Wednesday, October 22, 2014

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 9-வது பகுதி.(நிறைவுற்றது)

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 9-வது பகுதி.(நிறைவுற்றது)

சிறிது நேரம் கண் அயர்ந்து விட்டு, மாலை அங்கிருந்த கை பம்பில் முகம் , கால் கழுவி விட்டு மாலை மங்க தொடங்க, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் நோக்கி புறப்பட்டேன். 

போகும் வழியில் மரணித்து கிடக்கும் வெள்ளாறு வருகிறது. ஆறுகள் நம் நாகரிகத்தின் உச்சத்தை சொல்பவை. சேலை உடுத்திய ஆற்று மங்கையை , துகிலுரித்து எறிந்த துச்சாதனன் கூட்டமாய் மனித கூட்டம். திரளபதியின் துகில் தொட்ட கௌரவ கூட்டம் குல நாசம் அடைந்தது. இயற்கையின் மகளை துகிலுரித்த மனித குலத்திற்கு என்ன கேடு நேர போகிறதோ என்ற அச்சத்துடன் வெள்ளாறை கடந்து கோவில் அடைந்தேன்.

பெண்ணாடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கோவில் அமைந்து உள்ளதால் , மக்களின் வருகை நன்றாக உள்ளது. கோவிலும் நல்ல நிலையில் உள்ளது. நாவுக்கரசர் உடல் மீது ஈசன் திரிசூல, ரிஷப முத்திரை பதித்த தலம், 63 நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர் நாயனார் சிவனடியாருக்கு பாத பூஜை செய்ய மறுத்த மனைவியின் கையை வெட்டிய தலம், சம்பந்தர் வாழ்ந்த தலம் என பல சிறப்பு பெற்றது.

அண்டத்தின் அதிபதி அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்து இருக்கிறது. கருவறைக்குள் இருப்பவன் காலத்தை கடந்து நிற்பதும், எல்லா பிறவிகளிலும் ஈசனே நம்மை தொடர்ந்து வருவதும் மெல்ல புரிகிறது. தாய், தந்தை. மனைவி, பிள்ளை என்ற எல்லா உறவுகளும் உடம்பின் மிச்சமாகி நிற்க, ஈசன் மட்டுமே உயிரை தொடர்கின்றான். உடல் தீர்ந்து போக, உறவுகள் அறுந்து போகும், ஆனால் ஈசன் ஒருவன் மட்டுமே கடைசி வரை நம்மில் நிற்கும் உறவு. 

கோவில் நம்மை மிரட்டுகிறது. புலித்தோல் போர்த்திய நடராஜரை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஈசனை நான்கு பக்கம் நின்று பார்க்கும் அமைப்பு உடைய கோவில். எப்பக்கம் நின்று பார்த்தாலும், அப்பன் நம்மை ஈர்கின்றான். இந்த கோவிலில் மேலே தனியாக ஒரு சிவலிங்கம் உள்ளது. சோழ மன்னனுக்கு , மேட்டு பகுதியில் இருந்து ஈசன் காட்சி அளித்த பகுதி இது. கீழ் இறங்கி சுற்றி வந்தால் , ஈசனின் மற்ற கோலங்கள் பார்க்க முடிகிறது. ஈசன் என்ற முகமே நம்மை கிறங்கடிக்க , மற்ற கோலங்கள் பற்றி தனியாக சொல்ல தேவை இல்லை. மீண்டும் ஒரு முறை கோவில் சுற்றி விடை பெற்று,  திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் அடைந்தேன்.

கோவில் அமைதியாக உள்ளது.  கோவில் வாசல் அருகே ஒரு சிறு கூட்டம் கேரம் விளையாடி கொண்டு இருந்தார்கள். சிறு குழந்தைகள் கூட்டம் ஒன்று உள்ளே, தனக்கு தெரிந்த வழியில் ஈசனை தரிசித்து கொண்டு இருந்தனர். குழந்தைகள் நிலம் பட விழுந்து இறையை  வணங்குவது ஒரு தனி அழகு. சிந்தனைகள் சிதறி சிறு பிள்ளைகள் பின் ஓட எத்தனிக்க, அர்ச்சகர் வருகையால்  அறக்கொடியோன்(ஈசன்)  மேல் நம் விழிகள் விழுகிறது. விழியில் பாய்ந்தோடி ஈசன், நம் உதிரத்தில் கலக்கின்றான். 

அந்தமும் ஆதியும் இல்லாததது , ஜோதி ரூபமாய் தெரிகிறது. சம்பந்தர்க்கு முத்து சிவகை கொடுக்க சொன்னவர் அல்லவா இவர். சுற்றி வந்தால் ஆலயம் சுத்தமாக உள்ளது. தாயரையும் தரிசித்து விடை பெற்றேன்.

பயண திட்டப்படி இன்னும் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மட்டும் பார்க்க வேண்டி இருந்தது. இரவு 9 மணிக்குள் அந்த கோவிலை பார்த்துவிட்டு  , நடுஜமாத்தில் சென்னை வந்தடைய திட்டம்.

திட உணவு எடுத்து கொள்ளாத காரணத்தினால், பசி வயிற்றை கிள்ளியது. ஜெயாவின் கைதால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருவட்டத்துறையில் திரும்பி கொண்டு இருந்த போது, வண்டியும் ஒரு இடத்தில சட்டு என்று நின்று போனது. அதி வேகத்தில் வண்டியை விரட்டியதால் , என்ஜின் வெப்பம் தாங்காமல் அணைந்து போனது. 

தண்ணீர் யாரிடமாவது கேட்கலாம் என்று, சுற்றி பார்க்கையில், ஒரு கோவில் தென்பட்டது. தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில்-திருமாறன் பாடி  என்ற பெயர் பலகை மின்னியது. 

பாடல் பெறாத தலம். கோவில் உள்ளே நுழைந்தால், கையில் சக்கரை பொங்கல் தருகிறார்கள். பசி அடங்கியது, கோவில் பற்றி விசாரித்தால், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி வந்த சம்பந்தர் இங்கே தங்கிய போது, அம்மை உணவு கொடுத்த இடம் இது. அவள் பெயர் அன்னபூரணி. 

ஈசன் திருவட்டதுரை அந்தணர்களை அழைத்து சம்பந்தர் தன்னை பார்க்க வருவதாகவும் , அவரை எதிர் கொண்டு அழைத்து வருமாறும் பணித்தார். சம்பந்தருக்கு முத்து சிவிகையும் , முத்து கொண்டையும் அருளினார். 

ஈசன் சம்பந்தர் உடன் வந்த கூட்டத்தின் தாகம் தணிக்க, தண்டால் அடித்து நீர் வருவித்தார். கோவில் வரலாறு கேட்டவுடன் நம்மை அறியாமல் கண்ணிற் வருகிறது, வண்டி இங்கே அணைய வில்லை என்றால் , இந்த கோவில் படி தொட்டு இருக்க மாட்டேன். 

ஈசனின் கருணை. வண்டியை அணைத்து என்னை அரவணைத்த அண்ணலே என்ற கேவல் உள்ளே வந்தது. சின்ன கோவில். அழகாய் உள்ளது. அப்பனும் அம்மையும் அழகில் நம்மை வியக்க வைக்கிறார்கள். அதுவும் அம்பாள், அவள் முகம் பார்த்தல் , எந்த வித துன்பமும் பறந்து போகும். அழகா அது, அசந்து போவீர்கள் அவள் அழகை கண்டு. தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, சிறிது என்ஜின் மேல் ஊற்றி வெப்பத்தை அணைக்க வண்டி புறப்பட்டது. 

பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழி இருளில் மூழ்கி கிடக்கிறது. கொஞ்சம் கவனமாக வண்டியை செலுத்த வேண்டிய நிலைமை. 

ஒரு வழியாக கோவில் சென்று அடைந்தேன். பெரிய கோவில். தல வரலாறு சொல்ல ஒரு தனிபதிவு தேவை. சுந்தரரக்கு ஈசன் பொற்காசுகள் கொடுத்து  அதை மணி முத்தாறு நதியில் போடு, பின் திருவாரூர் குளத்தில் எடுத்து கொள் என்று சொன்ன தலம், விநாயகருக்கு இரண்டாவது படை வீடு இது. குரு நமசிவயருக்கு அம்மை பசி தீர்த்த இடம். 

ஆலயம் அகலமாய் உள்ளது. நல்ல கூட்டம். அடியாருக்கு அன்பன் அமுதத்தை அள்ளி அருளாய் வீசுகின்றான். பருகத்தான் நமக்கு பிறவி போத வில்லை. என்ன புண்ணியம் செய்ததோ பூக்கள். ஈசன் அங்கம் எங்கும் தொட்டு தழுவி மயங்கி சரிந்து , பிதற்றுகின்றன. பூக்களின் பிதற்றல் கருவறை எங்கும் மணமாய் பரவி நாசிகளில் நுழைந்து நம்மையும் மயக்குகின்றன.

உன்னை காண்பதை தவிர வேறு என்ன வேலை என்று மனம் கூக்குரல் இடுகிறது. மெல்ல பின்னடைந்து , கோவில் சுற்றி வந்தேன். விசாலமான கோவில். முடிந்தவரை நன்றாக வைத்து இருக்கிறார்கள். மக்கள் சந்தோசமாய் வந்து போகிறார்கள்.  கோவில் பெரும் சிறப்புடன் வாழ்கிறது. 

ஈசன் முன் விழுந்து வணங்கி விட்டு, வெளி வந்த போது, இரவு 9 மணி.

