Friday, September 18, 2015

லஜ்ஜா (Lajja)- அவமானம்- தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா (Lajja)- அவமானம்- தஸ்லிமா நஸ்ரின்
Lajjā- Novel by Taslima Nasrin

கிழக்கு பதிப்பகம் விலை-200

பங்களாதேஷ் எழுத்தாளர் எழுதிய நாவல். பங்களாதேஷில் சிறுபான்மையிரான ஹிந்து மக்கள் எப்படி அழிக்கப்பட்டனர் என்பதை இஸ்லாமிய பெண் எழுத்தாளர் பதிவு செய்து இருக்கிறார்.

எதற்காக இந்த பெண் எழுத்தாளரை கொல்ல அந்த நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயன்றனர் என்பது முதலில் புரிபடாமல் இருந்தது. புத்தகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்  அகோர முகத்தை பதிவு செய்கிறது. ஆனால் எந்த இடத்திலும் இஸ்லாத்தை விமர்சிக்க வில்லை.

பிறகு ஏன் தீவிரமாக வேகமாக எதிர்த்தார்கள் , இந்தியாவில் உள்ள இஸ்லாம் அமைப்புகளும் ஏன் தீவிரமாக எதிர்த்தார்கள். போதா குறைக்கு காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்ம் எதிர்த்தார்கள்.

விடை புத்தகத்தில் உள்ளது.

கதை இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பில் இருந்து தொடங்குகிறது. இடிப்பால் ஏற்பட்ட இன்னல்கள் பங்களாதேஷ் ஹிந்துக்களின் வாழ்க்கையை இருட்டில் தள்ளுகிறது என்ற வரிகளுடன் புத்தகம் நம்மை வரவேற்கிறது .

பாபர் மசூதியால் தான் ஹிந்துக்கள் வாழ்க்கை பாழாகிப் போனதோ என்ற கவலையுடன் தொடர்ந்து படித்தால், இல்லை பாபர் மசூதி நிகழ்வுக்கு முற்பட்டே அங்கே ஹிந்துக்கள் ஒழித்து கட்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்பதும், பாபர் மசூதி நிகழ்வை மிக சரியாக அங்கே இருந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள் உபயோகி படுத்திக் கொண்டனர் என்பதை புள்ளி விவரங்களுடன் புத்தகம் நம்மிடையே பகிர்கிறது.

இது எதிர் வினைக்கான, எழும் வினை அல்ல என்பதும், ஹிந்துக்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு தங்களது எதேச்சதிகார ஆளுமையின் அழித்து கொண்டு இருக்கும் அரசாங்கத்தையும் , அதற்கு ஆதரவு அளிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் இந்த புத்தகம் அம்பலபடுத்துகிறது

சுதந்திரக் காற்றை சுவாசம் செய்ய முடியாமல் தடுமாறி கீழான நிலையில் இருந்த கிழக்கு பாகிஸ்தானை  , பங்களாதேஷ் என்ற புதிய பரிமாணத்தில் பாரில் அறிமுகம் செய்தது எங்கள் பாரத தேசம் அல்லவா?

நட்பாக இருந்து இருக்க வேண்டிய அந்த தேசம் நம்பிக்கை துரோகம் செய்தது எப்படி. நன்றியுள்ள மனத்தினை மதம் மறித்து கொன்று, மதமே அங்கே மகுடம் சூடி இருக்கிறது. மாட்சிமை அற்ற அதன் ஆட்சியாளர்கள் , ஹிந்துக்களை அகதிகளாக அடித்து விரட்டி , இந்திய தேசத்தின் முதுகில் அல்ல, நேரடியாக நெஞ்சிலே வாளை சொருகி இருக்கிறார்கள்.

மதசார்ப்பற்ற அரசாங்கம் என்ற அறிவிக்க முயன்று தோற்று போய், முற்றும் இஸ்லாமிய தேசமாகி போன பங்களாதேஷ்ல் எப்படி ஹிந்து மக்கள் வேட்டையாடப் பட்டனர் அவர்கள் வீட்டு பெண்கள் எப்படி கற்பழித்து கொல்லப்பட்டார்கள், எப்படி வேலை வாய்ப்பில் மறுக்க பட்டனர் , எப்படி ஆயிரக்கணக்கான கோவில்கள் அழிக்க பட்டது என்பதை புத்தகம் அட்டவணை படுத்துகிறது.

இஸ்லாத்தை ஆட்சி அதிகாரமாக கொண்ட எந்த தேசத்திலும் , பிற மதங்கள் வாழ முடியாது என்ற கருத்திற்கு இது வலு சேர்க்கிறது. நிகழ் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை நினைவில் நிறுத்தினால், இஸ்லாமிய தேசத்தில் இஸ்லாமியர்கள் கூட வாழ முடியாது என்பதை முகத்தில் அடித்தார் போல் வரலாறு நம் கண் முன்னே எழுதிக் கொண்டு இருக்கிறது. அதற்கான முன்னுரை தான்  இந்த புத்தகம்

இஸ்லாம் மக்கள் பெரும்பான்மை கொண்ட தேசங்களான பாகிஸ்தானும் , பங்களாதேசம் வேறுபட்டு நின்றாலும் கொள்கை அளவில் ஒருமித்து நிற்கின்றன. காபீர்கள் அற்ற தேசம் என்ற கொள்கை அது.

நல்ல முஸ்லிம்கள் அங்கே இருந்தாலும், ஹிந்துக்கள் மீது நடக்கும் கொடுமைகளை தட்டி கேக்க முடியாமல் தளர்ந்து  போய் கிடப்பதையும், ஒவ்வார் முறையும் ஹிந்துக்களை காக்க முயன்று, கடைசியில் காக்க  முடியாத இயலாமையையும் புத்தகம் ஒப்புக் கொள்கிறது.

இன்றும் விழித்துக் கொள்ள மறுக்கும் இந்திய ஹிந்துக்களுக்கு இஸ்லாமிய தேசத்தில் இருந்து அனுப்பட்ட ஒரு எச்சரிக்கை கடிதம்,  புத்தகமாக கடந்து நம் கைகளுக்கு வந்து இருக்கிறது என்பதாக நான் கருதுகின்றேன்.

பிரித்து படிப்பதும், படிக்காமல் விடுவதும் அவரவரின் விருப்பம்.
ஆனால் நல் வாழ்விற்கான விருப்பம் , வாழ்வதற்கான வாழ்விடத்தை வகுத்து கொள்வதில் இருந்து தொடங்குகிறது.

இருக்கும் இடம் போனால் , இன்னோர் இடம் தேடி கொள்ளலாம். ஆனால் வாழ்விடம் எது என்று கூட அறிய முடியாமல் , ஒரு தேசமே களவு போவதையும், அந்த களவின் பின் நிற்பது ஒரு மதம் என்ற அறிய நேரிட்டால் என்ன செய்வது?

