பிராமிணர்களை விமர்சித்து எழுத கூடாது என்பது என் கொள்கை அல்ல. இங்கே சாதியை மறுப்பு என்பது எல்லா சாதியையும் மறுப்பது. ஆனால் சாதி மறுப்பு என்று பேசப்படும் போது, பிராமிணர்களை மட்டும் குறி வைத்து தாக்குவதும் , எழுதுவதும் என்பது தான் சாதி மறுப்பு என்ற கொள்கை என்றால் அந்த கூட்டத்தில் சத்தியமாக நான் இல்லை.
எப்படி கிறிஸ்தவத்தை/இஸ்லாத்தை பற்றி விமர்சித்து எழுதும் போது, சில நல்ல கிறிஸ்தவ/இஸ்லாமிய உள்ளங்கள் காயப்படும் என்று மனம் பதறுகிறதோ, அதே மாதிரி தடுமாற்றம் பிராமிணர்கள் பற்றி எழுதும்போது வருகிறது.
ஒரு பிராமிண தங்கையிடம் பேசி கொண்டு இருந்த போது, தான் கிறிஸ்தவ நபர்களுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் சர்ச்சுக்கு செல்வதாக கூறினார். நல்லது உங்கள் கிறிஸ்தவ நண்பர்கள் நமது பெருமாள் கோவிலுக்கு வருகிறார்களா? என்று கேட்டேன்.
பதில் இல்லை. மீண்டும் கேட்டேன். வர மாட்டார்கள் என்றார். ஏன் நீங்கள் மட்டும் போகிறிர்கள் என்றேன். அமைதியாக இருந்தார்.
உங்களை சுட்டி காட்டி, கிறிஸ்தவ மத மாற்றிகள் , சாதாரண மக்களை மாற்றுவார்கள். பாருங்கள்!! பிராமிண பெண்ணே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு எங்கள் சர்சுக்கு வருகிறார் , நீங்கள் ஏன் வர கூடாது என்று மற்றவர்களை பார்த்து கேட்பார்கள் என்று சொன்னேன். அதற்கு ஏன் துணை போகிறிர்கள் என்று கேட்டேன்.
பெருமாள் கோவில் பிரசாதத்தை உங்கள் கிருஸ்த நண்பர்கள் சாப்பிடுவார்களா என்றதற்கு இல்லை என்று சொன்னார். நான் சிரித்தேன்.
உங்களை சுட்டி காட்டி, கிறிஸ்தவ மத மாற்றிகள் , சாதாரண மக்களை மாற்றுவார்கள். பாருங்கள்!! பிராமிண பெண்ணே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு எங்கள் சர்சுக்கு வருகிறார் , நீங்கள் ஏன் வர கூடாது என்று மற்றவர்களை பார்த்து கேட்பார்கள் என்று சொன்னேன். அதற்கு ஏன் துணை போகிறிர்கள் என்று கேட்டேன்.
பெருமாள் கோவில் பிரசாதத்தை உங்கள் கிருஸ்த நண்பர்கள் சாப்பிடுவார்களா என்றதற்கு இல்லை என்று சொன்னார். நான் சிரித்தேன்.
மெல்லிய கோபம் வந்தது அவருக்கு , தொடர்ந்து விவாதத்தில் , கடைசியாக சொன்னார். " எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை" என்று சொன்னார். அமைதியாக எழுந்து வந்து விட்டேன்.
இவரை போன்ற ஆட்கள் ஹிந்து மதத்தின் மிக பெரிய பலவீனம். எந்த இஸ்லாமியரும், எந்த கிறிஸ்தவரும், நமது கோவில் பண்டிகைளின் போது, கொழுக்கட்டை கொடு , சக்கரை பொங்கல் கொடு, திருப்பதி லட்டு கொடு என்று கேட்பதில்லை.