சிறிது உணவு எடுத்துக்கொண்டு விருத்தாசலம் –உளுந்தூர்பேட்டை சாலையை பிடித்தால். மிக சரியான இருட்டு. உளுந்தூர்பேட்டை –சென்னை நெடுஞ்சாலையை தொடும் வரை விளக்கு இல்லை.  மிக கவனமான பயணம். வழியில் கைக்காட்டி லிப்ட் கேட்கிறார்கள். ஏற்கனவே கோவிலில் விருத்தாசலம் கோவிலில் விருத்தாசலம் –உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வழிப்பறி பற்றி சொல்லி இருந்ததால், மிக வேகமாக அவர்களை கடந்து வந்து விட்டேன். 

உளுந்தூர்பேட்டை –சென்னை சாலையை தொட்டு , சென்னையை வந்து அடையும்போது இரவு 1.30 மணி, திருவான்மியூர் கோவில் வந்த அடைந்து , வெளி நின்று ஈசனிடம் அழைத்து போனதற்கு நன்றி சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

Thursday, October 16, 2014

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 8-வது பகுதி.

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 8-வது பகுதி.
திருநாரையூர் கோவிலின் நிலைமை என்னை மிக தடுமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது. அதன் காரணமாக திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் செல்ல மறந்து அதை கடந்து இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் நோக்கி சென்றேன்.
வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. மீண்டும் பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவன் பற்றிய நினைவு வருகிறது. வரலாறு இந்த வழியாக பல முறை கடந்து சென்று இருக்கும். குறைந்தது இருபது கிலோமீட்டர் வரை ஏரி நம்முடன் பயணம் செய்கிறது.
இடது பக்கம் ஒரு இளவரசி நம்மை பார்த்து நமுட்டு சிரிப்புடன் வழி நெடுக படுத்து கிடப்பது போல் ஒரு உணர்வு. அசாதாரணமான அழகு. ஆனந்தமான இரு சக்கர வாகன பயணம். காதிலோ ஈசன் புகழ் சொல்லும் பாடல்கள் அலைபேசியில் இருந்து. உற்சாகமாய் நானும் பாடி கொண்டே சென்றேன்.
நான் சென்ற நேரம் நடை அடைக்கப்பட்டு இருந்தது. எதிரே குளம். சிறுவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சில பேர் குளித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி குளித்து கொண்டு இருந்தவர்களில் கோவிலில் அர்ச்சகரின் பையனும் இருந்தார். நம்மை பற்றி சொன்னவுடன் ,சிறிது நேரம் பொறுங்கள், நான் போய் சாவி வாங்கி வருகின்றேன் என்றார். சொன்னபடி செய்தார்.
அன்பாய், பணபாய் நடந்து கொள்கிறார். +12 படிக்கிறார். எதிர்காலதில் என்ன படிக்கலாம் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். ராணுவத்தில் பணி புரியும் விருப்பத்துடன் உள்ளார். எனக்கு தெரிந்த பதிலை சொன்னேன். அர்ச்சகர் மகனை நல் படி வளர்த்துள்ளார் என்ற புரிகிறது.
கோவிலை சுற்றி திருமாலின் அவதாரத்தில் ஒருவகை ஓடிக் கொண்டு இருந்தது. வரலாற்றின் வரலாறு இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறது. ராஜராஜ சோழன் இங்கு வந்து ஈசனை வேண்டிய பிறகு, தமிழ் வரலாற்றின் உச்சம் திரு இராஜேந்திர சோழர் பிறந்தார், ஆகவே ராஜேந்திர பட்டினம் என்று பெயர் பெற்றது.
தாயை தண்டிக்க காரணமாக இருந்த வேத நூல்களை முருகன் வீசி எறிய , ஈசன் சினந்து குமரனை ஊமை குழந்தையாக மண்ணில் பிறக்க வைக்க, இக்கோவில் வந்த வேலன் அந்த வேத நாதனை வழிபட்டு பேச்சு பெற்ற தலம். ஆனால் ஈசனை கண்டதும் நாம் ஊமையாகி போகின்றோம்.
கயிலை நாதனை கண்டால் கவலைகள் கழண்டு போகிறது. நம் கண் முன்னே ,நம் மனம் திருடப்பட, கள்வன் யார் என்று தெரிந்த பிறகும், அவனை கண்டிப்பதற்கு பதில், கைகள் அவனை தொழுகின்றன. சிறிய கோவில். நிதியுதவி தேவைப்படும் கோவில்.
பொது சாலையில் இருந்து , மிக அருகே உள்ள கோவில். ஆனால் அதை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தினால் , பெரிய அளவில் கோவில் கண்டுகொள்ள பட வில்லை. ஒரு பெரிய தகவல் பலகை , பொது சாலையில் வைத்தால், கண்டிப்பாக இந்த கோவில் நல்ல கவனத்தை பெறும். அதற்கு சில பேர் அங்கே முட்டுகட்டையாக இருப்பார்கள் என்று பயந்து கொண்டு , கோவில் நிர்வாகம் செய்யாமல் இருக்கிறது என்பதை விசாரித்து அறிந்து கொண்டேன்.
சொந்த மண்ணின் வரலற்று சின்னத்தை மறைக்க விரும்பும் மனிதர்களை நினைத்து எங்கே போய் முட்டி கொள்ளுவது என்ற எண்ணத்துடன் வெளியே வந்தேன்.
பயண திட்டத்தை பார்க்க, திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் பார்க்க மறந்தது தெரிய வர, மீண்டும் வந்த வழி சென்று, வல்லபேஸ்வரர் திருக்கோயில் அடைந்தேன்.
கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கோவில் அருகே அர்ச்சகர் வீடு. அரசாங்கத்திடம் இந்த கோவில் இல்லை. ஆதலால், நகரத்தார் இந்த கோவிலுக்கான கும்பாபிசேகம் தயார் செய்து கொண்டு உள்ளனர். ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. நாவலனின் (ஈசன்) நர்த்தனம் காண, பிரம்மா, சரஸ்வதி வந்து வழிபட்ட தலம், குறுமுனி அகத்தியர் தான் படித்த வேதங்கள் மறக்காமல் இருக்க இறையை வேண்டிய இடம். அகத்தியரின் மகளாக மகாலட்சுமி பிறக்க, வராக அவதாரத்தில் வந்து விஷ்ணு லட்சுமியை மணந்த இடம்.
கும்பாபிசேகம் நடக்க இருப்பதால், யாருக்கும் பூஜை இல்லை. தனியாக ஓலை குடிசை அமைத்து , ஆகம விதிப்படி பூஜை செய்கிறார்கள். அலங்காரம் எதுவும் இன்றி ஆராவமுதன்(ஈசன்) அமர்ந்து உள்ள, யாரும் இல்லாத காரணத்தினால் , சௌகரியமாக நின்று, ஈசனிடம் பேச முடிகிறது. பிடிப்பு அற்ற வாழ்க்கை, பனிமலையன் (ஈசன்) பக்கம் நிற்கும்போது , ஒரு பக்குவத்திற்கு வருகிறது.
அறியாமல் செய்த பிழைகளும், அறிந்தே செய்த பிழைகளும், மனதில் எங்கும் அலைகின்றன. நாயன்மார்கள் காலம் போல், மீண்டும் உடல் எடுத்து இங்கே உலவ வர மாட்டயோ என் ஈசனே என்ற ஏக்கம் வருகிறது. நிலை கொள்ள முடியாமல், நின்ற மனம், ஈசனிடம மண்டியிட்டு வெளி வருகிறது. என்னால் முடிந்த நிதியுதவி அளித்து விட்டு வெளியேறினேன்.
நண்பகலை தாண்டி இருந்ததால் , செல்லும் வழியில் ஜந்து இளநீர் வாங்கி அருந்தி விட்டு, மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் கோவிலில் சற்று நேரம் கண் அயர்ந்தேன். 