நட்பாய் நாம் இருக்க வேண்டும், ஆனால் நாம் தான் இந்த தேசத்தின் நாயகர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த தேசத்தின் இடங்கள் எல்லா மதத்தினரக்கும் பாத்தியபடும், பாதுகாக்க படும்.

இல்லை என்றால் ஒரு மதத்தினரக்கு  மட்டும் பதிவு செய்ய படும்.

http://sugashiva.blogspot.in/

Saturday, September 12, 2015

சிலுவை போர்கள் என்றும் சீக்கிரம் முடிவதில்லை.

மிக்க மகிழ்ச்சி. மனித நேயம் மிக்க செயல். ஆனால் ஜெர்மனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அகதிகள் என்ற அளவில் மட்டும் இவர்களை ஏற்று பாதுகாக்க வேண்டும். மிக முக்கியமாக இவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும். சிரியாவில் நிலைமை சீரான பிறகு திருப்பி அனுப்பி விடுங்கள். ஆனால் ஜெர்மானிய குடியுரிமையை மட்டும் வழங்கி விடாதீர்கள். வழங்கி விட்டால் இன்று மத சார்பற்ற ஜெர்மனி நாளை இஸ்லாமியக்க படும்.

சிலுவை போர்களால் பெற்று தர முடியாத இஸ்லாமிய ஐரோப்பாவை , இது சுலபத்தில் பெற்று விடும். கொஞ்சம் யோசித்து பார்த்தால், இது எங்கோ யாரோ மிக திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய நாட்டில் உள் நாட்டு கலவரத்தை ஏற்படுத்துதல். மக்களை துரத்தி விடுதல். மற்ற இஸ்லாமிய தேசங்கள் இவர்களை ஏற்க மறுத்தல், சொல்லி வைத்தார் போல், இந்த மக்கள் எல்லாம் ஐரோப்பிய தேசங்களில் தஞ்சம் புகுதல். 

ஒரு ஐரோப்பிய தேசம் இந்த மக்களை ஏற்ற உடன், மற்ற இஸ்லாமிய தேசங்கள் அந்த அகதிகளுக்கான மறு வாழ்வு பணத்தை கொடுத்தல். இது மிக கோர்வையான நிகழ்வு. நூல் பிடித்து கொண்டு போகிறது.

இது மிக சரியாக திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின் ஐரோப்பாவில் , இஸ்லாமிய குடியிருப்பை ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்ற ஒரே விஷயம், மிக சுலபமாக இஸ்லாத்தை அங்கே பெரும்பான்மை பெற செய்து விடும்.

அப்புறம் என்ன தஞ்சம் கேட்டு வந்த கூட்டம், அந்த தேசத்தில் பல தலைமுறை தொட்டு வாழ்ந்த கூட்டத்தை அடித்து விரட்டி, அவர்கள் கலாசாரத்தை அழித்து, அதை இஸ்லாமிய தேசமாக மாற்றும். இது கதை அல்ல. வரலாறு. மீண்டும் அந்த வரலாறு நிகழ்த்த பட கூடிய அபாயத்தை ஐரோப்பா எதிர் நோக்கி இருக்கிறது,.

உலக வல்லரசுகளான  அமெரிக்கா, ரஷ்யா , சீனா என்ற தேசம் இல்லாது போய் இருந்தால் , என்றோ ஐரோப்பா ஆக்கிரமிக்க பட்டு இருக்கும். முதல் இரண்டும் மத வெளிப்படை தன்மை கடைபிடிக்க பட்டாலும் , இரண்டும் கிறிஸ்தவ ஆளுகைக்கு உட்பட்டவை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றிய அச்சம் ரோம் வரை படர்ந்து  இருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதான தாக்குதலை வல்லரசுகள் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ரோமில் இருந்து கூட வந்து இருக்கலாம். யார் கண்டது.

ஐரோப்பாவில் இஸ்லாமிய அகதிகள் தஞ்சம் புகுவது,கண்டிப்பாக ரோமிற்கு நல்ல செய்தி அல்ல.

சிலுவை போர்கள் என்றும் சீக்கிரம் முடிவதில்லை.


0:04/1:02

21,830,646 Views
BBC News uploaded a new video: #MigrantCrisis.
"Welcome to Germany" - People applaud and greet migrants with gifts as they arrive in Munich
‪#‎DesperateJourneys‬
Live updates: http://bbc.in/1LQprLQ

Wednesday, September 9, 2015

பா ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம்.

பா ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம். இஸ்லாத்தின் உன்னத அரசனான சலாவுதீன் என்ற மனித நேயம் மிக்க மாமன்னரை பற்றி அறிமுகம் செய்தது பா ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” புத்தகம். அவரின் மற்றும் ஒரு படைப்பு இது.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய எல்லா கருத்துக்களையும் களம் காண்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் தேச பக்தி பற்றி சந்தேகம் இல்லை என்று சொல்லும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் இன் மீதான மாற்று மதத்தவரின் குற்றச் சாட்டை மறுக்காமல் பொது தளத்தில் வைக்கிறது.

தீண்டாமை அற்ற இயக்கம் ஆர் ஸ் ஸ் என்ற உண்மையை அழுத்தமாக ஆதாரத்துடன் சொல்கிறது. பாகிஸ்தானுடனான யுத்தத்திலும், சீனாவுடனான யுத்தத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்களிப்பை புத்தகம் உறுதி செய்கிறது. இந்திய தேசம் இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் போது, எப்போதும் இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பங்கேற்கும் செயலை மறைக்காமல் சொல்கிறது.

கோவாவை இந்திய தேசத்துடன் இணைத்து வைக்க அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ் என்ற வரலாற்றை அறிமுகபடுத்துகிறது.

காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் போராடிய கதையை சொல்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் , கிறிஸ்தவ மிசனரிகள் உடனான ஆர் ஸ் ஸ் இன் யுத்தத்தை பற்றி பேசுகிறது
பாபர் மசூதி இடிப்பு பற்றியும், மீனாட்சிபுரம் மதம் மாற்றம் பற்றியும், ஒரிசாவின் பாதிரியார் கொலை பற்றியும் சொல்லும்போது ஆர்.எஸ்.எஸ் இன் குழந்தைகள் என்று மற்ற ஹிந்து இயக்கங்களை குறிப்பிட்டு சொல்கிறது.

ஆர் ஸ் ஸ் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி இருந்தாலும், ஆர் ஸ் ஸ் என்ற ஒரு இயக்கம், இந்திய தேசத்தில் எழாமல் போய் இருந்தால் , இந்திய என்ற தேசத்தை மேலும் மதத்தின் பெயரால் வெட்டி பிளந்து இருப்பார்கள்.

