"வரலாறு படைத்தது இந்தியா... செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்"
மிக்க மகிழ்ச்சி. இதயம் கனிந்த பாரட்டுகள் இஸ்ரோவிற்கு.. பாரதத்தின் விண்வெளி பயணம், இந்த தேசத்தின் கலாசாரத்தின் ஊடே எப்போதும் பயணித்து வந்து உள்ளது.
நமது விண்வெளி சாஸ்திர ஆரயாச்சியாளர் ஆரியபட்டவின் காலம் ஆகட்டும், மேற்கத்திய நாடுகள், செயற்கைகோள்கள் விட்டு நிரூபிக்கும் முன்னரே, இந்த தேசத்தின் கலாச்சாரம் , ஒன்பது நவ கிரகங்களை மிக சரியாக கணித்து, அதற்கான நிறத்தையும் சொன்னது. நவக்கிர கோவில்கள் மிக சரியான உதாரணம். அந்த கோவில்கள் 800 ஆண்டு பழமையானது என்பதே , நாம் எவ்வளவு விண்வெளியை பற்றிய அறிவியலில் உச்சத்தில் இருந்தோம் என்பதற்கான ஆதாரம்.
அற்புதங்களும், ஆரயாச்சிகளும் , இந்த தேசத்திற்கும் , கலாச்சாரத்திற்கும் புதிதல்ல, அது இந்த தேசத்தின் மக்கள் இடையே , வாழ்வியல் நடை முறையாக நடந்து வந்துள்ளது. வடக்கு நோக்கி தலை வைத்து படுக்காதே ,சொன்னதின் பின், காந்தத்தின் அமைப்பை பற்றி அறிவியல் உண்மை இருந்தது. சூரிய கிரகணதையும் , சந்திர கிரகணத்தையும் ,இந்த தேசமே மிக சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கணித்தது.
ஐரோப்பவிற்கும் , அரபு நாடுக்கும் , அற்புதங்களும், ஆரயாச்சிகளும் அதியசமானவை. ஒரு அற்புதம் நடந்து விட்டாலே , ஊர் கூடி ஒப்பாரி வைக்கும் தேசங்கள் அவை. வீதி வீதியாய் போய் அற்புதங்களை விற்பனை செய்யும் அல்ப கூட்டங்கள் அவை.
நாம் அப்படிப்பட்ட கூட்டம் அல்ல. நாம் வித்தியாசமான கோணம் கொண்டவர்கள். நம்மால் முடியாததை நாம் இன்று சாதிக்க வில்லை, நம்மால் முடியும், என்பதையும் , உலகுக்கு சொல்ல வில்லை.
நமது மக்களுக்கு சொல்லி இருக்கின்றோம்.இது பலம்மிக்க தேசம், ஆன்மிகத்தில் ஆகட்டும், ஆரயாச்சியில் ஆகட்டும், நம் கொடி எப்போதும் உச்சத்தில் பறந்தது என்று. யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று சொல்லி உள்ளோம்.
ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் நேரம் இது
மங்கள்யானை மங்களகரமாக வரவேற்போம்.
No comments:
Post a Comment