274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 7-வது பகுதி

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 7-வது பகுதி
அதிகாலை எழுந்து, குளித்துவிட்டு , பயண திட்டத்தில் இல்லாத பாடல் பெற்ற தலமான வைத்தியநாதர் திருக்கோயில் , மயிலாடுதுறை தரிசிக்கலாம் என்று கிளம்பினேன்.
செவ்வாய் தோஷம் நீக்கும் கோவில் என்று சொன்னால், எல்லாருக்கும் புரியும். 6.00 am அளவில் கோவில் சென்று அடைந்தேன். மழை மண்ணை மகிழ்வித்து இருந்தது. கூட்டம் அதிகம் இல்லை. முருகன் முக்கண்ணனை வழிப்பட்டு தாயிடம் இருந்து வேல் பெற்ற இடம். சடாயுவிற்கு ராமர் தகன காரியங்கள் செய்த இடம்.
செவ்வாய் சிறப்பு என்பதால் முருகன் முன் நல்ல கூட்டம். தங்களை விடுத்து மைந்தன் கொண்டாடபடுவதை கண்டு அம்மையும்,அப்பனும் அக மகிழ்ந்து அமர்ந்து உள்ளனர். ஈசன் சந்நிதியில் யாரும் இல்லை. உலகத்தின் உச்சம் , உக்காந்து இருக்கிறது எந்த சலனமும் இல்லாமல். நீயே என் அதிபதி என ஆன பிறகு என் தலைவிதி பற்றி எனக்கான கவலை என்ற எண்ணம் வருகிறது.
விழி நீர் விழியன் விளிம்பில் நிற்க, தீடிரென்று விளக்குகள் அணைந்து போய், ஈசன் தீப ஒளி காட்டுகின்றான். தகப்பனை தொழுதுவிட்டு விட்டு தாயிடம் சென்றால், திரை போட்டு வைத்து இருக்கிறார்கள் தாயை.
சுற்றி வரலாமா என்று சிந்தனை வரும் போது, சற்றென்று திரை விலகி தீப ஆராதனை நடக்கிறது. தையல் நாயகியின் முகம் பார்த்தால் தைரியம் வருகிறது. அழகு இவளுக்கு அடிமையாகி ஏவல் செய்கிறது. தையல் நாயகன் , இவள் மீது மையல் கொண்டு திரிவது தவறே இல்லை. அழகின் முகம் அன்பை அள்ளி தருகிறது.
சுற்றி வந்தேன். கோவிலை இன்னும் நன்றாக வைத்து கொள்ள நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணத்துடன், ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி விரைந்தேன்.
கொள்ளிடம் ஆற்று வழி பயணம், பொன்னியின் நாவல் சொல்லும் ஊர்கள் தென்படுகின்றன. கொள்ளிடம் வறண்டு போய் வெறுமை காட்ட, மனம் கசக்கி எறியப்பட்ட காகிதம் போல் சுருங்குகிறது. வளைந்து ஓடிய வரலாறு இங்கே வீழ்த்தப்பட்டு கிடக்கிறது. பாலத்தில் வண்டியை நிறுத்தி சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன். பலத்காரம் செய்து கொல்லப்பட்ட பருவமங்கை போல் பாழ்பட்டு கிடக்கிறாள் கொள்ளிட ஆறு. மனிதன் இயற்கையின் மிக பெரிய மிருகம் என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.
கோவில் செல்லும் வழியில் ஒரு சிறு ஆறு எதிர்திசையில் இரண்டாக பிரிந்து வருகிறது. இரண்டு சின்ன சிறுமிகள் போல், நம்மின் இரு கைபிடித்து ஈசன் கோவில் செல்லும் வழி கூட வருகிறது.
ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், கோவில் ஆள் அரவமற்று இருக்கிறது. ஈசன் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்லும்போது , தாயாரின் கவனம் திசை தப்ப, தண்டித்தான் ஈசன். தாய் இங்கு தவம் இருந்து தனது மணவாளனை மீண்டும் பெற்ற இடம். ரேவதி நட்சத்திர பரிகார தலம்.
ஓரளவு நல்ல நிலைமையில் கோவில் உள்ளது. அந்த சமயத்தில் மின்சாரம் இல்லை கோவிலில். அர்ச்சகர் தீபம் காட்டி விட்டு போய் விட்டார். நல்ல இருட்டு, கருவறை அருகே தனியாக நிற்க நடுக்கம் வருகிறது. உதடுகள் பிரிந்து உள்ளம் கவர்ந்தவனின் பெயர் சொல்ல, பயம் மெதுவாய் பதுங்கி மறைகிறது. மெல்ல நெருங்கி கருவறை கதவிடம் போய் நின்றால், காலனின் அருகாமை கரும்பாய் உள்ளே இனிக்கிறது.
சுற்றி வந்தால் எந்த பிழையும் இல்லை கோவிலில். இங்கே குரு அம்மைக்கும் அப்பனக்கும் நடுவில் நிற்கிறார். இறையின் எம்முகம் பார்த்தாலும் இனிமை தான். கோவில் நேர் எதிரே குளம் உள்ளது. குளம் தாண்டி சிறிய சிவன் கோவிலில் பெரிய லிங்கம் ஒன்று உள்ளது. வயதான அர்சகர் அங்கும் நாயன்மார் வந்த கதை சொல்கிறார். எந்தளவு உண்மை என்று புரியவில்லை. நிதி இல்லாமல் நிற்கதியில் உள்ளது. முடிந்தளவு பண உதவி செய்து விட்டு வந்தேன்.
கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், வயல் சூழ்ந்த கிராமத்தின் உள்ளே நிற்கிறது ஆலயம். நான் போகும் போது நடை அடைக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தை ஒட்டி அமைந்த ஒரு வீடு தள்ளி உள்ள வீட்டில் விசாரித்தால் , அவர்களே கோவில் நிர்வாகத்துக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நமது வருகையை தெரியபடுத்த , 20 நிமிடத்தில் ஒருவர் வந்தார்.
என்னையே ஆலயம் திறக்க சொன்னார். மனம் குதூகலம் அடைந்தது. இன்று நீங்கள் தான் ஆலயம் திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது போலும் என்றார். ஆலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு உள்ளது. முனிவர்கள் சிவ பூஜை செய்ய வந்த போது, மணல் எல்லாம் லிங்கமாக தெரிய வெளி நின்று தரிசித்த தலம், ஆதிசேசன் , பதஞ்சிலி முனிவராக பிறந்து இங்கு வந்த போது, ஈசன் தனது நடன காட்சியை காட்டிய இடம்.
பதமாக நிற்கும் ஈசன் நமக்கு இதம் தருகின்றான். உடல் கொண்ட உயிர் ஈசன் முன் நிற்கும்போது , சவமாய் சரிகிறது. உற்சாகம் காட்டும் பொருள் எல்லாம் சுற்றி நிற்க, சுட்டித்தனம் காட்டும் குழந்தை , பொம்மையை மட்டும் தழுவ விரும்பவது போல், ஈசனின் பாதம் சென்று மனம் அவனையே கட்டி தழுவுகிறது பின்பு நழுவுகிறது.
கார்த்திகை நட்சத்திர பரிகார தலம். தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை ஈசன் மீது பரப்பும் நிகழ்வு இன்றும் நிகழ்வது இயற்கை தன் நிலையில் சரியாக நிற்கிறது என்ற அறிவியல் கண்ணோட்டம் கொண்டு ஆலயத்தின் சிறப்பை விளக்குகிறார் ஜெயசந்திரன். அவரது நம்பர் 9790333377.
மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஆலயத்தை புன நிர்மாணம் செய்து இருக்கிறார். ஈசன் மேல் கொண்ட பக்தி அவர் பேச்சில் வழிகிறது. என்னால் ஆன நிதியுதவி செய்து விட்டு திரு நாரையூர் புறப்பட்டேன்.

திரு நாரையூர் பற்றி ஏற்கனவே தனியாக தனி பதிவு இட்டு உள்ளேன்.








Tuesday, October 14, 2014

Tamil Hindu இதழ் எப்போதும் இந்தத் தேசத்தின் மனநிலைக்கு எதிராகவே இருக்கும்

Tamil Hindu இதழ் எப்போதும் இந்தத் தேசத்தின் மனநிலைக்கு எதிராகவே இருக்கும்.
காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டும் , அடித்து விரட்ட பட்டும் காஷ்மீரில் இருந்து வெளியேற்ற பட்டார்கள் என்பது அழுத்தமான வரலாறு. Tamil Hindu அதை குறிப்பிடும் போது எப்படி குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்று கவனியுங்கள். "1990-ல் வெளியேற்றப் பட்டதாகக் "கருதப்படும்", அதாவது அப்படி ஒரு பொதுவான கருத்து உள்ளது என்று சித்தரித்து, வரலாறை மறைக்க முயல்கிறார்கள். கருதப்படும் என்று சொல்லி நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்து கிறார்கள்
அடுத்து "ஆசாத் காஷ்மீ ரில் தான் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என்று பல ஆதாரத்துடன் , நமது தேசமும், பல உலக நாடுகளின் அமைப்புகளும் சொன்ன பிறகும், அதை பற்றி இவர்கள் குறிப்பிடுவது "பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் "கூறப்படுகிறது".
கூறப்படுகிறது என்று சொல்வதன் மூலம் , நம் தேசம் வைக்கும் குற்றசாட்டை இவர்கள் பலவீன படுத்து முயல்கிறார்கள்.
பொதுவாக பார்க்கும் போது , மிக சாதரணமாக தெரியும். ஆனால் தமிழ் மட்டும் வார்த்தைகளின் வீரியத்தை தாங்கி வரும். இங்கே இவர்கள் சாதாரணமான வார்த்தைகளை அசாதாரணமான சம்பவங்களுக்கு வைத்து துன்பியல் நிகழ்வை துச்சமாக நம்மை எண்ண வைக்கிறார்கள்
இந்த பத்திரிகையும் இந்த தேசத்தில் இருக்கிறது என்பது நமது தலைஎழுத்து.
----------------------------------------------------------------------
தமிழ்ஹிண்டுவில் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் பற்றி 
இத்துடன் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 1990-ல் வெளியேற்றப் பட்டதாகக் "கருதப்படும்" அதன் பூர்வ குடிகளான காஷ்மீரப் பண்டிட்களை மீண்டும் அங்கு குடியேற்ற மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரலாறு
ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதி யில் அமைந்துள்ள பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
முசாபராபாத்தை தலைநகராக கொண்ட இந்தப் பகுதியில் நமது நாட்டின் சட்டமன்றத் தொகுதி அளவில் 49 தொகுதிகள் அமைந் துள்ளன. இதன்மூலமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இங்கு தனியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இருப்பினும் அவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் (சுதந்திரம் பெற்ற காஷ்மீர்)’ என அழைக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் "கூறப்படுகிறது"

பைபிளையும், குரானையும் மறுத்து விட்டு ஒரு ஹிந்துவால் நட்பாய் இருக்க முடியமா?