ஹிந்து மதம் பெரும்பான்மை பெற்ற எந்த மாநிலமும் இந்த தேசத்தில் தனி நாடு கோருவதில்லை. ஹிந்து மதம் அழிந்து கிறிஸ்தவம் , இஸ்லாம் பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள் , நாகலாந்து , மிசோரம் , காஸ்மீர்.... மாநிலங்களில் தான் தனி நாடு கேட்டு போராட்டங்கள் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், ஆர் ஸ் ஸ்-இன் இருப்பு இந்த தேசத்தில் இருத்தல் மிக அவசியம் மட்டும் அல்ல, ஹிந்துக்களின் வலிமையான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

"பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).

" பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).
கிழக்கு பதிப்பகம் -விலை 175
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் இடையே நடைபெற்ற சம்பவங்களை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட நாவல். மிகுந்த சர்ச்சையில் சிக்கியது இது வெளி வந்த போது. தென் இந்திய மக்களை விட, வட இந்திய மக்கள் ஏன் பாகிஸ்தான் மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை சொல்லும் நாவல்.

தேசத்தை வெட்டி பிளந்தவர்களால் , இரு வேற்று மத சார்ந்த காதலை வெட்டி பிரிக்க முடியாமல் போன கதை பற்றி பேசுகிறது. தேசமே சகிப்புத்தன்மையை தூக்கி சாக்கடையில் எறிந்த போது, ஹிந்து, முஸ்லிம், சீக்கிய மத மக்கள் வாழ்ந்த கிராமம் மட்டும் சகோதரர்களாக வாழ முற்பட்ட கதை.

இந்தியாவில் இருந்து செல்லும் முஸ்லிம் அகதிகளை ஏற்றி கொண்டு பாகிஸ்தான் போகும் ரயிலை தொடர்ந்து கதையும் பயணிக்கிறது. நம்மால் தான் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஆரம்பித்த "நேரடி நடவடிக்கை " என்ற செயல் பல ஹிந்து மக்களை கொன்றொழிக்க, பதில் நடவடிக்கை இந்தியாவில் ஆரம்பித்தது என்பது தான் வரலாறு.

இந்த புத்தகம் கற்பனை கலந்த கதை என்று வாதிடுபவர்கள் இன்று பாகிஸ்தான் என்ற தேசத்தில் ஹிந்துக்களின் சதவிகிதததை எடுத்து பார்த்தால், கதையின் பெயர்கள் கற்பனையாக இருந்தாலும் , அதன் கதையின் கரு, பிரிவினையின் போது தான் பிரசவித்து இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய தேசம் என்று வக்காலத்து வாங்கும் நடுநிலை வாதிகளின் கவனத்திற்கு. இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்றதால் அங்கு இஸ்லாமியர் அல்லாதவர் வாழ வழி அற்று போனது என்ற உண்மையை மற்றும் உணருவதில்லை.

ஹிந்துக்கள் பெரும்பான்மை பெற்ற தேசம் தான் தன்னை மதசார்பற்ற நாடக பறை சாற்றியது. அதற்கான பலனை என் தேசம் இப்போது அனுபவிக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் ரயில் தான் ஹிந்துக்கள் சீக்கியர்களின் உயிரற்ற பிணத்தை எடுத்து வந்தது என்பது வரலாறு.

வரலாற்றை வரிகளில் விட்டு விடாமல், நமது வாழ்வாதாரத்தின் வாழ்வின் ஒரு பகுதியாக வரித்து கொண்டால். அடுத்த தலைமுறையின் வாழ்க்கை இந்த தேசத்தில் வளமாகும்.

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன். விகடன் பிரசுரம். விலை 290.
உலக சரித்திரத்தில் எப்போதும் நம் பழமை வாய்ந்த கலாச்சார பெருமை மிக்க பாரதம் தனக்கான ஆளுமையை எல்லா இடத்திலும் பதிவு செய்து வந்து இருக்கிறது. என் இந்திய தேசம் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உலகத்திற்கு அளித்து வந்து இருக்கிறது. அது ஆன்மிகமானாலும் சரி, அறிவியல் ஆனாலும் சரி.

புத்தகத்தின் பல பகுதி அதற்கான பக்கங்களை வாசிக்க நமக்கு தருகிறது. உச்சத்தில் இருந்த பருத்தியை எப்படி ஆங்கிலயேன் அழித்தான் என்பதை உதாரணத்துடன் படிக்க நேர்கையில் உள்ளே உக்கிரம் வருகிறது. சீன பயணிகளின் கண்டு அதிசியத்த இந்தியா என்று எழுதப்பட்டதை படித்த நம்மிடம், பழமை வாய்ந்த இந்தியாவில் பயணித்த ரஷ்யா பயணிகளின் பயணத்தோடு நம்மை அழைத்து செல்கிறது. 

சாந்தி நிகதேன் என்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் கதையை நம்மிடம் கற்பிக்கிறது. இந்திய சுதந்திர போரில் ஈடுபட்ட தலைவர்களின் சுவாசத்தை சுமந்த சென்ற ஆசாத் இந்தியா வானொலியின் வரலாற்றை பேசுகிறது. இன அழிப்பிற்கு உட்பட்ட ஆர்மினியர்களின் அவல நிலைமையும் , அவர்களை தாயாக அரவணைத்த இந்தியாவையும் அறிய வைக்கிறது.

தீண்டாமை என்ற தடுப்பு சுவர், இந்தியாவின் மக்களில் மனதில் கட்டப்பட்டு இருந்ததை அறிந்த ஜோதிராவ் புலே என்ற மனிதர், அதை இடிக்க புறப்பட்டதையும், அதற்காக காந்திக்கு முன்னரே அவருக்கு மகாத்மா என்ற பட்டம் வழங்கப்பட்டதையும் பட்டியல் இடுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இவர், மேலே படிக்க வேண்டும் என்ற ஊக்குவித்த இஸ்லாமிய ஆசிரியரையும், இவர் தொடங்கிய பள்ளிக்கு பல பிரமாணர்கள் உதவி செய்ததையும் அறிய நேரும் போது, நற்பண்பு என்பது சாதி மதம் கடந்த மனிதர்களின் நல்ல அன்பு என்பதை ஆணித்தரமாக சொல்கிறது.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட நம் மனதின் மன நிலையும் புரண்டு போகிறது. நமக்கான வரலாறு நமக்கான இந்த பாரத தேசத்தில் புதைந்து இருக்கிறது. வெறும் எலும்பு கூடுகளை எடுத்து காட்டி நம்மை ஏமாளியாக்கி கொண்டு இருந்தார்கள். மறைக்க பட்ட இந்தியா புத்தகம், புதைக்கபட்டு நம்மிடம் இருந்து, மறைக்க பட்ட மாமனிதர்களை பற்றி பேசுகிறது. அவர்களின் ஊடே நமது மகதோன்மை கொண்ட மாட்சிமை தாங்கிய நமது தாய் தேசத்தை பற்றிய அறிவை நமக்கு ஊட்டி செல்கிறது.
Suganthan Rajamanickam's photo.

