Thursday, October 9, 2014

பயம் இல்லை என்று யார் சொன்னது

எனது நண்பர்கள் சிலர், எப்படி பயம் இல்லாமல் கிறிஸ்தவ மத மாற்றிகளை பற்றியும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றியும் பதிவு இடுகின்றாய் என வினவுகின்றனர். பயம் இல்லை என்று யார் சொன்னது. மிக பெரிய உயிர் பயம் உள்ளது. அது மட்டும் அல்ல, இது எனது நட்பு வட்டாரத்திலும் , பணி புரியும் இடங்களிலும், குடும்பத்திலும் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாதா உண்மை.
என்ன செய்வது, இந்த பயத்தை விட, இவர்களை அனுமதித்தால் என் வருங்கால தலைமுறைக்கு இந்த தேசத்தின் எந்த பழம்பெரும் அடையாளங்களையும், கலாசாரத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்ற பயமே அதிகமாக உள்ளது.
என் முன்னோர்கள் பயத்தை கை கொண்டு இருந்தால், இன்று எனது அடையாளம் மாறி போய் இருக்கும். நல்ல வேலை, அப்படி நடக்க வில்லை.
தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் வந்த பிறகும், தன் முதுகில் ஆயிரம் கறைகளுடன் விளங்கிய இந்த மதங்கள், எல்லாவற்றையும் மறைத்து விட்டு, ஆதி மதமான ஹிந்து மதத்தை குறை சொல்லி திரிந்த போது அதிர்ந்து போனேன். சகிப்புத்தன்மை உள்ள என் ஹிந்து மக்கள் , குழம்பி நிற்பதை அறிந்து கொண்டேன். மற்ற மதங்களின் வரலாற்றை சுட்டி காட்ட எண்ணினேன்.
கருத்து ஆழமுள்ள , களத்தை நம்பவதற்கு பதில், சில பேர் வீச்சரிவாள் மேல் உள்ள நம்பிகையை விட்டு கொடுக்க மறுக்கிறார்கள். எனக்கு தெரிந்த வழியில் நான் போராடுகின்றேன். என்னை விட மிக பல மடங்கு , எழுத்து வடிவில் போராடும் பலர் உள்ளனர். எல்லோருக்கும் குடும்பம் உள்ளது. இருந்தும் களத்தில் நிற்கின்றனர்
ஒரு நல்ல விஷயம் இதுவரை, ஒரு 5 அல்லது 6 பேர், மத மாறும் நோக்கத்துடன் தாங்கள் இருந்தாகவும் , எனது சில பதிவுகளையும், நான் பகிர்ந்த மற்ற நண்பர்களின் பதிவுகளையும் , படித்து விட்டு, "இருக்கும் மதமே இன்பமான மதம்" என்று புரிந்து கொண்டதாக சொன்ன போது, எங்கும் நிறையும் இறைக்கு நன்றி சொன்னேன். இது போதும் எனக்கு.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...