கேள்விகளை கேட்டு கொண்டு இருப்போரே அதே மாதிரியான கேள்விகள், கிட்டத்தட்ட அதே பாணியில் பதில் அளித்து கொண்டு இருந்தேன். பேச்சு முடிந்த பிறகு, நீ கொஞ்சமாவது மாறி இருப்பாய் என்று நினைத்தேன் மாற வில்லை என்றார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. என்ன மாற வில்லை என்றேன். இல்லை கல்லுரியில் பேசி கொண்டு இருந்த அதே பேச்சுகளை தான் பதிலாய் தருகிறாய் என்றார்.

நானும் பதிலுக்கு நீயும் அப்படியே தான் இருக்கின்றாய் என்றேன். அவருக்கு வருத்தமாக போய்விட்டது. கல்லூரி நாட்களில் நீ என்னிடம் கேட்டாயோ அதே கேள்விகளை பனிரெண்டு வருடம் கழித்து கேட்கின்றாய். வேறு எதுவும் உனக்கு கேக்க தோன்ற வில்லை. அப்படி என்றால் நீயும் மாற வில்லை தானே என்றேன். வேகமாக மறுத்து விட்டு, நான் அப்படி, இப்படி என்று சொல்லி விட்டு , வேலை வாய்ப்பு பற்றி தகவல் தெரிந்தால் சொல் , என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்து விட்டார்.

கல்லூரி வாழ்க்கை அது வேறு உலகம். இன்று நின்று யோசிக்கும்போது , சில விசயங்களை நிதானித்து செய்து இருக்கலாம் அல்லது தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது இன்னும் நன்றாக படிப்பில் கவனம் செலுத்தி இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. வயதிற்குரிய குறும்புகளை ஒரு வரையறைக்குள் வைத்து இருந்து இருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. நான் செய்த சில வேலைகளை நினைத்தால் எனக்கே இன்று சிரிப்பாக வருகிறது. ஆனால் அது முடிந்த போன நாட்கள். அது முதிர்ச்சியற்ற பருவம், அப்படித்தான் இருந்து இருக்க முடியும் என்னால்.

இன்று அப்படி இல்லை. முப்பது வயதை தொட்ட போது நமக்குள் இருந்த முரண்பாடுகள் மரணித்து போகின்றன. மெல்ல ஒரளவு பக்குவம் முளைத்து வருகிறது. என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேச கூடாது என்று தெரிகிறது. யார் யாரை எல்லாம் விட்டு விலகி நிற்க வேண்டும் என்ற தெரிகிறது. சிந்தனைகளை சிதறடிக்கும் சில்லறை தனமான
சிற்றின்பம் விஷயத்தை  தவிர்க்க சொல்லி மனம் வேண்டுகிறது. கிட்டத்தட்ட இன்னொரு பட்ட படிப்பு மாதிரி. முழு முதுமை வந்து தழுவும்போது கூட , இந்த படிப்பை முடிக்க முடியாது என்று புரிகிறது

அந்த நண்பருக்கு ஏன் அது புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை. நான் மாற வில்லை என்று அவரே முடிவு செய்து விட்டார். அவர் மாறி விட்டார் என்றும் அவரே முடிவு செய்து கொண்டார். அதாவது எனக்கும் அவருக்கும் சேர்த்து அவரே நீதிபதியாக இருந்து தீர்ப்பு எழுதிக் கொண்டார்.

இது தீர்ப்பா அல்லது நம் தலைஎழுத்தா என்று அறியமுடியவில்லை. ஆனால் இந்த மாதிரி நீதிபதிகள் எல்லா உறவுகள், நட்பு வட்டத்தில் இருந்து நமக்கு சில சமயம் தலைவலியாக வருகிறார்கள் என்பதை அறிவேன்.

புத்த மத பயங்கரவாதத்தல் பாதிக்கபட்ட எம் இலங்கை தமிழ் ஹிந்து மக்களுக்கும் உதவி

மிக்க நன்றி. இது குறிப்பாக தங்கள் வீட்டு பெண்கள் , பாகிஸ்தானின்/பங்களதேஷ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இரையாகும் அவலத்தை தடுக்க முடியாமல் தவித்த ஹிந்து பெண்களின் பெற்றோர்களுக்கு வயிற்றில் பாலை வார்த்து இருக்கும். அப்படியே காலம் காலமாக எங்கள் தமிழக மண்ணில் அகதிகளாக தவித்து வரும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்த சலுகைகளை வழங்கினால் அதை விட பெரும் மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை.