Monday, August 31, 2015

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம்.
ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்கிறது. இயேசுவை பற்றி இன்னோர் பரிணாமத்தில் சொல்கிறது. புண்ணிய பூமியான பாரத தேசம் , ஆன்மிகத்தின் மையப்புள்ளியாக தொன்று தொட்டு எப்போதும் இருந்து வருகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஐரோப்பாவை சேர்ந்த மக்களுக்கு ஆன்மிக பிச்சை போட்ட அட்சய பாத்திரமாக நமது பாரத தேசம் விளங்கி இருக்கிறது.

ஆண்டவனால் அனுப்பப்பட்ட இறைவனின் பிள்ளைக்கும் இந்த தேசமே ஆன்மிக பள்ளியாக இருந்து, அவதாரங்களுக்கு ஆண்டவன் யார் என்று அறிவித்து இருக்கிறது.

ஆங்கிலத்தில் கவர் ஸ்டோரி ஆக சில வலைதளங்களில் இதை படித்து உள்ளேன். தாய் தமிழில் இன்று தான்  விரிவாக இப்போது தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

புத்தருக்கும் , யேசுவுக்கும் , கிருஷ்ணருக்கும் உள்ள பல ஒற்றுமைகளை இந்த நூல் பைபிள் கதைகள் வைத்தே வெளிபடுத்துகிறது.

யாராக இருந்தாலும், இயேசுவை சிலுவையில் அறையப்படும் அந்த காட்சிகளை கண்டால் , நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணிற் வந்து விடும்.

சக மனிதன் கொடூரமாக கொல்லபட்டால் , எந்த இதயமும் கண்ணிற் வடிக்கும். கிறிஸ்தவம் உளவியல் ரீதியாக இதை நன்கு பயன்படுத்தி கொள்கிறது என்று ஒருமுறை நண்பர் சொன்னார்.

கிராமங்களில் இயேசு சிலுவையில் அறையப்படும் காட்சிகளை காட்டி , அந்த மக்கள் மன ரீதியாக இரக்கத்தின் விளிம்பில் இருக்கும்போது, மிக சுலபமாக அந்த மக்களிடம் இயேசுவை விற்று விடுவார்கள் என்று சொன்னார்.

உண்மை தான் , என்ன தான் கிறிஸ்தவ மத மாற்றிகளின் மீது எனக்கு கோபம் இருந்தாலும் , கிறிஸ்துவின் மீது இன்று வரை எனக்கு துவசேம் வராமல் இருக்க , இயேசுவின் சிலுவை காட்சிகள் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகம் அவரின் உயிர்த்தெழுதல் பற்றி வேறு கதை சொல்கிறது, அதற்கு பைபிள் வார்த்தைகளை கடன் வாங்கி புதிய அர்த்தம் சொல்கிறது. மத்தேயு எழுதிய நற்செய்தி, மாற்கு எழுதிய நற்செய்தி,லூக்கா எழுதிய நற்செய்தி, யோவான் எழுதிய நற்செய்தி போன்ற பைபிளின் நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை கோடிட்டு காட்டுகிறது.

இது எல்லா மதங்களின் நூல்களில் காணப்படும் பொதுவான விஷயம்தான்.
ஆனால் கிறிஸ்தவத்தின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றி இருக்கும் முரண்களை நூல் ஆசிரியர் சுட்டி காட்டுவது கிறிஸ்தவத்தின் அடித்தளத்தை அசைக்கும் முயற்சியாக தெரிகிறது.

இயேசு உயிர் தப்பித்து இந்தியா வந்து வாழ்ந்தார் என்பதை புத்த மத நூல்ளில் இருந்து வரலாற்று ஆதாரமாக காட்டுகிறார். உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் விஷயம். இறைவனின் பிள்ளை இந்தியாவில் இருந்தார் என்பது.

இந்த நூல் இயேசுவை எந்த இடத்திலும் மறுக்க வில்லை. மறைக்க வில்லை. உண்மையில் அவரின் அற்புதங்களை ஒத்து கொள்கிறது. ஆனால் இயேசுவின் அற்புதங்கள் , இந்தியாவில் இருந்து பெறப்பட்டது என்றும், அவரின் ஆன்மாவை தொட்ட ஆன்மிகம் , புத்த மதத்தில் இருந்தும், ஹிந்து மதத்தில் இருந்தும் வந்தது என்று சொல்கிறது.

கிறிஸ்தவ மத மாற்றிகள் நம்ப மாட்டார்கள். வேளாங்கன்னியில் அயல்நாட்டு அன்னை காட்சி கொடுத்தது என்றால் கண்ணை மூடி கொண்டு நம்புவார்கள் அதே சமயத்தில் சமயபுரத்திலும், பவானி கூடு துறையிலும் உள்ள எங்கள் அம்மன்கள் அயல்நாட்டை சேர்ந்த ஆங்கிலே அதிகாரிகளுக்கு அற்புதங்களை காட்டியதால், அந்த ஆங்கிலே அதிகாரிகள் நன்றி கடனாக அந்த கோவில்களுக்கு செய்த அறப்பணிகள் வரலாற்று பட்டயமாக இன்றும் பதிந்து உள்ளது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். இன்று வரை எனக்கு இவர்களின் நம்பிக்கை பற்றி விசித்திரமாக இருக்கிறது.

ஒரு ஹிந்து வேளாங்கன்னியையும், சமயபுரத்தியையும் நம்புவான். எங்கும் நிறைவது இறை என்பதில் பெரு நம்பிக்கை கொண்டவன் அவன். அதனாலே அவன், ஹிந்து மத தெய்வங்களின் அவதார தலங்களை தவிர்த்து , இஸ்லாமியரளும், கிறிஸ்தவர்களாலும் ஆக்கிரமிக்க பட்ட எந்த ஹிந்து கோவிலையும் திரும்ப பெற நினைப்பது இல்லை.

எங்களுக்கு வேளாங்கன்னி கோவில் எதுவாக இருந்தது என்றும், பரங்கி மலை எந்த முனிவரின் வாழ்விடமாக இருந்தது என்றும் தெரியும். மீண்டும் அந்த இடங்களை ஹிந்துக்கள் கேட்காமல் இருக்க காரணம், அந்த இடங்கள் இன்று மற்ற மத நம்பிக்கையாளர்களின் ஆன்மிக இடமாக உள்ளது.