இப்போதாவது முழித்து கொண்ட மத்திய அரசு. NGO-களின் நடவடிக்கைகள் சந்தேகபடும் படி இருந்தால் அதை கண்காணிப்போம் என்று சொல்வது எந்த முறையில் தவறு இங்கே? ஏன் ஊடங்களில் அதை சிறுபான்மையர்களுக்கு எதிரான செயலாக மிகை படுத்துகிறார்கள்.
உண்மை எனில் , இங்கே பெருமளவு மதம்மாற்றவே அதை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத மாற்றிகள் , சுனாமியின் போது எல்லாவற்றையும் இழந்த மக்களிடம் சென்று இயேசுவை விற்பனை செய்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்த மக்களின் ஆன்மாவை விற்க சொல்லி கட்டாய படுத்தினார்கள். மக்கள் மறுத்தார்கள். இது ஏடுகளில் வந்த செய்தி.
கிறிஸ்தவ மத மாற்றிகள் , இந்த தேசத்தின் கட்டமைப்பை குலைக்க முயற்சி செய்கிறார்கள். நாகலாந்து , மற்றும் மிசரோமில் உள்ள யுத்த குழுக்களின் பின் கிறிஸ்தவ அமைப்புகள உள்ளன என்று மத்திய உளவு அமைப்பு பல முறை குற்றம் சாட்டி உள்ளது. முக்கியமாக இந்த யுத்த குழுக்கள் தனி நாடு கேட்கிறார்கள். காஷ்மீரில் தனி நாடு கேட்கும் யுத்த குழுக்கள் பின் இஸ்லாம் அமைப்புகள் உள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை.
இங்கே எந்த ஹிந்து அமைப்பாவது தனி நாடு கேட்டு போராடுகிறதா?
வல்லமை உள்ள எங்கள் இந்திய பேரரசை உடைக்கும் , உளியாகவே இந்த NGO களின் நடவடிக்கைகள் உள்ளன. அதற்கு மதத்தை கொண்டு தங்கள் உளியை தட்டுகிறார்கள்.
எப்படியாவது இந்த தேசத்தை கிறிஸ்தவ பெரும்பான்மை உள்ள நாடக மாற்ற முயலும் கிருஸ்தவ மத மாற்றிகள், இஸ்லாம பெரும்பான்மை உள்ள நாடாக மாற்ற முயலும் இஸ்லாம் அமைப்புகள், இவர்கள் இடையே சிக்கி கொண்ட எங்கள் ஹிந்து மக்கள்.
இங்கே சில ஹிந்து மக்கள் எல்லாரும் கெட்டவர்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள். உண்மை, யாருமே இங்கே கெட்டவர்கள் இல்லை. மதம் என்று வரும் போது அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் , மௌனம் ஆக இருப்பார்கள் என்பதே எங்கள் குற்றசாட்டு
இந்தியா வில் ஹிந்து மதத்தை தவிர வேறு எந்த மதமும் நாத்திகத்தை அனுமதிபதில்லை.
ஆனால் அடுத்த மதத்தை இழிவு படுத்துகிறோம், அவர்களின் நம்பிக்கை மேல் கல் எறிகிறோம் , என்ற சுய உணர்வு இன்றி வார்த்தைகளை இறைக்கிறார்கள். எங்கே இருந்து இந்த ஊக்கத்தை பெறுகிறார்கள் ?
ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ பள்ளி கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு எதை முக்கியமாக கற்று தருகிறார்கள். நம்பிக்கை . எதன் மீது நம்பிக்கை, அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை. தவறு இல்லை. கண்டிப்பாக தேவை அது.
ஆனால் இந்த தேசத்தில் நடைபெற்ற எந்த அற்புதங்களை பற்றியும், 63 நாயன்மார்களையும், 63 ஆழ்வார்களையும் , 18 சித்தர்களின் சித்துகளையும் பற்றியும் அந்த குழந்தைகளிடம் அறிமுகபடுத்துவதில்லை.
அவர்களை பொறுத்த மட்டில் , முமகதுவும் , ஏசுவும் மட்டும் அற்புதங்களுக்கு சொந்தகாரர்கள். அற்புதங்கள் அரபு நாட்டில் நடந்தால் நம்புவர்கள் , இல்லை ஜெருசலமில் நடந்தால் நம்புவர்கள். ஆனால் சொந்த நாட்டில் நடந்தால் கதை என்பார்கள்.
இதில் அதி பயங்கரமானது,ஒன்று பட்ட இந்தியா என்ற சிதத்தாந்ததின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்ற ஐயப்பாடு எழுவதை நம்மால் தவிர்க்க முடியாது.
நம் ஹிந்து மக்களிடம் வந்து ராமாயணமும் , மகாபாரதமும் கதை என்று பேசும் அளவுக்கு அவர்கள் மதி மயங்கி இருப்பார்கள். அயல் நாட்டு ஆண்டவனை நம்பவது தவறு இல்லை. ஆனால் அந்த நம்பிக்கையின் காரணமாக சொந்த நாட்டையும் அதன் பழம்பெரும் நம்பிக்கையையும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.
ஜெயலலிதா கோவிலுக்கு சென்றால் குற்றம் என்று கொடி பிடிப்போரும் , குஜராத்தில் சிறுபான்மை மக்கள் தாக்கபடுவுதாக அழுவோரும், மிஸ்ரோம், நாகலாந்து மற்றும் காஷ்மீரில் சிறுபான்மை ஆக்கப்பட்ட ஹிந்து மக்கள் தாக்க படுவதை மட்டும் பேச மறுப்பது ஏனோ?
இங்கே ஹிந்து மதத்தின் புனித நூல்களை மறுத்து விட்டு, ஒரு இஸ்லாமியரும் ஒரு கிருஸ்தவரும் , ஒரு ஹிந்துவிடம் நட்பாய் இருக்க முடியும். ஆனால் பைபிளையும், குரானையும் மறுத்து விட்டு ஒரு ஹிந்துவால் நட்பாய் அவர்களிடம் இருக்க முடியாது.
மதமாற்றம் இந்த தேசத்தின் ஒருமைபாட்டை கண்டிப்பாக கலைத்து விடும். அதை தடுக்க வேண்டும். அதற்கு NGOகளின் பணம் வரும் வழியை அடைக்க வேண்டும். இன்று நல்லது நடந்து உள்ளது. இந்த அரசாங்கம் கண்டிப்பாக செய்யும்.
செய்ய தவறினால இந்த தேசம் மத மாற்றம் என்ற கடலில் கரைந்து விடும்.
பொட்டும் பூவும் இல்லாத கலாசாரத்திற்கும் , கருப்பு துணியும், பசு மாட்டை வெட்டி உணவருந்தும் கலாசாரத்திற்கும் நம் உட்பட வேண்டும். மக்கள் யோசிக்க வேண்டும்.

இஸ்லாம் மதத்தை பற்றி எழுத பயமா??