முக்கிய விஷயம், தனி ஈழம் கண்டிப்பாக வர வேண்டும், அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. ஆனால் அந்த சுதந்திர ஈழத்தின் வரைபடத்தில் தமிழ் நாட்டையும் சேர்த்து காண்பிக்க போய் தான் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதுவே இந்திய அரசுகள் தன் நிலையை மாற்ற பெரும் காரணமாக இருந்தது. இலங்கை உறவுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்த இலங்கை உறவுகள் பணம் தான் கொடுக்க முடியும். ஆனால் விடுதலையை பெற்று தர முடியாது. யதார்த்தமாக யோசித்து பாருங்கள் , இங்கே உள்ள இலங்கை உறவுகள், தனி தமிழ்நாடு என்ற சித்தாந்தம் பற்றி பேசி கொண்டு இருப்பவர்களிடம் விலகி இருங்கள். வீரவோசம் காட்டி பேசுபவர்கள் பேசி விட்டு போய் விடுவார்கள். இழப்பு நமக்கு தான்.

ஹிந்துக்களின் தாய் நாடான இந்தியா ஒரு கண்ணில் சுண்ணாம்பும் , மறு கண்ணில் தேனையும் தடவ முடியாது.

பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதத்தல் பாதிக்கப்பட ஹிந்து மக்களுக்கு உதவி செய்த மத்திய அரசாங்கம் , புத்த மத பயங்கரவாதத்தல் பாதிக்கபட்ட எம் இலங்கை தமிழ் ஹிந்து மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும். அவர்களையும் இந்த தேசத்தின் குடிமக்களாக கருத வேண்டும். அதுவே நம் ஹிந்து மதம் பேசும் தர்மம்.


சன் டிவி நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி

சன் டீவி தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற உதவிய மூன்று காரணிகள் , சினிமா, அரசியல் , விளம்பரத்தில் வரும் வருமானம். மிக சரியாக நடிகர் சங்கத்தை தன் பக்கம் விழ வைத்து விட்டது. எந்த திருவிழா நாளும் , நடிகர்களின் பேட்டியையும், அவர்களின் புது படங்களையும் போட்டு, இடையே வரும் விளம்பரம் மூலம் கொள்ளை லாபம் செய்தது உலகம் அறியும்.

நம் அதி புத்தி சாலி நடிகர்கள் , கொஞ்சம் சரியாக யோசித்து இருந்தால் தங்களுக்கு என்று ஒரு தனி டிவி தொடங்கி, தனது சுப்பர் ஸ்டார்களின் மூலம் , மிக சுலபமாக விளம்பரங்களை ஈர்த்து நன்கு லாபம் பார்த்து இருக்க முடியும். தனது நலிந்த , நாடக கலைஞர்களுக்கு வேலை வாய்பை நிரந்தரமாக அளித்து இருக்க முடியும்.

பல திரை அரங்கம் காணமல் போனதற்கு காரணம் சன் டிவியின் கே டிவி என்பது நிதர்சன உண்மை.

இதை எல்லாம் விட்டு, சன் டிவியின் ஆக்டோபஸ் கரங்களுக்கு நடிகர் சங்கம் தன்னை பலி கொடுத்து விட்டது.

அமானுஷ்மாக இருக்க வாய்ப்பு இல்லை

நல்ல உறக்கத்தில் இருக்கும்போது , சட்டென்று அறை முழுவதும் மல்லிகை பூ வாசம் பரவுகிறது. மெல்ல கலவரம் பரவி விளக்கை போட்டு சிறிது நேரம் வைத்தாலும் தூக்கம் வர மறுக்கிறது. கல்லூரி நாட்களில் பார்த்த அத்தனை பேய் படங்களும், மனதில் மறு ஒளிபரப்பாகி தொலைக்கிறது. கந்த சஷ்டி கவசம் நம்மை அறியாமலே நம் வாயில் ஒலிக்கிறது.

சேலத்திற்கு நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் வழியாக பயணித்த போது, ஒரு முறை உளுந்தூர்பேட்டை சேலம் சாலையிலும் , மறுமுறை திருப்பத்தூர் வழியாக பயணித்த போது , ஊத்தங்கரையிலும் நெடிய மல்லிகை பூசம் வாசம் தழுவி சென்றது நினைவில் உள்ளது. அது பெரிய வியப்பை தந்தாலும் பயத்தை தர வில்லை. ஆனால் சாத்திய அறைக்குள் பூ வாசம் வரும் போது, , மனம் கொஞ்சம் ஆடித்தான் போனது .

அமானுஷ்மாக இருக்க வாய்ப்பு இல்லை என்று படித்த படிப்புகள் என்ன தான் கற்பித்தாலும் , மனம் என்னமோ சிறிது பதட்டத்து உடனே உறங்க செல்ல முற்பட்டது.

ஈடுகாட்டின் அரசன் என் ஈசன் , அவனே என் இறைவன் என்று அறிவு ஆண்டவனை சுட்டி காட்ட, சுடலையின் நாயகனை சுற்றி என் நினைவுகளை நிறுத்தி கொண்டதும் , நித்திரை நிம்மதியாக வந்தது.

