Friday, May 13, 2016

மறுத்தல் கூட மரியாதையாக வர வேண்டும்

ஒரு முறை உங்களை பற்றி எதிர் மறையான கருத்து சொல்கிறார்கள் உங்களிடம். நீங்கள் வருத்தம் அடைந்து உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள் . இரண்டாவது முறை உங்களை பற்றி மீண்டும் எதிர் மறையான கருத்து. மீண்டும் சுய பரிசோதனை செய்து உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறீர்கள். எல்லாம் சரியாகி விட்டது என்று நினைக்கும்போது , சாதாரண உரையாடலில் கூட உங்களிடம் கடுமையான வார்த்தைகளை கொண்டு காயபடுத்துகிறார்கள்.

இது சரியா என்று நாம் வலியோடு கேட்டால், நீ அணுகிய முறை சரியில்லை அதனால் உனக்கு கிடைத்தது என்று அவர்களின் கடுமையான வாரத்தைகளை நியாயபடுத்துகிறார்கள். இன்னும் ஒரு படி போய், முதல் முறை அவர்கள் நம்மிடம் என்ன எதிர்மறை கருத்து சொன்னார்களோ ,மீண்டும் அதில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்களும் அழுத்தத்தை பல பேருக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இன்னும் சற்று நிதானித்து பார்த்தால், அடிப்படையில் உள்ளுக்குள் அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு இருக்கிறது என்பது மெல்ல புரிகிறது. அப்படி நாம் என்ன செய்தோம் என்று கேள்விக்கு பதில் கடைசி வரை கிடைப்பது இல்லை.

மறுத்தல் கூட மரியாதையாக வர வேண்டும் என்பதை அறியாத மனிதர்களை விட்டு விலகுவதே அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...