Tuesday, December 27, 2016

நெருங்கிய என்ற வார்த்தையை நெறித்து போட்டு விட வேண்டும் போல

உதவிகள் எப்போதும் செய்து கொண்டே இருக்க வேண்டும் , மறுக்க மட்டும் கூடாது . நூறு முறை உதவிகள் செய்து இருப்போம் , நினைவில் இருக்காது , ஒரு முறை முடியாது என்று சொல்லி விட்டால் போதும் , அந்த நிமிடத்தில் இருந்து நீங்கள் அவருக்கு வேண்டாதவர் ஆகி விடுவீர்கள். பல முறை உதவி செய்தாலும், ஒரு முறை கூட நன்றி வாயில் இருந்து வராது. நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்த்து உதவி செய்வதில்லை.
ஆனால் பல முறை உதவி செய்தவர் , இந்த முறை மறுக்க காரணம் என்ன என்று பல பேர் யோசிக்காமல், “கேட்டேன் முடியாது” என்று சொல்லி விட்டார் என்று மற்றவரிடம் சொல்லி கொண்டு உள்ளார்கள். நெருங்கிய உறவுகள் என்றாலும் , கல்லூரி, பள்ளி நண்பர்கள் என்றாலும், அலுவலக உறவுகள் என்றாலும் எல்லா இடத்திலும் இதே கதை தான்.
நெருங்கிய என்ற வார்த்தையை நெறித்து போட்டு விட வேண்டும் போல.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...