சோ மறைந்தார்
என் தந்தை ஒரு தீவிரமான துக்ளக் வாசகர்
அம்மாவின் அரசியல் ஆலோசகர் என்று அறியப்பட்டவர். அரசியல் விமர்சகர் .அதையும் தாண்டி நல்ல உள்ளம் படைத்தவர். சினிமா இல்லாமல் ஒரு இதழை நடத்த முடியும் என்ற எடுத்து காட்டிற்கு துக்ளக் வார இதழ். திமுகவிற்கும், அதிமுகவிற்கும் எதிராக பேனாவை பிடித்தவர்.
கலைஞரின் கைது போது , எல்லா பத்திரிக்கையும் கைதை கண்டித்தன. இவர் மட்டும் தான் துணிச்சலாக ,”கைது சரி, செய்த முறை தவறு” என்று எழுதினார். ஜெயாவை எதிர்த்த போது, ஜெயாவல் கடுமையாக சாடப்பட்டார். பின்பு சோவை புரிந்து கொண்டு அவரின் கருத்துகளை ஜெயா ஏற்றார்
விடுதலை புலிகளையும் , தீவிரவாதிகளையும் கடுமையாக எதிர்த்தவர். சில கருத்துகளில் அவருடன் உடன்பட முடிய வில்லை என்னால்.
என் நினைவு சரியாக இருந்தால் இவர் தான் மோடி பிரதமராக வேண்டும் என்று முதன் முதலில் கூறினார். குஜராத்தின் வளர்ச்சி பற்றி தன் இதழில் கட்டுரைகள் வரைந்து ,மோடியை வெளிச்சம் போட்டு காட்டினார். இவர் பிராமிணர் , பிராமணரை தான் ஆதரிப்பார் என்ற கருத்தை பொய்யாக்கி , மோடி பின் நின்றார்.
எங்கே பிராமணன் என்ற கட்டுரை இன்றளவும் எனக்கு பிடித்தமான ஒன்று.
எனக்கு பிராமிணர்கள் மேல் மரியாதை ஏற்பட இவரும் ஒரு காரணம்
பன்முக தன்மை கொண்ட நபரில் இவரும் ஒருவர் . இவர் பேனா தொடாத தேசிய தலைவர்களே இல்லை.
இந்திய தேசத்திற்கு எது உகந்ததோ அதுவே இவருக்கும் உகந்தது.
அரசியல் பற்றிய இவரின் விமர்சனங்கள் மக்களின் விமோசனத்திற்கு தான் வழி வகுத்தது
ஒரு துக்ளக் தர்பார் துயரில் முடிந்தது, கலைந்து போனது !!
No comments:
Post a Comment