ஆனால் நமது ஹிந்து மக்கள் தான், எப்போதும் மிக இழிவாக, கேக்கையும் , மட்டன் பிரியாணியையும் , சாப்பிட்டே இல்லாதவர்கள் போல், கிறிஸ்தமஸ் கேக் கொடு, ரம்ஜான் பிரியாணி கொடு என்று அலைகிறார்கள்
நானும் கேட்பேன், எந்த கிறிஸ்தவர்/இஸ்லாமியர் நான் கொண்டு வந்த கொழுக்கட்டையையும் , சக்கரை பொங்கலயையும் திருப்பதி லட்டுயையும் , எடுத்து உட் கொள்கிறார்களோ , அவரகளிடம் கிறிஸ்தமஸ் கேக் கொடு, ரம்ஜான் பிரியாணி கொடு என்று கேட்பேன். அப்படி பட்ட சில நல்ல நண்பர்கள் உண்டு.
ஒரு கிறிஸ்தவரும்/இஸ்லாமியரும் நமது கோவில் பிரசாதங்களை உட் கொள்ள மறுப்பதின் பொருள் என்ன வென்றால், நாம் இறை எண்ணும் வணங்கும் விஷயம் அவர்களை பொறுத்தவரை சாத்தான்.சாத்தனுக்கு படைக்கப்பட்ட பொருளை எப்படி உண்பது.
உங்களுக்கு ஆன்ம நம்பிக்கை தரும் ஆண்டவனை , அவர்கள் மனதிற்குள் சாத்தான் என்று பழிப்பார்கள்.
அடுத்தவனின் நம்பிக்கையை இழிவாக எண்ணக்கூடிய இவர்கள் தான் உலகின் "அன்பு மதங்கள்". இப்படித்தான் இவர்கள் உலகை ஏமாற்றி கொண்டு இருகிறார்கள்.
அந்த தங்கையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஹிந்து மதம் தானே பெருமாளை கொண்டாடி வருகிறது. கிருஸ்தவமா கொண்டாடி கொண்டு இருக்கிறது?. இவரின் கிறிஸ்தவ நண்பர்கள் ஏன் பெருமாள் கோவிலுக்கு வருவதில்லை. இவர் வணங்கும் பெருமாள் சாத்தான் என்பது அந்த நண்பர்களின் எண்ணம்.
தனது ஆன்ம நம்பிக்கையை இழிவாக எண்ணும் கூட்டத்துடன், எப்படி இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. சத்தியமாக புரிய வில்லை.
தனது ஆன்ம நம்பிக்கையை இழிவாக எண்ணும் கூட்டத்துடன், எப்படி இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. சத்தியமாக புரிய வில்லை.
இவரை சொல்லி குற்றம் இல்லை, இவரின் பெற்றோர் சகிப்புத்தன்மையின் அளவு என்று சொல்லி கொடுத்து இருக்க வேண்டும். இவர் மெதுவாக ஹிந்து மதத்தை விட்டு விலகுவார் என்று தெரிகிறது. யார் கண்டது விலகாமலும் போகலாம்
.
யாரை நம்பியும் ஹிந்து மதம் இயங்குவது இல்லை. இறை என்ற சொல் இருக்கும் வரை, ஹிந்து மதத்தின் இருப்பானது இருக்கும். ஹிந்து மதம் இறையை இயக்க வில்லை. இறை ஹிந்து மதம் என்ற சொல்லை இயக்குகிறது.
.
யாரை நம்பியும் ஹிந்து மதம் இயங்குவது இல்லை. இறை என்ற சொல் இருக்கும் வரை, ஹிந்து மதத்தின் இருப்பானது இருக்கும். ஹிந்து மதம் இறையை இயக்க வில்லை. இறை ஹிந்து மதம் என்ற சொல்லை இயக்குகிறது.
எப்போது எல்லாம் ஹிந்து மதம் என்ற சொல்லின் அமைப்புக்கு ஊறு நேருகிறதோ அப்போது எல்லாம், இறை இந்த மண்ணில் இறங்கி வந்து இருக்கிறது.
மீண்டும் இறங்கும்!!
இறங்க போகும் இறைக்கு , எனது தலைமுறையில் வரும் குழந்தைகள் துணை நிற்கும். ஹிந்து மதத்தின் கொடி பிடித்து நிற்கும், எதிர்க்கும்.
No comments:
Post a Comment