என் நண்பர் ஒருவர், எப்போதும் கிறிஸ்தவத்தை பற்றி எழுதுகிறாய் , ஏன் இஸ்லாம் மதத்தை பற்றி எழுத பயமா என்று கேட்டார்.
பொதுவான ஒரு சமூக தளத்தில் இயங்கும் போது, நமது கருத்துக்கள் எப்படி எடுத்து கொள்ளப்படும் என்ற பயம் உள்ளது.
கிறிஸ்தவம் என் வீடு தேடி வருகிறது,கதவை தட்டி துண்டு காகிதங்களை கொடுக்கிறது. எம் மக்களை இடை விடாமல் துரத்துகிறது. எங்கள் குழந்தைகளிடம் விஷத்தை விதைக்கிறது. வீதி தோறும் போஸ்டர் அடித்து ஒட்டி தன்னை ஒரு விளம்பர பொருளாக அறிவிக்கிறது.
எனவே அது எங்கள் தவறு அல்ல. என்னை தேடி வருவதால் , என்னுள் எழும் கேள்விகளை பதிவுகின்றேன். அது கிறிஸ்தவத் மத மாற்றிகளின் தவறு , இவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் தேவாலயங்களின் தவறு அது.
இஸ்லாம் இவ்வாறு வருவதில்லை, என் வீட்டு கதவை தட்டுவதில்லை.ஆனால் இந்த தேசத்தின் வரலாற்று பக்கங்களை ஆதரமாக கொண்டால், அதன் வருகை கண்டிப்பாக நிகழும். கதவை தட்டுவதற்கு பதில் அது உடைக்க கூட செய்யும். இன்று இல்லை என்றாலும் ஏதாவது ஒரு தளத்தில் நாம் இஸ்லாமை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
நம் கண் முன் எதிரே இருப்பவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. இஸ்லாம் எங்கள் நேர் முன்னே உள்ளது.
நம் பின்னே நிற்பவர்களை பற்றி தான் கவலை கொள்ள வேண்டும். இங்கே கிறிஸ்தவம் பின்னே நிற்கிறது.
எல்லா தேசத்திலும் , எதிரே நின்ற கிறிஸ்தவம் , இந்தியாவில் மட்டும் கிறிஸ்தவ மத மாற்றிகளால் பின்னே போய் நின்றது.
ஏன் என்றால் ஹிந்து மதம் எப்பொழுதும் துணிந்தே நிற்கும் . இன்னும் இலட்சம் வருடங்கள் போரிட்டாலும் இந்தியாவில் இருந்து ஹிந்து மதத்தை அழிக்க முடியாது. இந்தியாவில் பிறந்தாலும் ,புத்த மதத்தால் ஹிந்து மதத்தை விழுங்க முடியவில்லை. எப்படி கடலில் எல்லா ஆறுகளும் கரைந்து விடுமோ அது போல, புத்த மதம் ஹிந்து மஹா சமுத்தரத்தில் கரைந்து போனது.
இதை இஸ்லாதை விட கிறிஸ்தவமும், அதன் மத மாற்றிகளும் நன்றாக புரிந்து கொண்டது.
எதிர்த்து நின்றால் எமனாக காட்சி தந்த ஹிந்து மதம், தோழமை கொண்டால் ஒரு குழந்தை மனதோடு தோழனாகும்.
அதனால் எதிர்ப்பதை கை விட்டு, உறவாடி கெடுத்தார்கள்.
நம் வரலாற்றை இருட்டிப்பு செய்தார்கள். கிறிஸ்தவம் ஆப்ரிக்காவில் செய்த கொடுமைகளையும், உலகு எங்கும் இருந்த பூர்வ குடி மக்களை அழித்த செயல்களையும் , மிக திறமையாக இந்திய மக்களின் காதில் விழாதவாறு சில வருடங்கள் முன்பு வரை மறைத்தார்கள்.
நடிகர்களை கூட்டி , "பார் இவர் இயேசுவை ஏற்று கொண்டு விட்டார்" என்று விளமபர படுத்தினார்கள். ஒருவர் இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் ஹிந்து மதத்தின் சாதி குறியீடுகளை எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை.
ஆனால் கிறிஸ்தவ மத மாற்றிகள் எப்படியாவது கிறிஸ்தவத்தை புகுத்த வேண்டும் என்ற காரணத்தினால் இறைமகனரின் இறை வார்த்தையை புறக்கணித்து சாதி அடையாளங்களை கிறிஸ்தவத்தில் அனுமதித்தனர்.
ஒரே தெய்வம் இயேசு , மேரி மாத உடனும் , அந்தோனியார் உடனும் தனது கடவுள் இடத்தை பகிர்ந்தார். கிறிஸ்தவ மத மாற்றிகள் அதையும் அனுமதித்தனர். இஸ்லாம் இது மாதிரி அனுமதிபதில்லை
.
கிறிஸ்தவ மத மாற்றிகள், மேரி மாதாவை தான் ஹிந்துக்கள் மாரி அம்மன் என்று வழிபட்டனர் என்று கதை சொன்னார்கள். ஏசுவிற்கு முற்பட்ட பரசுராமர் காலத்தில் தான் மாரியம்மன் வழிபாடு தோன்றியது என்ற வரலாறை ஹிந்து மக்கள் , தங்கள் புனித நூல்களில் இருந்து எடுத்து காட்டியவுடன் , ஹிந்து மக்களின் புனித நூல்களை கதை என்றனர். அப்பொழுது உங்கள் பைபிளும் கதையா என்று எம் மக்கள் கேட்டவுடன் , சிறுபான்மை அஸ்திரத்தை தங்கள் கையில் எடுத்து, எங்களை ஹிந்து மக்கள் இழிவு படுத்துகின்றனர் என்று ஊளையிட்டனர்.
கிறிஸ்தவ மத மாற்றிகள், ஹிந்து மக்களின் கடவுள்கள் வெளி தேசத்து மக்களின் கதைகளில் இருந்து உருவாக்கப்பட்டது என்று கதை சொன்னார்கள். எங்கள் மக்கள், ஏசுவிற்கு முற்பட்ட கிருஷ்ணரக்கும் , ஏசுவிற்கும் உள்ள பல ஒற்றுமைகளை சுட்டி காட்டி, உங்கள் இயேசுவின் கதை, எங்கள் கிருஷ்ணரிடம் இருந்து எடுக்கப்பட்டது என்று கேட்ட போது, கிறிஸ்தவ மத மாற்றிகள் கோபம் கொண்டனர்.
கிறிஸ்தவ மத மாற்றிகள், பைபிளில் சொல்ல பட்ட நகரம், இன்னும் உள்ளது என்று வரலாற்று ஆதரமாக காட்டும் போது ஹிந்துக்கள் கண்ணை மூடி கொண்டு ஒத்து கொள்ள வேண்டும்?
ஆனால் மஹா பாரத போரில் , பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட தமிழகத்து பாண்டிய மண்ணின் பெயர் குறிப்பிடபட்டுள்ளதை சுட்டி காட்டி, தமிழரின் வரலாற்று தொன்மையையும் , ஹிந்து மதத்தின் வரலாற்று தொன்மையையும் நாம் ஆதராமாக சொன்னால் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள்.
இந்த தேசம் எதோ கிறிஸ்தவம் வந்த பிறகு தான் முன்னேறியதாக கதையை பரப்புகிறார்கள்
மேற்கு நாட்டான் , விண்வெளி பயணம் மேற் கொண்ட பிறகே, நவகிரக கோள்களை பற்றி அறிந்தான். ஆனால் எங்கள் ஹிந்து மதம், நவக்கிரகங்கள் பற்றி மிக சரியாக எல்லா கோவில்களிலும் அமைத்து ,எல்லா கிரகத்திற்கும் மிக சரியான நிறத்தை சொன்னவர்கள்.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் எங்கள் மதத்தின் புனித நூல்களை , கதையாக்க முயன்றால், நாங்களும் உங்கள் பைபிளை கதையாகவே கருதுவோம்.
மீண்டும் சொல்கிறேன், நான் கிறிஸ்தவத்தை நோக்கி போக வில்லை, அது என்னை தேடி ஒரு குள்ள நரி போல , கிறிஸ்தவ மத மாற்றிகளால் வருகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை, இந்த கிறிஸ்தவ மத மாற்றிகள் பண்ணும் அட்டகாசம் இருக்கிறதே.
எனது ஷ் ஸ்டாண்டில் வந்து இயேசுவின் படம் அச்சிட்ட , துண்டு காகிதங்களை வைத்து விட்டு போகிறார்கள். கடவுளே, ஆண்டு காலண்டரில் இறைவன் படம் இருந்தால் , அந்த ஆண்டு முடிந்தவுடன் , அதைத் எடுத்து போட மனமில்லாமல், பாதுகாப்பாக வைக்கும் கலாச்சாரம் நம்முடையது.
மிதி அடிகள் வைக்கும் இடத்தில, மத மாற்றதிற்கான துண்டு பிரசாரமும், அதில் இறைமகனரின் படம், எப்படி இருக்கும் நமக்கு. பதறி போகிறது மனது.
கிறிஸ்தவ மத மாற்றிகளுக்கே , இயேசு கடவுளா என்று சந்தேகம் உள்ளது, அதனால் தான் எப்போதும் இயேசு கடவுள், கடவுள், என்று போஸ்டரிலும் , டிவியிலும் திரும்ப திரும்ப சொல்ல்கிறார்கள்.
எங்கள் பாரத தேசம். பல இறை அவதாரங்களை ஈன்ற தேசம், இன்னும் நிறைய வரும். இறைவனுக்கு பிடித்த தேசம் இது. ஜெருசலமில் நடந்ததும் ஒரு அவதாரமாக இருக்கலாம்.
ஒரு அவதாரத்திற்கு இந்த கிருஸ்தவ மத மாற்றிகள் இவ்வளவு அலப்பறை செய்கிறார்கள் என்றால், நாங்கள் எவ்வளவு செய்ய வேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி உள்ளது,
"நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும்".
நிறை குடமாய் நின்ற இறைமகனரை இங்கே குறை குடமாய் மாற்றியது யார்?

மொத்தத்தில் மதத்தின் பெயரால் தமிழை அழிக்க போகிறார்கள்.

அடுத்த மத மாற்ற திட்டத்திற்கு அடி போட்டு விட்டார்கள். எனது உறவுகள் இருந்த ஊர் இது. என்னுடைய நினைவுக்கு எட்டிய வரையில் B பள்ளிபட்டி என்றே அழைக்கப்பட்டது. எங்கே இருந்து "லூர்துபுரம்" வந்தது?. தர்மபுரி மக்களே உஷாராக இருங்கள். இப்பொழுது "பள்ளிபட்டி லூர்துபுரம்" என்ற ஊர் , இன்னும் சற்று காலத்தில் பள்ளிபட்டி மறைந்து போய் வெறும் "லூர்துபுரம்" என்றே அழைக்கப்பட போகிறது.
இந்த pdf யை பாருங்கள், நான் தேடிய வரை "B. பள்ளிபட்டி லூர்துபுரம்"என்று அரசால் எங்குமே குறிபிட படவில்லை.

இதுதான் இவர்களின் திட்டம், தாங்கள் அந்த பகுதியில் சிறுபான்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த ஊரின் ஆதி பெயரோடு தங்கள் கிறிஸ்தவத்தின் western பெயரை இணைத்து விடுவார்கள். தங்கள் மக்களிடம் அப்படியே குறிபிட்ட சொல்வார்கள். எப்போது தாங்கள் அங்கே பெரும்பான்மை அடைகிறார்களோ , அப்போது அந்த ஊரின் இயல்பான ஆதி தமிழ் பெயரை அழித்து விட்டு, கிறிஸ்தவத்தின் இருப்பை குறிக்கும் வெஸ்டேர்ன் பெயரை வைத்து விடுவுர்கள்.
இப்படியாக உருவாக்கி , இன்னும் பத்து தலைமுறை கழித்து பார்த்தால், இங்கே எல்லா ஊர்களும் western பெயரோடு இருக்கும். பிறகு என்ன கிறிஸ்தவம் தான் இந்த தேசத்தின் ஆதி மதம் என்றும் சொல்ல கூடும். அதற்கு ஆதாரமாக ஊரின் பெயரையும், தங்கள் மக்களின் பெயரையும் காட்டுவார்கள். எல்லாரும் அப்போது பிரிட்டோ, டேவிட், ஜான், என்ற பெயரில் இருப்பார்கள். ஒரு தமிழ் பெயரும் இருக்காது.
புதிதாக ஒரு இடத்தை உருவாக்கி எந்த பெயரை வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கு எந்த வித வருத்தமும் இல்லை. அதற்கு western பெயர் தான் வைப்போம் என்றால் உங்கள் தமிழ் பற்று கண்டு நாங்கள் வேதனை தான் கொள்ள முடியம்.
ஆனால் ஏற்கனவே காலம் காலமாக தமிழ் பெயரை தாங்கிய ஊர்களை மாற்ற நினைப்பது கண்டிக்க தக்கது.
எந்த தமிழ் அமைப்புகளும் இதை பற்றி பேச பயபடுகின்றன. தமிழனின் கலாசார மிச்சங்களை தாங்கி நிற்பதில் ஒரு ஊரின் பெயர்கள் மிக பெரிய பங்களிப்பை செய்கின்றன. தமிழரின் வரலாற்று தகவல்களை தேடும்போது , ஊரின் பெயர்கள் உதவி செய்கின்றன. அந்த ஊரின் பெயரை அழிக்கும் போது, அந்த ஊர்க்கும், வரலாற்றுக்கும் தொடர்பும் இயல்பாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
மொத்தத்தில் மதத்தின் பெயரால் தமிழை அழிக்க போகிறார்கள். அதற்கு முதல் படி தமிழ் பெயரை தாங்கிய ஊர்கள் . நாமும் சிறுபான்மையிரின் உரிமை என்ற பெயரில் அதை மௌனமாக ஏற்றுக் கொள்ள போகிறோம்.
அது மட்டும் அல்ல, பல அழகிய தமிழ் பெயர்கள் சூடிய ஊர்கள் இனி western பெயரில் திகழ போகும் அபாயமும் உள்ளது. தமிழ் காலசாரம் , பண்பாடும், இனி மெல்ல சாக இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க போகிறது.
குறிப்பு: மேரி மாத கண் திறந்தது என்பது அவர்கள் நம்பிக்கை!! எனக்கு அதை பற்றி எந்த முரண்பாடும் இல்லை.