சீமானின் கருத்தில் உடன்படுகின்றேன்

கருணாநிதி தோற்று விட்டால் , தமிழனை திட்டுவார் "நீ மானமுள்ள தமிழனா , சோற்றில் அடித்த பிண்டங்கலாகி போன தமிழனா" என்று .
 
 நாம் தமிழர் கட்சி தமிழனை திட்டி கொண்டு ஒட்டு கேட்கிறது. "பச்சை தமிழனா, மானமுள்ள தமிழனா , சூடு சொரணை உள்ள தமிழனா".

கருணாநிதிக்கும், சீமானுக்கும் முற்பட்டு இருந்து நாம் தமிழர்களாக தான் இருந்து வருகிறோம். இந்த இரண்டு பேருக்கும் ஒட்டு போட்டு தான் நாம் தமிழர் என்று நிருபிக்க வேண்டிய அவசியம் நம் தமிழர்களுக்கு இல்லை.

தமிழ் புத்தாண்டு அன்று விடுமுறை மறுத்த பல பன்னாட்டு நிறுவனங்கள் உண்டு. பொங்கல் பண்டிகைக்கும் விடுமுறை மறுத்த நிறுவனங்கள் உண்டு. சாதாரண படிப்பறிவு அற்ற மக்களும் வந்து போகும் வங்கிகளில் , தமிழே தெரியாத பல பணியாளர்களை தமிழகத்தில் பணி அமர்த்தி வாடிக்கையாளர்களை தினமும் வேதனை படுத்தும் வங்கிகள் உண்டு.

தமிழகத்தில் தங்கள் வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கும் பல பன்னாட்டு நிறுவங்கள் ,தங்கள் 24 மணி நேர தொலைபேசி உதவியில் ஒரு தமிழரை கூட அமர்த்தாமல் இருக்கும் நிலை உள்ளது.

ஏன் எனில் கேட்பார் யாரும் இல்லை. எங்கள் மண்ணை ஆண்ட யாருக்கும் நான் தமிழன் என்ற எண்ணம் இருந்தது இல்லை.

அதனால் சீமானின் கருத்தில் உடன்படுகின்றேன் " இந்த மண்ணில் யாவருக்கும் வாழ உரிமை உண்டு, ஆனால் இந்த மண்ணை ஆளும் உரிமை என்றும் "தமிழ் கலாச்சாரத்தை" மறவாது கடைபிடிக்கும் தமிழருக்கு மட்டுமே உண்டு"


Thursday, May 12, 2016

தெய்வமும் மனிதனும் ஒரே தளத்தில் வர முடியுமா?

திமுக பெரிய கருப்பன் அவர்களின் அந்தரங்க வீடியோவால், திமுகவிற்கு இழப்பு என்று சொல்ல முடிய வில்லை. தனி மனித ஒழுக்கம் என்பதே இங்கே மாயை என்று தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் பதிய வைத்து விட்டது. நன்றாக கவனித்து பார்த்தால், எப்போது தொலைகாட்சி தொழில்நுட்பம் இந்த மண்ணில் கால் பதிய ஆரம்பித்ததோ அன்றே தொடங்கி விட்டது.

ஒரு மனைவியுடன் வாழ்பவன் கெட்டவன் எனவும் , இரண்டு மனைவியுடன் வாழ்பவன் நல்லவன் எனவும், அவனே ஊர் நாட்டமை எனவும் பல தொலை காட்சி தொடர்களும் படங்களும் வெளி வந்தன. பற்றா குறைக்கு பல நடிகர்கள் , நடிகைகள் வெளிபடையாகவே அதை செய்தனர், அவர்களை புரட்சிகர நபர்களாக பார்த்தனர். 

சீர்திருத்தம் பேசிய புதிய சிந்தனை வாதிகள் , தான் வளர்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கலாச்சாரத்தின் உச்சம் தொட்டனர்.

தலைவர்கள் இன்னும் ஒரு படி மேல் போய் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று திருவாய் மலர்ந்தனர்.

தங்களின் சிற்றின்பதிற்கான சில்லறை வழிக்கு , தெய்வங்களை துணைக்கு அழைத்தனர். பல தாரம் செய்த தெய்வங்கள் , நம் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கும்போது, தெய்வத்தின் வழி முறையை நாம் என் ஏற்க கூடாது என்று விவாதம் செய்தனர். தங்களின் சரசத்திற்கான நியாயத்தை தேடிய கூட்டத்திற்கு இது தேனாக இருந்தது.

இங்கே தலைவனும் தொண்டனும் ஒரே சம தளத்தில் இயங்க முடியாத போது, தெய்வமும் மனிதனும் ஒரே தளத்தில் வர முடியுமா , தெய்வம் செய்த அத்தனை அற்புதங்களையும் மனிதன் செய்து விட்டு, தெய்வம் செய்த பல திருமணத்தை இங்கே மனிதன் செய்தலாம்.