“ஆன்மிகத்தை எந்த ஆண்டவர் சொன்னால் என்ன , கோவில் இருந்த இடத்தில மீண்டும் கோவில் தானே வைத்து உள்ளனர் , நல்லது!! எப்படியோ அந்த இடம் புனிதமாக உள்ளது” என்ற ஆன்மிக அடிப்படையில் தான் ஹிந்துக்கள் கேட்பதில்லை என்பதை மற்ற மதங்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்பதே வேதனையான விஷயம்.

புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான் , நூல் ஆசிரியர் இப்படி சொல்கிறார்,

“சர்சுகள் இயேசுவின் உலக மக்களுக்கான நற்செய்தியை , இயேசுவை பற்றிய நற்ச்செய்தியாக மாற்றி , இயேசுவை ஒரு வியாபார பொருள் ஆக்கியது தான்”
சத்தியமான வரிகள்!!

https://www.facebook.com/photo.php?fbid=799662790099940&set=gm.801675569895546&type=1&theater

 

Sunday, August 23, 2015

அப்துல் கலாம்!!

இந்திய தேசம் மௌனமான அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. மெல்லிய வலி எல்லோர் உள் மனதினுள் பாய்ந்து இருக்கிறது. இந்தியாவிற்கான வல்லமை வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டது என்று அயல் நாட்டு அடிமைகள் கூவிய போது, இல்லை உள் நாட்டிலே அதற்கு உரம் இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தியவர்.

தாய்நாட்டையும் தாய் தமிழையும் உளமார நேசித்தவர். உலகத்தில் இந்தியாவின் இருப்பானது , அதன் இளைய சமுதாயத்தை பொறுத்து அமையும் என்பதை புரிந்து கொண்டு, எண்பது வயதிலும் இருபதை , இந்தியாவை நோக்கி இழுத்து கொண்டு இருந்தவர். 

எப்போதுதாவது பூக்கும் அதிசய மலர்களை போல் இந்த தேசத்தில பூத்தவர். அப்துல் கலாம்கள் அழிவதும் இல்லை, இனி தோன்றுவதும் இல்லை.
அணுவை பிளந்து கொண்டே போக முடியுமே தவிர அழிக்க முடியாது.
அக்னி குஞ்சொன்று, விண்ணுலகை எட்ட தன் சிறகை விரித்தது.

Rest In Peace Sir

யாருடன் யாரை ஒப்பிடுவது?

பெருவாரியான என் தேசத்து மக்கள் கலாமை தங்கள் ஆதர்ச நாயகனாக கருதி கொண்டாடி வருகின்றனர். ஆனால் கலாமை சேர்ந்த சமுதாய மக்கள் சிலர், கலாமிற்கும் தீவிரவாதியான யாகுப்க்கும் சேர்த்து மௌன அஞ்சலி செய்து கொண்டு வருகின்றனர். இதை விட பெரிய அவமரியாதையை கலாமிற்கு யாரும் செய்து விட முடியாது

யாருடன் யாரை ஒப்பிடுவது? மனித நேயம் பேசிய மகாத்மா எங்கே, மரணத்தை மாற்று மதத்தவருக்கு வழங்கிய மரண வியாபாரி எங்கே?
எந்த சமுதாயத்தின் மேல் வன்முறை முத்திரை விழுந்ததோ , அந்த சமுதாயத்தில் இருந்து முத்தாய் எழுந்த அப்துல் கலாமை , கேவலமான யாகுபின் மரணத்துடன் ஒப்பிடு செய்து எழுதி கொண்டு உள்ளீர்கள்.

இந்தியா என்ற இந்த தேசத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே முடிவானது என்பதை ஏற்று கொண்ட எங்கள் மக்கள் வாழும் நேரத்தில் , ஏன் இந்த பிரிவினர் மட்டும் உச்ச நீதிமன்றத்தால் தீவிரவாதி என்ற தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும் யாகுப்கிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

ஏன் என்றால் அவர்களுக்கு இறுதி தீர்ப்பு தரும் வல்லமையை அவர்கள் ஆண்டவன் மட்டுமே பெற்று இருக்கிறார். இந்தியாவின் நீதித்துறையை அவர்கள் ஏன் மதிக்க வேண்டும்?. வாழும் தேசத்தை மதிக்க வேண்டும் என்று எங்கேயாவது அவர்கள் புனித புத்தகத்தில் எழுதி வைக்க பட்டதா என்ன?. அவர்கள் மத கொள்கை படி, மாற்று மதத்தினரை கொல்ல வேண்டும், உலகத்தின் பார்வையில் அவர்கள் தீவிரவாதிகள் என்றாலும் , இவர்கள் பார்வையில் அவர்கள் தியாகிகள், நிராபரதிகள்.

இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்கு இந்தியாவில் வாழ வேண்டும். எங்கே அவர்கள் மத சட்டங்கள் ஆட்சி அரியணையில் வீற்று இருக்கிறதோ அங்கே போய் அடைக்கலம் ஆக வேண்டியது தானே. அல்லாவின் கருணையை எதிர்பார்த்து இருந்தவர்கள் , ஏன் குடியரசு மாளிகைக்கு கருணை மனுவை அனுப்பி வைத்து கொண்டு இருந்தீர்கள்?

நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் , நாங்களா இவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்தோம். எவன் குண்டு வைத்தானோ அவனே சொல்லிக் கொண்டான். நாங்கள் இஸ்லாமிற்கு ஆக செய்தோம் என்று. நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களை புறந்தள்ளி விட்டிர்களா? இல்லை, அவர்களை கொண்டாடி மகிழ்ந்தீர்கள். மத தியாகிகள் என்று மகுடம் சூட்டினீர்கள்.

கோவை குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்ட மதனியாயை , இஸ்லாமிய சமுகம் எவ்வாறு முன்னிலைபடுத்தி கொண்டாடி மகிழ்ந்தது என்பதை நீங்கள் மறந்து இருக்கலாம், நாங்கள் மறக்க வில்லை.

கலாம் இந்தியர் என்ற உணர்வோடு வாழ்ந்தார். மாற்று மத கோவில் என்றாலும் சற்றும் தயங்காமல் , தரிசனம் செய்து விட்டு வந்தார். அல்லாவை ஹிந்துக்கள் ஆலயத்திலும் அடையாளம் காண முடியும் என்பதை உணர்த்தினார். இறைவன் எல்லை அற்றவன், எல்லாம் அற்றவன் , எங்கும் நிறைபவன் என்பதை உணர்ந்த உத்தமர் கலாம்.

யாகுப் , இந்தியாவை எதிர்த்தார்.மாற்று மத மக்கள் கொல்லப்பட போகிறார்கள் என்று தெரிந்த பின்பும், துணிந்தே அந்த துச்ச செயலுக்கு துணை நின்றார். விமர்சனம் வந்த பிறகே , தன்னால் வீழ்ந்தவர்களுக்கு ,வருத்தம் தெரிவித்தார்.