50 வருடங்களில் இந்தியா என்ற தேசம் இருக்காது?

சில சமயம் சில பேரின் பேச்சு வேதனையை கொடுக்கிறது. எனது நண்பர்கள் சிலர், இன்னும் 50 வருடங்களில் இந்தியா என்ற தேசம் இருக்காது. பல கூறுகளாக சிதறிப் போகும் என்ற கருத்தை சொல்கின்றனர். இந்த தேசம் என்ன விதமான அவநம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் சொந்த தேசம் சிதறிப் போகும் என்பது எந்த குடிமகனுக்கும் வலியை உருவாக்கும் செய்தி. இந்தியா என்ற உருவமைப்பின் மீது அவர்கள் நம்பிக்கை அற்று இருப்பதாக எனக்குப் படுகிறது. எந்த வித சலனம் இன்றி அவர்கள் சொல்லும் போது, உள்ளம் உடைந்து போனது.
இந்தியா உடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுகிறார்களா அல்லது, யதார்தமாக உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறர்களா.
அறிய முடிய வில்லை என்னால்.
நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது, எனது சமூகவியல் ஆசிரியர் இதே மாதிரியான கருத்தை எடுத்து உரைத்தார். அதை பெருமையாக எனது தந்தையிடம் சொல்லிய போது கடும்கோபம் கொண்டார். நமது வீடு சிதறி போகும் நீ சொல்வாயானால் , நீ எப்படி எனக்கு நல்ல மகனாக முடியம் என்றார். புத்தியில் அப்பொழுது தான் உறைத்தது.
சொந்த தேசம் சிதறி போகும் என்று நான் சொன்னால், நான் எப்படி நல்ல குடிமகனாக இருக்க முடியும்.
இணைத்தது வேண்டுமானால் ஆங்கிலயேனாக இருக்கலாம். இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம். சுதந்திரம் அடைந்த போது 90 சதவிதம் பேர் இந்த தேசத்தினுள் அங்கம் ஆகி. இந்தியா என்ற வடிவம் எடுத்தனர். மதத்தின் பெயரால் மகுடி ஊதியவர்கள் மட்டுமே பாகிஸ்தான் என்று பிரிந்து நின்றனர்.
வெள்ளையனை எதிர்த்து போராடிய நமது சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த தேசத்தின் ஒவ்வரு மண்ணிலும் இருந்து உதித்தனர். அத்ததைய வரலாறு உங்கள் கண்ணில் பட வில்லையா. வட நாட்டில் உதித்தாலும் , தென்னகத்தின் வீடுகள் தோறும் தங்கள் பிள்ளைகளை பகத்சிங் என்று சொல்லி உரம் ஈட்டிய நம் முன்னோர்கள் பற்றி அறிந்து உள்ளிர்களா? வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் , இந்த மண்ணின் மைந்தர்கள் மறைந்து உள்ளனர். இதில் யாரை நாங்கள் பிரித்து படிப்பது.
காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த வரை, தேசியம் என்ற சொல்லை எப்பொழுதும் முன் எடுத்து , எல்லா மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்தார். நல்ல தலைவனை தோற்கடித்து , நடிகர்களை எப்போது நாம் கொண்டாட ஆரம்பித்தாமோ ,அன்றே தேசியம் என்று சொல் வலுவிழந்தது.
அது தேசத்தின் குற்றமா?. இல்லை நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்காமல் போன மக்களின் குற்றம்.
அதற்கு பிரிவு தான் பரிகாரம் என்பதா. அபத்தமாக இருக்கிறது.
தமிழ் நாட்டு நச்சு சக்திகளாக விளங்கும் திராவிட கட்சிகள் முன் எடுத்து சென்ற விஷயம்தான் நாட்டை பிரிப்பது. அவர்களை போய் நாம் பின்பற்றலாமா.
உண்மையில் இவர்களின் அடுத்த தலைமுறை பற்றி கவலை எழுகிறது. இந்த சிந்தனையை அடுத்து தலைமுறைக்கும் அவர்கள் எடுத்து சென்றால் , ஒன்றுபட்ட இந்தியா என்ற பொருள் மீது அவர்களுக்கு என்ன விதமான அர்த்தம் கொள்வார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வல்லரசு ஆகி வாழும் நாட்களில் இவர்கள் வழி தவறி போய் விடுவார்களோ என்ற எண்ணம் எழுகிறது?
தேசப்பற்று என்பது நம் ஆத்மார்த்த ஆன்மாவை தட்டி எழுப்புவது. அறியாமல் தயவு செய்து பேசாதிர்கள்.
இந்த தேசத்தின் வரலாறை முழுதாக அறிந்து கொள்ளுங்கள். வெளி நாட்டுகாரன் இந்திய பிரிந்து போகும் என்று சொன்னால் , அதை மறுதலித்து , பிரியாமல் இருப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.
இங்கே எல்லா விதமான எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கிறது. கசப்பு உணர்வை களைய முயற்சி செய்யுங்கள். நீங்களும் இந்த பரந்த இந்திய பேரரசின் அங்கம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்!!
நமது பாரத தாய் ஏற்கனவே நொடிந்து போய் நிற்கின்றாள்.
அவளை ஒன்றாக கூடி, எங்கள் கைகளை இணைத்து கயிறாக்கி ,வெற்றி மங்கையாக்கி தேரில் ஏற்றி பவனி வர முயறச்சிகின்றோம்!!
உங்கள் கைகளை நீங்கள் தர விரும்ப வில்லை என்றால் , கவலை இல்லை.
ஆனால் அவள் தேரை இழுக்க, இணைந்து இருக்கும் எங்கள் கைகளை நீங்கள் வெட்ட முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் ?

கன்னியாகுமரியில் மட்டும் காங்கிரஸ் லட்சம் ஓட்டுக்களை பெற்றது எப்படி?

