கங்கை கொண்ட சோழன்-புத்தகம். ராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரம். கடல் கடந்து கொடி பிடித்த எங்கள் தமிழ் மன்னன் இவன். எங்கே இந்த மன்னனை பற்றி சொன்னால், இவர் சார்ந்து இருந்து ஹிந்து மதத்தை பற்றியும் சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, பரந்த பாரத பேரரசின் , வரலாற்று பக்கங்களில் இருந்து மறைக்கபட்ட மாமன்னர்.
சில திராவிட கழகங்களின் சூழ்ச்சியால் சோழர்கள் தமிழர்கள் இல்லை என்றும் கருத்து பரப்பபட்டது. இங்கே ஏது உயர்வானதாக இருந்ததோ, அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, நாம் கீழாகத்தான் வாழ்ந்தோம் என்று நம் தலைமுறைக்கு அடிமை புத்தியை அறிமுகபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதி தான் சோழர்களை தமிழர்கள் இல்லை என்று சொன்னது.
ஆங்கிலயனும் ,முகமதியரும் வந்த பின்பு தான் நமக்கு நாகரிகம் வந்தது என்று நம் தலைமுறையிடம் நம்ப வைக்க பட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல. நாம் சிறப்பாக இருந்த காலங்கள் உண்டு. எல்லா வர்ணத்தினரும் ஒற்றுமையாக கனிந்த இருந்த நேரங்கள் நம்மிடையே இருந்து உள்ளது. இன்றைய ஓட்டு பதிவு முறை, சோழர்கள் காலத்தின் குடவோலை முறையில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஒன்று. வலிமையுடன் வலம் வந்து
வீற்று இருந்து அரசு புரிந்தவர்கள் நம் மாமன்னர்கள்.
வீற்று இருந்து அரசு புரிந்தவர்கள் நம் மாமன்னர்கள்.
நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், முடிந்த வரை அருகில் உள்ள பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று பாருங்கள். உங்கள் முன்னோர்கள் யார் என்று அறிய நேரிடம். தமிழ் மன்னர்களின் கலாச்சரம் , பேராண்மை அவர்கள் கட்டிய கோவில்களின் கல்வெட்டில் பொதிந்து இருக்கும். நீங்கள் தழைத்து வந்த தமிழ் மண்ணின் தலைமுறையை சொல்லும் அது.
நீங்கள் உங்களின் முன்னோர்களின் புகழை அறிய கூடாது என்ற காரணத்தினால் தான், உங்கள் மதங்கள், எங்கள் கடவுள்களை கல் என்றும், கல்லறையில் உறங்கும் பேய்கள் என்று சொல்லி, உங்களை உங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் வழி மறித்து நிற்கின்றன.
நீங்களும் அதை பற்றி அறியாமல் கோவிலுக்கு வருவதை கொலையாக கருதுகின்றிர்கள். முடிந்த வரை வரலாற்று சரித்திரமவாது வாங்கிப் படியுங்கள். சில கற்பனைகள் கலந்து இருந்தாலும் , சரித்திரத்தின் செய்திகள் தொடர்ந்து அதில் சொல்லப்பட்டு வந்து இருக்கும்..
சோழ பேரரசத்தின் உச்சம் இராஜேந்திரன். தமிழ் கோலட்சிய காலம் அது. படிக்க படிக்க மனம் பரவசம் அடைகிறது ஒரு தமிழ்னாய்.
குறிப்பு. "பொன்னியின் செல்வன்" (கல்கி)படித்து விட்டு, "உடையார்" (பாலகுமாரன்)நாவலையும், "வேங்கையின் மைந்தன்" (அகிலன்)நாவலை படித்து விட்டு , "கங்கை கொண்ட சோழன்" (பாலகுமாரன்) நாவலையும், பிறகு முடிந்தால் "வெற்றி திருநகர்" (அகிலன்)நாவலையும் படியுங்கள்.
No comments:
Post a Comment