மதத்தை பின் தள்ளி , மக்களையும் , மண்ணையும் நேசித்தவர் மக்கள் ஜனாதிபதி.

மக்களையும், மண்ணையும் புறந்தள்ளி, மதத்தை நேசித்தவன் யாகுப்.
உங்களை தூண்டி விட்டு கொண்டு இருக்கும் நாத்திக நயவஞ்சக கூட்டம் உங்களை நல்வழிப்படுத்தி கொண்டு இருக்கிறது என்று இன்னுமா நம்பி கொண்டு இருக்கீர்கள்?

என் தேசத்து மக்களை காதலித்தவருக்கும், என் தேசத்து மக்களின் கழுத்தை அறுத்தவனக்கும் , ஒன்றாக நீங்கள் வருத்தம் தெரிவித்த போதே, நீங்கள் வாழும் தேசத்தை விட்டு வழி தவறி விட்டிர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

உங்களை கூடிய சீக்கிரம் இந்த தேசம் ஒட்டு மொத்தமாக விலக்க போகிறது என்பதை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்

சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழி!!

சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழி மிகுந்த வலியை கொடுக்கிறது. திருநள்ளாரில் இருந்து திருவண்ணாமலை செல்ல எத்தனித்த என்னை, திருநள்ளார் கோவிலில் முடித்த உடன் வீடு தான் செல்ல வேண்டும் என்று கோவிலில் இருந்தவர்கள் சொல்லி விட , தந்தையும் அவ்வாறே செய் என்று சொல்லிவிட , சேலம் வீட்டிற்கு வந்து விட்டு , அன்று இரவே திருவண்ணாமலை நோக்கி கிளம்பினேன்.

வாகனத்தில் செல்ல தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், பேருந்தில் பயணித்தேன். ஊத்தங்கரை வரை சாலைகள் சரியாக தான் உள்ளன. அதற்கு பிறகு அது சாலைகள் இல்லை, சவக்குழிகள். எப்படி தான் மக்கள் இந்த வழியில் பயணத்தை மேற் கொள்கிறார்கள் என்று கவலையாக இருந்தது.
உடம்பும் மொத்தமும் வலி. பெரியவர்கள் தடுமாறி போனார்கள். குழந்தைகள் பேருந்தின் ஒவ்வார் அதிர்விற்கும் அதிர்ந்து அழுதது.

எந்த தனியார் பேருந்தும் அந்த சாலையில் வருவதில்லை. சாலைகள் போடாத அரசாங்கத்தை திட்டுவதா அல்லது எப்படியும் அரசாங்க பேருந்து இந்த வழியில் வரும் என இந்த சாலைகள் ஓரத்தில் காத்து கொண்டு இருக்கும் மக்களின் நம்பிக்கையை பொய் என்று ஆக்கமால், மிகவும் சிரமத்திற்கு இடையில் பேருந்தை இயக்கம் ஓட்டுனரை பாராட்டுவதா என்று புரிய வில்லை.

தட்டு தடுமாறி தவழந்த பேருந்து ,.செங்கத்திற்கு சற்று முன்பாக தொடர முடியாமல் நின்று போனது இரண்டு பனிரெண்டு மணியளவில். நடத்துனர் பின்னாடி வந்த இன்னோர் பேருந்தின் நடத்துனருடன் பேசி எங்களை அதில் ஏற்றி விட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு, கொட்டும் மழை, வயல்காடு மாதிரி இடத்தில பேருந்தில் வெளிச்சம் இல்லாமல், நின்று போன பேருந்துடன் என்ன பண்ண போகிறார்கள் என்ற புரியாமல் திருவண்ணாமலை பயணித்தேன்.

இரவு 1.30 மணி அளவில் கோவில் அருகே இறக்கி விட பட்டோம்.
கிரிவலம் முடிந்து இரண்டு நாட்கள் கழிந்த பிறகும், இரவில் கிரிவலம் அதுவும் மழையில் போய் கொண்டு இருக்கிறார்கள். நெஞ்சத்தை கிள்ளியவனின் கோவில் வாசலில் நெடுண்சாடையாக விழுந்து எழுந்தேன்.

விடுதி எடுத்து உறங்கினேன். அடி முடி காண முடியாதவன் எனக்கு அனுப்பிய பரிசிற்கு என் முடியை காணிக்கையாக கொடுத்து வந்தேன்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னை பயணமும் மோசமாக உள்ளது. திண்டிவனம் வருவதற்குள் நாம் திண்டாடி போகின்றோம்.

ஒருமுறை நமது முதலமைச்சர் இந்த வழியில் பயணித்தால் , நமது மக்கள் எவ்வளவு பொறுமைசாலிகள் என்று புரிந்து கொள்வர்.

 பின்பு அவர் மாநிலத்தை நடத்துவதில் திறமைசாலியா என மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்!!.

எனக்கு ஒரு சந்தேகம்!!. காந்தியை கொன்ற கோட்சே, காந்தியை கொல்லுவதற்கு முன்பே ஆர் ஸ் ஸ் விட்டு வெளியேறி விட்டார். காந்தியை கொல்லும் போது, அவர் எந்த இயக்கத்திலும் இல்லை. ஆனால் கோட்சே ஆ ர் ஸ் ஸ் காரர் , அவர் வெளியேறி விட்டால் என்ன ஆர் ஸ் ஸ் ன் சித்தாந்தம் படி தான் அவர் கொலை செய்தார். ஆ ர் ஸ் சை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள் தொலைக் காட்சி விவாத்தின் போது.

ஒரு வாதத்திற்கு இதை சரி என்ற வைத்து கொண்டால், இதை அப்படியே இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு பொறுத்தி பார்த்தால், எதை தடை செய்ய வேண்டும். குண்டு வைப்பவன் நல்ல இஸ்லாமியர் இல்லை. சரி!. ஆனால் அவன் எந்த சித்தாந்தத்தின் படி மாற்று மத மக்களை குண்டு வைத்து கொல்கின்றான். ஜிகாத் என்ற சித்தாந்ததப்படி. அதை சொல்வது அவர்களின் புனித நூல். அப்படி என்றால் இவர்கள் புனித நூலை அல்லவா தடை செய்ய வேண்டும்?

இதை ஒத்து கொள்வார்களா? நடுநிலை பேசும் கூட்டம்.

ஜிகாத் என்றால் "உன் மனதோடு போர் தொடுத்து அதை வென்று எடு" என்று படித்ததாக நினைவு.

ஆக சித்தாந்தம் எவ்வளவு தெளிவாக வரையறுக்கப்பட்டாலும் , அதை சொல்லி தருபவர் மற்றும் அதை புரிந்து கொள்பவரை பொறுத்தே அதன் நடைமுறை செயல்பாடுகள் இருக்கும்.

இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடுக்கு எதிராக ஆர் ஸ் ஸ் ஸ் நிற்பதால் தான் அதை ஒழித்து விட வேண்டும் என்று பேசுகிறார்கள்.
பல கோடி இந்திய இதயங்களில் நிறைந்த அப்துல் கலாமிற்கு பல ஹிந்து இயக்கங்கள் போஸ்டர் அடித்து கண்ணீர் அஞ்சிலி செலுத்தி கொண்டு இருந்த போது, ஒரு தீவிரவாதியின் மரணத்திற்கு கண்ணிற் அஞ்சிலி செலுத்தியது எந்த கூட்டங்கள்?

சிறுபான்மை ஆதரவாக இருக்கும் நடுநிலை ஹிந்துக்கள் கூட உங்கள் செயலால் அச்சம் அடைந்தனர் என்பது நிதர்சமான உண்மை.

எங்களால் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே எங்களுக்கு அறிவிக்க போகிறீர்கள்.......

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்த கலவரம்

சாதி மற்றும் ஒருமுறை தனது சதுரங்க விளையாட்டை நடத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்த நிகழ்வை நியாயபடுத்தி சிலரின் பதிவுகளை காண்கின்றேன். இதில் உச்சபட்சம் மாற்று மதத்தவரையும் குற்றம் சொல்லி பதிவுகள் வருகின்றன. அவர்கள் தான் தூண்டி விட்டார்கள் என்று. என்ன அபத்தம் இது. இந்த விசயத்தில் நம்மிடம் குறை உள்ளது. அதை விடுத்து மற்றவர் மேல் பழி சொல்வது தகாது.
எங்கே இருந்து வந்தது சாதி. சாமிக்கும் சாதி உண்டோ?.

காலம் காலமாய் தங்களுக்கு ஏவல் செய்து கொண்டு இருந்த கூட்டம், இன்று கால் மேல் போட்டு அமர்ந்தால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது. என் வீட்டில் வேலை செய்தவன் தானே இன்று எப்படி போகின்றான் பார் என்று இன்றும் பேசி கொண்டு உள்ள கூட்டம் இன்னும் இருக்கிறது.

என்னை கீழ்சாதி என்று மட்டும் தட்டி என் வம்சத்தை ஆளுமை செய்தாய் அல்லவா, உன் பெண்ணை காதல் செய்து, என் வம்சத்தை உன் பெண் மூலம் ஆளுமை செய்ய வைக்கின்றேன் என்று பேசி திரியும் கூட்டம் ஒருபுறம்.

யார் ஆதிக்க சாதிகள்?

வன்னியர்கள் , தேவர்கள் , முத்தரையர்கள், கவுண்டர்கள், நாயக்கர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இவர்கள் எதன் அடிப்படையில் ஆதிக்க சாதிகள். யார் பட்டயம் எழுதிக் கொடுத்தது?

ஆதிக்க சாதிகள் என்பதாலே இவர்கள் எல்லாரும் குற்றம் புரிந்தவர்கள், கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது.

கீழ் சாதி என்பதாலே எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது.
எல்லா சாதியிலும் நல்லவர்களும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர்.
இரண்டு பக்கமும் உண்மையும் , குற்றமும், வெறுப்பும் அன்புமும் சேர்ந்தே இருக்கிறது.

சாதி இந்த தேசத்தை பிடித்த சாபக்கேடு. எந்த மதத்தில் இருந்து எந்த மதம் நோக்கி பாய்ந்தாலும் சாதி இன்னும் சாக்கடையாகவே ஓடி மக்களை துரத்தி கொண்டு உள்ளது.

சக மனிதனை சாதி எனும் கள் குடித்து, சவக்குழியில் சரித்து விட்டதை, தங்களது வீர தீர சரித்தரமாக பேசிக் கொண்டு திரியும் தரித்தரங்களுக்கு , சில சாதி தலைவர்கள் தந்திரங்களை சொல்லி கொடுத்து திரிகின்றனர்.

63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் கதைகளும் இறைக்கு சாதி இல்லை என்று அறிவிக்கிறது. பின்பு சாதியை உலகிற்கு யார் அனுப்பியது.

நாத்திகர்கள் மனு நீதி புத்தகம் என்று சொல்கிறார்கள். எந்த ஆதிக்க சாதியின் வீட்டில் மனு நீதி வைத்து படித்து கொண்டு உள்ளார்கள். அது மிகைபடுத்தப்பட்ட உளறல். ஆனால் அதை உதாசீனம் செய்ய முடியாது.

சாதியை ஹிந்து மதம் அறிவிக்க வில்லை. ஹிந்து மதத்திற்கு சாதி அறிவிக்க பட்டது அன்று ஆளுமை செய்தவர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக. பின்பு வந்த தலைமுறை அதை தளைக்க வைத்தது.

எப்போதே புதைக்கப்பட்டு இருக்க வேண்டிய சாதிக்கு, இன்று சாதி தலைவர்கள், தனி சங்கம் அமைத்து கொடுக்க, சாதி இன்று சர்வ வல்லமை உடைய சர்வாதிகாரியாய் சளைக்காமல் எல்லா காலத்திலும் கால் ஊன்றி நிற்கிறது.

சாதி பல பேரை நாதி அற்றவர் ஆக்கி இருக்கிறது. முப்பது வருடங்கள் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டி சேர்த்த வீட்டை ,ஒரு மணி நேரத்தில் எரித்து உடைத்து போட்டார்கள் என்று மூதாட்டி சொல்லி அழும் போது, மனம் எல்லாம் வலிக்கிறது, பற்றி எரிகிறது.

ஒவ்வொரு முறையும் சாதியை பற்றி பதிவிடும் போது, ஒரு ஹிந்துவாக என் மனம் நாணம் கொள்கிறது.

மாற்று மதத்தவருடன் எந்த விவாத்திலும் சளைக்காமல் பேசிக் கொண்டு இருக்கும்போது, சாதியை பற்றிய குறிப்புக்கள் சொல்லப்படும் போது, ஒரு நொடி மனம் சோர்வடைந்து போகிறது.

இனபேதமும், நிற பேதமும் அடிப்படையாக கொண்ட அந்த மதங்கள் நம்மை சொல்ல அருகதை அற்றவர்கள் என்றாலும் , நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.

நியாயமான குற்ற சாட்டை யார் சொன்னாலும் , நாம் நாணி கொள்ள தான் வேண்டும்.

ஹிந்து மத தலைவர்கள் அங்கே தலையிட்டு , இவர்களை சரி செய்ய வேண்டும். சரியான இழப்பிடு பெற்று தர வேண்டும். மற்றும் ஒரு முறை நடக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்.

எப்போதும் பேதம் அற்ற இறைவனுடனான போரில், சாத்தான் வெவ்வேறு முகம் காட்டும், பின்பு தோற்றோடி போகும்.