கடவுள் இல்லை என்று மறுத்த கூட்டம், தன் தேகத்தை மையம் வைத்து தாங்கள் செய்த அற்ப தனமான செயலுக்கு "கடவுளை" சாட்சி ஆக்கியது.
அப்படி பேசியவர்களை தான் தமிழகம் தலைவன் என்று கொண்டாடியது. ஆக தனி மனித ஒழுக்கம் என்பதே தமிழகத்தில் கேலி கூத்தானது.

சீதா மாதேவியை காட்டிற்கு அனுப்பிய பின்பும் கட்டியவளை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறு எடுத்து பாக்காத ராமனின் நற் பண்பை பார்க்காமல் , சீதாவை காட்டிற்கு அனுப்பிய கதையை மட்டும் மேடை தோறும் பேசிய கூட்டம் அல்லவா நாம்.

நமக்கு பெரிய கறுப்பன்கள் புதிது அல்ல.
http://tamil.samayam.com/assembly-elections/special-news/dmk-ex-minister-periya-karuppan-filed-petition-in-high-court/articleshow/52222758.cms

Tuesday, May 10, 2016

தமிழ் மண்ணை நேசிப்பவர்கள் எல்லாம் தமிழர்களா?

இது ஒரு சிறு துண்டு. பல கூட்டம் இதை வெளிப்படையாகவே செய்தன. எது சிறுபான்மை உரிமை. என் வீட்டு படியேறி முருகனையும் , திருமாலையும் , ஈசனையும் மறுக்க சொல்லி விட்டு , இயேசுவை மட்டும் ஏற்க வேண்டும் என்று சொல்வது தானே.

தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசையும், அதற்கு போன திமுகவையும் , இவர்கள் ஆதரிக்க துணிய ஓரே காரணம் மதம். பிஜேபி யை விடுங்கள் , அது இவர்கள் பார்வையில் மத வாத கட்சி.

ADMK,PMK,MDMK,DMDK, நாம் தமிழர் கட்சி இத்தனை கட்சிகள் இருந்தும் , ஏன் திமுக , காங்கிரெஸ்க்கு ஒட்டு போட சொல்கிறார்கள்.

திமுகவின் தலைவர் ஹிந்து மத மறுப்பாளர். காங்கிரஸ் தலைவர் கிறிஸ்தவர். இந்த இரு கட்சிகளும் எப்போதும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலை செய்பவை. அதனால் இவர்களுக்கு அவர்களை பிடிக்கிறது.

ஏசுவிற்கு முன் வாழ்ந்த எங்கள் தமிழ் சித்தர்கள் செய்த அதே சித்து வேலைகளை தான் ஏசுவும் செய்தார். கூடு விட்டு கூட பாயுதல், உயிர்ப்பித்தல், இந்த எல்லாவற்றையும் எங்கள் தமிழ் மண் கண்டது உண்டு. அதனால் ஏசுவையும் ஒரு சித்தர் என்று நாங்கள் கொண்டாடி மகிழ்கின்றோம். மதிக்கின்றோம்.

சித்த மருத்துவம் படித்து பாருங்கள், எங்கள் சித்தர்கள் யார் என்று புரியும்.

1௦௦௦௦ வருடத்திற்கு முற்பட்டு வாழ்ந்து வரும் பெருமை மிகு எங்கள் தமிழ் இனத்திற்கு , இரண்டாயிரம் வருடத்திற்கு பின் வந்த கிறிஸ்தவத்தால் வாழ்வு வந்தது என்று நா கூசாமல் சொல்லி திரியும் இவர்களா , தமிழ் மண்ணை நேசிப்பவர்கள்.

தமிழ் மண்ணை நேசிப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று கொள்ள முடியாது. அந்த நேசிப்பின் பின்னே நம் தமிழ் மண்ணை களவாடுவதல் கூட அவர்கள் கருத்தாக இருக்கலாம். தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் அழித்து விட்டு, அவர்கள் மதத்தை தமிழ் மண்ணில் நிலை நிறுத்துவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கலாம்.

இவர்கள் மதம் நுழைந்த, எந்த தேசத்தின் ஆதி கலாசாரமும் நிலைத்து நின்றது இல்லை, என்பது உலகம் நமக்கு சொல்லும் வரலாறு.

ஒரு அந்நிய மதம், நம் மண்ணின் மைந்தர்களை கொன்றவர்களை , மீண்டும் நம் தமிழ் மண்ணில் மலர வைக்க முயல்கிறது.

அதை மறித்து , முறித்து போடுதலே , நம் தமிழ் மண்ணுக்கு நம் செய்யும் மரியாதை.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...