அன்பர் ஒருவர், நீங்கள் சுட்டிக் காட்டிய மாதிரி, கன்னியாகுமரியில் மட்டும் காங்கிரஸ் லட்சம் ஓட்டுக்களை பெற்றது எப்படி?. இது எனக்கு மட்டும் அல்ல, தமிழ் நாட்டில் பல பேருக்கு தெரியும். கூப்பிடும் தூரத்தில் கடல். கடலில் தினமும் இலங்கையால் தாக்கப்படும் மீனவர்கள் ,சற்று தொலைவில் அமைந்த இலங்கையில் கொல்லப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள். தினமும் பார்க்கும் இலங்கை அகதிகள். எதையுமே கண்டு கொள்ளாத காங்கிரஸ் ,தமிழ் இனத்தை அழித்து நின்ற இலங்கைக்கு ஏவல் வேலை பார்த்தது.
நம்மை வந்து அடையும் முன் கன்னியாகுமரிக்கு தான் நம் தமிழ் இனத்தின் கண்ணிர் வந்து அடையும். உண்மையில் சொல்ல போனால் தமிழ் நாட்டின் மற்ற இடங்களை விட காங்கிரஸ் இங்கே 100 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெற்று இருக்க வேண்டும். ஆனால் 2,44,244 ஓட்டுக்கள் வாங்கி உள்ளது.
எப்படி இது?. தமிழ் நாட்டில் எங்குமே சாத்தியம் அற்ற விஷயம் காங்கிரஸ்க்கு கன்னியாகுமரியில் மட்டும் சாத்தியபட்டு உள்ளது. அதிர்ச்சியாக உள்ளது அல்லவா?. கன்னியாகுமரியில் தமிழர்களே இல்லையா? இல்லை வசந்த குமாரின் வசீகரத்தில் வாக்குகள் விழுந்த விட்டனவா?
இத்தாலியின் இராஜமாத கன்னியாகுமரியில் மட்டும் தனது கருணை பார்வையை காட்டியது ஏன். தமிழ் நாட்டில் எங்குமே மேடை ஏறாத ராஜமாதா கன்னியாகுமரியில் மட்டும் நிலை கொண்டது ஏன்? உண்மையில் மற்ற இடங்களில் கடை போட்டால் , கடையே சூறையாடபடும். ஆனால் கன்னியாகுமரி மட்டும் காங்கிரஸ்க்கு கருணை பார்வை காட்டும். ஏன் எனில் கிறிஸ்தவ மதம் அங்கே கணிசமான செல்வாக்கு பெற்றது. மொத்த கிறிஸ்தவர்களும் காங்கிரஸ்க்கு வாக்கு அளிப்பார்கள் என்ற அபாரமான நம்பிக்கை.
இதை நான் சொல்ல வில்லை. தமிழகத்தின் பிரபலமான இதழ்கள் வெளிப்படையாக எழுதின.எல்லா கருத்துக் கணிப்புகளும் இப்படி எழுதின "இந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவை கிறிஸ்துவ மக்களின் வாக்குகள்தான். அவை பி.ஜே.பி-க்கு பெரும்பாலும் போகாது. அந்த வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்று வசந்தகுமார் துடியாய்த் துடிக்கிறார். இருந்தாலும் போட்டியில் இருக்கும் மற்றக் கட்சிகள் அந்த வாக்குகளைப் பங்குபோடுகின்றன"
எல்லா இடத்திலும் ஆயிரத்தில் தடுமாறிய காங்கிரஸ், இரண்டு லட்சம் ஓட்டுக்கள் எளிதாக பெற்றது கன்னியாகுமரியில் மட்டும். எனக்கு மட்டும் அல்ல, எல்லா தமிழர்களும் எதிர்பார்த்து இருந்தது காங்கிரஸ் டெபாசிட் இழந்த செய்தியை பற்றி. பிஜேபியின் வெற்றி அல்ல. ADMK இல்லை DMK வெற்றி பற்றி இருந்தால் கூட கவலை இல்லை.
தீக்குள் தன்னை சுட்டு, தமிழ் இனத்தின் அழிவை சுட்டிக் காட்டிய தமிழனின் கதறல் கன்னியாகுமரியில் மட்டும் கேட்காமல் போனதற்கான காரணம் என்ன. மதம் அந்த குரலை மறித்து விட்டதா?
துடைத்து எறியப்பட வேண்டிய கட்சிக்கு , தண்ணிர் ஊற்றி முளைக்க வைத்தது மதம் என்றால்,இங்கே தமிழன் என்ற சொல்லப்படுவர்கள் யார்?
தமிழ் கொடி பிடித்த கட்சிகள் , கன்னியாகுமரியில் காங்கிரஸ் பெற்ற இரண்டு லட்சம் வாக்குகளை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏனோ?. விடை எல்லாருக்கும் தெரியும். நாங்களும் நாகரிகம் கருதி அதை பற்றி பேசுவதில்லை.
இனி பொன் ராதாகிருஷ்ணன் பலத்த விமர்சனத்திற்கு ஆளாவர். இனிமேல் தமிழ் இனம் பற்றி அங்கு கரிசனம் எழும். என்ன செய்தது மத்திய அரசு என்ற கேள்வி வரும்.
மதம் பண்ண துரோகம் மறைக்கப்பட்டு, தமிழ் இனம் பற்றி விசும்பல்கள் கேட்கும் மீண்டும் காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் வரும் வரை!!.
ஏன் எனில் இனி மத்திய அரசு பிஜேபி அரசு அல்லவா.
இனி நடக்க போகும் அந்த நாடகங்களையும் இந்த நாடு பார்க்கும். நம் மீதும் கோபம் கொள்வார்கள். என்ன செய்வது வேறு வழி இல்லை

தொடர்ந்து சூறையாடபட்டு, கொல்லப்படும் சிறு பெண்களின் கற்பு

தொடர்ந்து சூறையாடபட்டு, கொல்லப்படும் சிறு பெண்களின் கற்பு பற்றிய செய்திகளும், தேசத்திற்காக இன்னுயிர் தந்தவர்களின் குடும்பங்கள் இழப்பிடிற்காக அரசு அலுவலங்களில் அலையும் அவல காட்சிகளும் (Times now) , இந்த தேசம் வல்லரசு ஆகும் என்ற கற்பனையை கலைத்து போடுகிறது.
வல்லரசு என்ற வார்த்தையே வார்த்தை ஜாலம் என்று தோன்றுகிறது. வல்லவர்களால் வல்லுறவு செய்யபடும், மங்கையரை மறந்து விட்டு இந்த தேசம் , தன்னை பேரரசு சொல்லுமானால் , மனிதர்கள் பேரில் மிருகங்கள் ஆட்சி செய்யும் தேசம்.
நாட்டிற்காக உயிரை தந்தவர்களை உதறிவிட்டு , நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் தலையில் தூக்கி நாம் கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
படித்த பெண் சூறையாடபட்டாள் பொங்கும் தேசம், படிப்பறிவு இல்லா பெண்கள் சூறையாடபட்டாள், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறது.
கொடி நாள் அன்று ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு, நடிகனின் படத்திற்கு 500 ரூபாய் கொடுத்து படம் பார்க்க செல்லும் நாம் இருக்கும் வரை , இந்த தேசம் வல்லரசு என்ன நல்லரசு என்று கூட உருமாற முடியாது.
இங்கே எது முக்கிய பிரச்சினை என்று நமக்கு புரிய வில்லை.
பெண்கள் உடல் மீது காட்டபடும் பாலியல் வன்முறைகள் மற்றும் உடலை உதிர்த்து உயிரை தந்தவர்களின் உறவுகள் மீது காட்டப்படும் உதாசீனம், இது தொடர்ந்து கொண்டு இருக்கும் என்றால், இந்த தேசம் மண்ணோடு மண்ணாக போகட்டும்!!

பிபிசியின் பொய்!!

உண்மையில் அதிர்ந்து போனேன்,இந்த ஒளிபதிவை கண்ட பிறகு. ஒன்று பிபிசியின் பொய், இரண்டாவது, கலவரத்தால் கொல்லப்பட்ட மக்களின் கண்ணிர் கதைகள். சீக்கியர்களுக்கு எதிரான 1984 வருடம் நடை பெற்ற கலவரத்தின் பின்னணியை அறிய பிபிசியில் பணி புரியும் ஒரு சீக்கிய சமுதாயத்தின் பெண் நிருபர் இந்திய வருகிறார்.
ஒரு பக்கம் சீக்கியர்கள் அனுபவித்த கொடுமையை படம் பிடித்து சொன்னாலும், வழக்கம் போல தனது கீழ்த்தரமான சிந்தனையை பிபிசி இதில் சொல்கிறது. இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது, நமது பிரதமரை சீக்கியர்கள் கொன்று விட்டதாக ஹிந்துக்கள் சொல்லி வெறி ஏற்றுவதாக குறிப்பிடுகிறார்கள். நான் அறிந்த வரை இந்திராகாந்தி எந்த நிலையிலும் ஹிந்து மத பிரதமராக எந்த ஊடங்களிலும் இது வரை குறிப்படபட்டதில்லை.
சாமர்த்தியமாக பிபிசி, இந்த சொல்லை சேர்க்கிறது. முக்கியமான விஷயம், காங்கிரஸின் கொலை தாண்டவத்தை பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்தியாவின் உச்ச நிதிமன்றத்தில் , இந்த கலவரத்தை பற்றி சொல்லும் போது, ஹிந்துக்கள் இந்த கொலையை பண்ணியதாக ஒரு இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் பிபிசி ஹிந்து மதத்தை ஒரு கொலைக்கார மதமாக உருவாக்கி சொல்கிறது.
அடுத்த அபத்தமான விசயம், பொற்கோவில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, அதில் இருந்த தீவிரவாதிகளிடம் இருந்த கோவிலை மீட்டு எடுத்த , நமது ராணுவ தளபதியிடம் ஒரு முட்டாள் தனமான கேள்வியை பிபிசீயின் பெண் நிருபர் முன் வைக்கிறார்.
புனித கோவிலில் தாக்குதல் தொடுப்பது தவறான விசயம் என்றும், அப்பாவிகள் கொல்லபடுவார்கள் என்று தெரிந்து இருந்தும் , தர்மப்படி தவறான விசயத்தை ஏன் செய்திர்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார்..
நமது தளபதி, மிக நிதானமாக , ஆனால் தெளிவான பதிலை சொல்கிறறர். புனித கோவிலுக்குள் AK 47 யையும் , கையெறி குண்டுகளையும் வைத்து இருந்தது எந்த தர்ம படி சரி? சரணடைய மறுத்து முதல் தாக்குதலை தொடுத்தது யார்? முதல் தாக்குதல் , எதிர் தாக்குதலை அதிகபடுத்தி கோவிலினுள் இருந்த அப்பாவிகளின் உயிர்களை உதிர செய்யும் என்றும் அறிந்து இருந்தும், தாக்குதலை தொடரந்தது எதன் அடிப்படையில் என்று எதிர் கேள்வி எழுப்பினார்.
பெண்கள் மன்னிக்கவும். அந்த பிபிசீயின் ........... பெண் நிருபர், நமது தளபதியை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுவதை போல கேள்வியை எழுப்புகிறார்.
கடைசி வரை காங்கிரஸின் கொலைக்கார கைகளை சொல்லாமலே , பிபிசி தன்னை கறைபடுத்திக் கொள்கிறது. தீவிரவாதிகளை , தியாகிகளாக சொல்லாமல் சொல்கிறது
மேற்கு உலகம், காலம் காலமாக, நமது ஆதி மதத்தையும், நமது மக்களையும் இழிவாக சித்தரிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளன.
அவர்கள் மொழி அற்று இருந்த காலத்தில் , நாம் நாடுமைத்து, அதில் சங்கம் அமைத்து , கவிப்பாடி களைத்து இருந்தோம். ஆனால் அவைகள் ஏடுகளுடன் நின்று விட்டன.
நம்மை பற்றி என்ன விதமாக வரலாறு பதிவு செய்கிறது என்பது முக்கியம். வரலாறு தவறி போனால் , நமது எதிர்காலம் இருண்டு போய் விடும்.

கண்ணப்ப நாயனார் வரலாறு எனது நடையில்!!