இன்று சாதி என்னும் சாத்தனின் உடனான யுத்தத்தில், எல்லாருக்கும் பொதுவான இறை தோற்கடிக்கப்பட்டு , எரிக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் அந்த குற்றமற்ற, எந்த பேதம் அற்ற இறை யுத்தத்தில் இறங்கும்!!

அன்று நாம் சாதி எனும் சாத்தனின் பக்கம் நின்று வாள் வீச போகிறோமா , இல்லை இறையின் பக்கம் நிற்க போகிறோமா?

http://www.bbc.com/tamil/india/2015/08/150816_templecar_burnt

Sunday, February 8, 2015

இந்திய பேரரசின் 66-வது குடியரசு தினம்

இன்று இந்திய பேரரசின் 66-வது குடியரசு தினம். சுதந்திர தளையில் இருந்து விடுபெற்ற இந்திய பேரரசின் சுதந்திர தேவி, தன்னை முடியரசு அற்ற குடியரசு ஆக அறிவித்து , தன் குடிமக்களை குளிர்வித்த நாள். தன்னை பாதுகாக்கும் இந்திய படைகளின் படை பலத்தை கண்டு அகம் மகிழும் நாள்.
உலகில் நம் தேசம் வளர்ந்த வரலாறு போல் வேறு எங்கும் இல்லை. அன்பையும், ஆன்மிகத்தையும், பொன்னையும் அள்ளித்தந்த தேசத்தை , அடிமை படுத்தி வதைத்த அன்னியர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா. வரலாற்றின் பக்கங்களை வரிசைபடுத்தி வாசித்தால் ,விக்கித்து போய் விடுவோம்.
அந்நியன் எவராலும் பாரதத்தின் எல்லா பகுதியையும் நிம்மதியாக முழுமையாக ஆண்ட வரலாறு கிடையாது. எங்கேயாவது ஒரு பகுதி அந்நியனை அரிந்து அழித்து கொண்டு இருந்தது. என்ன செய்வது சுதந்திரம் இந்த தேசத்தின் சுவாசத்தில் இருந்தது. அதன் மைய புள்ளியான ஆன்மிகத்தில் இருந்தது.
எந்த இறைவன் எல்லாருக்கும் பொதுவானவனோ, நட்பானவனோ அவனை அன்னியபடுத்தி , அவனிடம் கட்டளைகள் பெற்றதாக சொல்லி , ஆண்டவனுக்கு அடிமை என்று ஆண்டவரின் பிள்ளைகளான மனிதர்களை அடிமைபடுத்தி அவர்களின் ஆன்மிக சுதந்திரத்தை பறித்தது, மதத்தை மன்னராக வைத்து கொண்டு இருந்த தேசங்கள்.
ஆனால் பாரத தேசம் , இறைவனை தோழன் என்று சொன்னது. ஆண்டவனின் அருள் வடிவத்தை தேர்ந்து எடுக்கும் சுதந்திரத்தை தன் மக்களுக்கு அளித்தது. உடலை உயிர்ப்பித்து கொண்டு இருக்கும் ஆன்மாவை தழுவி ஆன்மிகத்தை தரும் ஆண்டவரின் விசயத்திலே சுதந்திரத்தை கொடுத்த என் தேசம், உடலை உருக்கி அடிமைபடுத்த நினைத்த அன்னியர்களிடம் அடி பணிந்து போகுமா என்ன.
ஆகவே என் தேசத்தை கொள்ளையடித்து பார்த்தார்கள், கொலை செய்து பார்த்தார்கள், என் தாய் நாடு தாழ்ந்து விடும் என்று. என் தேசம் வளர்ந்து விட கூடாது என்றே ஒரே காரணத்திற்காக தேசத்தை இரண்டாக , மூன்றாக வெட்டிப் பிளந்தார்கள். வெட்டி விட்டால் நின்று விடுமோ , என் தாய் தேசத்தின் வளர்ச்சி.
மொட்டாகி நின்று கிடந்த வளர்ச்சி என்ற பாரத தேசத்தின் மலர் மலராமலே இருக்க எண்ணி, இருண்ட தேசமாகவே வைக்க முயற்சித்தான் அன்னியன். சுதந்திர தீயை தேடித் திரிந்த மண்ணின் மைந்தர்கள் , மின்மினி பூச்சிகளாக மாறி, தங்களை எரித்து , சூரியனை தந்தார்கள் அந்த மலருக்கு.
கதிரவனை பருகி , சுதந்திர காற்றை சுவாசித்த அந்த மலர் , வளர்ச்சி எனும் இதழ் விரித்தது. இன்று உலகம் எங்கும் உள்ள தேனீக்கள் , இந்த மலரை நோக்கி தான் பயணிக்கின்றன.
கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம்மை முடமாக்க நினைத்தவர்களை , முறியடித்து, முடி சூடி உள்ளோம். அதிகாரம் கொண்டு ஆண்ட ஆங்கிலயேன் , படை பலத்தின் வல்லமையில் , இன்று நமக்கு கீழ் நிற்கின்றான்.
இந்தியா இன்று எந்த தேசத்தாலும் தவிர்க்க முடியாத சக்தி. உலகம் இந்தியாவை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளை வைத்து கொண்டு இந்த தேசம் எப்படி முன்னேறுகிறது என்று யோசிக்கிறது.
நாமும் யோசிக்க வேண்டும். எவ்வளவு உன்னதமான தேசத்தில் பிறந்து உள்ளோம் என்று. எங்கே இருந்தாலும் , இன்று ஒரு நாளாவது நம் தேசத்தை எண்ணி உவகை கொள்ள வேண்டும். நம்மை பாதுகாக்கும் இந்திய பேரரசின் படைகளை குறித்து நன்றி கொள்ள வேண்டும். முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்பதற்கு நம் தாய் தேசமே மிக பெரிய வரலாற்று சான்று என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டும்.
இந்திய பேரரசின் குடியரசு நமக்கு பெற்று தந்த விசயங்கள் பல. சொல்லி தந்த விவரங்கள் பல. எனக்கு இப்படி சொல்லி தந்து இருக்கிறது என்று நமபுகின்றேன்" நம் வீதி எங்கும் விஷ கற்கள் போட்டு வைத்து வழி மறித்தாலும், ஆன்மாவை அட்சய பாத்திரமாக்கி , வளர்ச்சி என்ற விதைகளை வாரி எடுத்து , வாழ்க்கை என்ற நந்தவனத்தை நாமே கட்டியமைக்க முடியும்"
வாழ்க தாய் திருநாடு!! , வாழ்க இந்திய குடியரசு!!.
குடியரசு தினத்தை போற்றுவோம், நல்ல குடிமக்களாக நடந்து இந்திய பேரரசுக்கு நன்றி சொல்வோம்.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...