கண்ணப்ப நாயனார் வரலாறு எப்பொழுதும் என்னை கலவரபடுத்தும்.
நாயன்மார்களில் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் கிடையாது. ஆனால் திண்ணப்பன் கண்ணப்பன் ஆகியது , ஈசனின் மற்றும் ஒரு திருவிளையாடல்.
கண்டதும் காதல் கன்னியரைக் கண்டதும் தோன்றுவுதுண்டு. கடவுளிடம் வருமோ காதல்? ஆம் என்று சொன்ன ஆண்டாள் , மூன்றடி அளந்த பெருமானின் திருவடி அடைந்தாள். மாயவன் மலரவன் ஆகி மங்கையை மயக்கியது வியப்பில்லை. இயற்கையான நிகழ்வு.
ஆனால் இங்கு, பிறந்த நாள் முதல், அடியார்க்கு நல்லானை(ஈசன்) அறியாதவனாக திண்ணப்பன் நமக்கு அறிமுகமாகின்றான். பொன்மேனி உடையவனை அறியாதவனாக பொழுதைக் கழிகின்றான்.
ஆனால் என்றுமே அறிந்திராத மகேசனை , மலை மேல் பார்த்த உடன், பிரமை கொண்டு , உணர்விழந்து போகின்றான். உமையாள் பாகன்(ஈசன்) அவன் உருதி எங்கும் உறைகிறார். சன்னிதி விட்டு வெளியே வந்ததும் சலனப்படும் என்னை எண்ணிப் பார்க்கின்றேன்.
இறை இங்கு உருவசிலை கொண்டு நிற்கிறது. உருவம் கொண்ட சிலை , உயிர் துடிப்பாய் உலவுவது திண்ணப்பனக்கு தெளிவாய் தெரிகிறது. காளத்தியப்பனைக்(ஈசன்) கட்டி தழுவிக் கொள்கின்றான்.
என்ன சொல்லி அழைப்பது அந்த தழுவலை பற்றி.
சேய்யை தழுவும் தாயா?, கணவனை தழுவும் கற்புகரிசியா?, கரையை தழுவும் கடலா?
இறைக்கும் பசிக்கும் என்று எண்ணுகின்றான். என்னே ஒரு எண்ணம்?.
இங்கு இறை சைவமா அசைவமா ? கேள்வி மட்டும் நமக்கு சொந்தம்!!
திண்ணபனக்கு அதை பற்றி தினையளவும் கேள்வி இல்லை. பன்றி கறியை, பக்குவமாய் அறுத்து , சுவையான பாகம் எது என்று ருசி பாத்து , ருசித்த பாகத்தை ஈசன்கு படையல் ஆக்கினான்.
உலகத்திற்கே படி அளப்பவன் ஈசன், ஆனால் ஒருவேளை உணவுக்கு ஈசன் படும் பாட்டை ஒரு கணம் எண்ணி பார்க்கின்றேன் அப்பப்பா!!
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும் , அனைவரும் அமுதும் உண்ண, தான் மட்டும் நஞ்சுண்டு தீரு நீலகண்டன் ஆனதும், பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சாடனர்(ஈசன்) ஆனதும், பிரமனை தண்டித்து கையில் கபாலம் ஏந்தி , அகோர பசி கொண்டு அலைந்து கபாலிஸ்வரர் ஆனதும், என் நினைவில் வந்து நிரடுகிறது.
மீண்டும் எச்சில் பண்டம் ஏழைபாகத்தானின்(ஈசன்) உணவு ஆகிறது. மேலே தொடர்கின்றேன்.
அகத்தை சுத்தமாக்கும், அகிலங்கடந்தான்(ஈசன்) திருமேனி அழுக்காய் இருப்பதாய் எண்ணி திண்ணப்பன் திகைக்கிறான். கையிலோ பன்னிக்கறி, ஆற்றில் நீர் அள்ளி வர பாத்திரம் எதுவுமில்லை. வாயில் நீரை அள்ளுகின்றான் ஆற்றில் இருந்து .
அகிலத்தையே புனிதமாக்கும் கங்கையை தன் சிரசில் சுமப்பவன் , தலை மீது ,தன் உமிழ் நீரை உமிழ்கின்றான்.
உமிழ்நீர் அடல்விடைப்பாகனின்(ஈசன்) அபிஷேக நீர் ஆகுகிறது.
இறைவனை தனித்து உண்ண விட்டு, வெளி நின்று காவல் காக்கின்றான். யார்க்கு யார் காவல்? புரியவில்லை எனக்கு?.
எமனையே சம்காரம் செய்த எரிதழல் மேனியனுக்கு(ஈசன்) எவர் காவல்?. காதல் இங்கு காவலாய் கடமை ஆற்றுகிறது. நிற்க.
தன்னை காக்கும் படி வேண்டி, தன் வேண்டுகோளை நிறைவேற்றி தரும் இறைவனையும், அவன் திருகோவிலுக்கு தீங்கு நிகழும்போதும், அவனை இகழும் போதும், வாய் பொத்தி மௌனம் சாதிக்கும் என் மத மக்களை எண்ணி பார்க்கின்றேன். நன்றி மறந்த மக்கள்.
இன்னும் விழித்து கொள்ளாத என் மக்களை மறந்து விட்டு , திண்ணபனை பின் தொடர்கின்றேன்.
இறைக்கு இதயம் நனைகிறது. காதலை காட்டும் காவலனம் , திண்ணபனிடம் திருவிளையாடலை தொடங்குகின்றான் ஈசன்.
இறை அசைகிறது. திண்ணபன்னின் திடம் கண்டு, இறைக்கு கண்ணில் கண்ணிர் உதிரமாய் பெருகுகிறது. இறைக்கும் வருமோ இரத்தக் கண்ணிர்!!
திகைக்கும் திண்ணப்பன், துடி துடித்துப் போகின்றான். திசை எங்கும் நோக்கின்றான். யார்/ எது செய்தது என்று அலைகின்றான். கோவத்தில் சிவந்த அவன் கண்களில் இருந்து கண்ணிர் கரைகிறது.
பச்சிலை கொண்டு வைத்தியம் செய்கின்றான். ஆனால்
அவன் துடிப்பை கண்டு, இன்னும் இறைக்கு இருமடங்காய் ரத்தம் வழிகிறது. திண்ணப்பன் ஆடிப் போகின்றான்.
எடுத்தான் அம்பை , பெயர்த்தான் தன் ஒரு கண்ணை. வைத்தான் இறை கண்ணில். இறையும் ஆடிப் போனது. கண்ணுக்கு கண்ணா . இது என்ன காதல் , இது என்ன பக்தி. ரத்தம் நிற்கிறது. ஆனந்த கூத்தாடுக்கின்றான் திண்ணப்பன்.
நமக்கோ உள்ளம் உறைகிறது. மேலே படிக்க முடியாமல் கண்ணிர் முட்டுகிறது. இருந்தும் தொடர்கின்றேன்
திண்ணப்பனின் , பெயர்த்து எடுத்த கண்ணில் உதிரம் உமிழ்கிறது. பக்தன் கண்ணில் உதிரம் பெருக , இறை உள்ளுக்குள் உடைகிறது. மீண்டும் மறு கண்ணில் இருந்து ரத்தம் வழிகிறது இறைக்கு.
திண்ணப்பன் தடுமாறுகின்றான். ஆனால் ஆனந்தம் அவனுக்கு , ஏன் எனில் வைத்தியநாதற்கு அவனிடம் வைத்தியம் உள்ளதே. இருக்கும் தன் ஒரு கண்ணையும் இறைவனுக்கு பொருத்தி விடலாம், ஆனால் பெயர்த்த எடுத்த பிறகு , கண் தெரியாமல் போனால், இறைவனுக்கு எவ்வாறு பொருத்தவது. யோசிக்கின்றான் ஒரு நிமிடம்.
மறு நிமிடம் தன் கால் பெருவிரலை எடுத்து , இறையின் ரத்தம் வரும் கண்ணில் வைக்கின்றான் அடையளாதிற்கு . எவர் கடைக்கண் பார்வை இம்மைக்கும் , மறுமைக்கும் நம்மை நற் கதி அடைய செய்யுமோ, அவர் கண்ணில் , திண்ணப்பனின் கால். காதல் கண்ணை மறைப்பது என்பது இதுதானா ? திண்ணப்பன் தன் கண்ணை பெயர்க்க முயல , அதற்கு மேல் பொறுக்க முடியாமல் இறை வெடித்துக் கிளம்புகிறது.
கையை பற்றி, நில்லு கண்ணப்பா என்று இறை சொல்ல, திண்ணப்பன் கண்ணப்பன் ஆகுகின்றான்..
சத்தியமாக இது எவர்க்கும் சாத்தியமில்லை. எத்தனை முறை இதை படித்தாலும், உள்ளம் நடுங்குகிறது. கண்ணப்பனைப் போல் இறைவனை காதலித்தவர் உலகில் உண்டோ?
பார்த்த உடன் காதல் , காதலுடன் சேர்த்த பக்தி வருமோ நமக்கு?. இறையை பார்ப்பதும், அதனை ஆலிங்கனம் செய்வதும், இறை உடனே ஓடி வருவதும் கண்ணபனக்கு மட்டுமே.
கடவுளை காதலிக்க கற்று தருவது இங்கு கண்ணப்பன் மட்டுமே. மகளிர் மேல் எனக்கு இருந்த மயக்கத்தை மாற்றியது கண்ணப்பன் சரித்திரமே.
ஈசன் மேல் நான் கொண்டு இருப்பதாக எண்ணும் பக்தி , சில சமயம் என் தலைக்கு மேல் ஏறும் போது, கண்ணப்பனார் கதை என்னை கலைத்துப் போட்டு விடும்.
கண்ணப்ப நாயனார் காலடி போற்றி !!

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...